எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப். 24 - சட்டசபை தேர்தலைப் போன்று, உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுவர் விளம்பரம் எழுதவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு: 1. எந்த வேட்பாளரும் சாதிமத பிரச்சினை உருவாகும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. 2. வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. 3. அரசு, தனியார் நிலம், கட்டிடம், சுவர்களில் விளம்பரம் செய்யக்கூடாது, சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது. 4. ஒரு கட்சியின் கூட்டம் நடைபெறும் இடத்தின் வழியாக, மற்றொரு கட்சி ஊர்வலம் நடத்தக்கூடாது. 5. வேட்பாளர் முன் அனுமதி பெற்று பிரசாரம் செய்ய வேண்டும். பிரசாரம் செய்வதற்கு செல்லும் இடம் குறித்து முன்னதாகவே முடிவு செய்து அனுமதி பெற வேண்டும். தாமாகவே இந்த முடிவை மாற்றக்கூடாது. 6. ஊர்வலம் பிரசாரத்துக்கு அனுமதி பெற்று செல்லும் இடங்களில் போக்குவரத்து இடையூறு செய்யக்கூடாது. 7. போலீசாரின் அறிவுரைகளையும், உத்தரவுகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 8. கொடி, தோரணங்கள், பேனர்கள், போன்றவற்றை பிரசாரம், ஊர்வலம், பொதுக்கூட்டத்தின் போது மட்டும் அனுமதி பெற்று அமைக்கலாம். தேவையில்லாமல் இவற்றை பயன்படுத்தக்கூடாது. 9. மற்றொரு கட்சி தலைவரையோ, வேட்பாளரையோ அவமதிக்கும் வகையில் கொடும்பாவி எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. 10. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரசார கூட்டம் நடத்தவேண்டும். இதில் தேர்தல் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். 11. அரசு சார்ந்த இடங்களை கட்சி சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது. 12. தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது முதல், அமைச்சர்களோ, அதிகாரிகளோ, அவர்களுடைய பிரதிநிதிகளோ, அரசு உதவிகளையோ, மானியங்களையோ வழங்ககூடாது. 13. உள்ளாட்சி பிரசாரத்துக்கு செல்லும் அமைச்சர்கள் அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. 14. அரசு திட்டங்களை தொடங்குதல், சாலை, குடிnullர் வசதி, தெருவிளக்கு அமைத்தல் போன்ற பணிகளை செய்யக்கூடாது. 15. ஓட்டுப் போட பணம் கொடுப்பது, வாக்காளர்களை திரட்டுவது, ஆள் மாறாட்டம் செய்து ஓட்டுப் போடுவது போன்றவை கடும் குற்றமாக கருதப்படும். 16. ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 17. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 வருடம் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும். 18. வாக்கு சாவடியில் இருந்து 100 அடி தூரத்துக்குள் நின்று ஆதரவு கேட்பதும், வாக்காளர்களை ஓட்டுப்போட வாகனங்களில் அழைத்து செல்வதும் ஊழல் குற்றமாக கருதப்படும். 19. ஓட்டு போடும் வாக்காளர்கள், அனுமதி பெற்ற தேர்தல் ஏஜெண்டுகள், தவிர அரசியல் பிரமுகர்கள் யாரும் ஓட்டுச் சாவடிக்குள் நுழையக்கூடாது. 20. ஓட்டு போடுவதற்கான புகைப்படத்துடன் கூடிய nullத்சிலிப்களை அரசியல் கட்சிகள் கொடுக்ககூடாது. 21. மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் ஊழியர்களே ஒரு வாரத்துக்கு முன்பு வீடு வீடாக சென்று nullத் சிலிப்களை கொடுப்பார்கள். 22. வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.23. தேர்தல் ஆணையத்தின் விதிகளை கடைபிடிக்காத வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும். 24. வாக்காளர் பட்டியலில் பெயர் படம் இருந்தாலும், மத்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள வாக்காளர் அடையாள அட்டை, அல்லது மாநில தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளில் ஒன்றும் இருந்தால் மட்டுமே ஓட்டு போட முடியும்.
இவ்வாறு தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


