எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, - 7 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவே காரணம் என்று மத்திய கணக்கு தணிக்கை குழு வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மத்திய தணிக்கை துறை அதிகாரி வினோத்ராய் வெளியிட்டார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ. ராசா தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தார்.
கடந்த 2008-ம் ஆண்டு இரண்டாம் தலைமுறைக்கான 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டின் போது மிகவும் மலிவான கட்டணத்திற்கு தொலை தொடர்பு கம்பெனிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக ஏற்கனவே இவர் மீது பல புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து ஆய்வு செய்த மத்திய கணக்கு தணிக்கை குழுவும் இந்த ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்று உறுதிப்படுத்தியது.
ஏற்கனவே இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்த மத்திய கணக்கு தணிக்கை குழு பின்னர் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவே தனிப்பட்ட பொறுப்பு வகிக்கிறார் என்று அந்த இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் அளித்த ஆலோசனையையும் மத்திய சட்டத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய நிதி அமைச்சகம் வழங்கிய ஆலோசனைகளையும் தொலைத் தொடர்பு கமிஷனின் பரிந்துரைகளையும் அலட்சியப்படுத்தி விட்டு சில குறிப்பிட்ட தனியார் தொலைதொடர்பு கம்பெனிகளுக்கு குறைந்த கட்டணத்தில் (அடிமாட்டு விலைக்கு) ஆ.ராசா ஒதுக்கீடு செய்திருக்கிறார் என்றும் இந்த இழப்பீட்டுக்கு தனிப்பட்ட முறையில் ராசாவே பொறுப்பு என்றும் மத்திய கணக்கு தணிக்கை குழு தனது இறுதி அறிக்கையில் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது.
இந்த ஒதுக்கீட்டில் ராசா தனிப்பட்ட முறையில் செயல்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்யும் கோப்புகளையும் இந்த இறுதி அறிக்கையில் மத்திய கணக்கு தணிக்கை குழு இணைத்துள்ளது.
இந்த இழப்பீட்டு விவகார விஷயத்தில் மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயையும் இக்குழு விட்டு வைக்கவில்லை. அந்த ஆணையத்தையும் இக்குழு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. தனது பரிந்துரைகள் அலட்சியப்படுத்தப்பட்டோ அல்லது தவறாக பயன்படுத்தப்பட்டோ வருகிறது என்பது தெரிந்தும் கூட டிராய் தனது கைகளை கட்டிக்கொண்டு வெறுமனே வேடிக்கை பார்த்திருக்கிறது என்றும் அந்த இறுதி அறிக்கையில் தணிக்கை குழு குற்றம்சாட்டியுள்ளது.
மொத்தம் வழங்கப்பட்ட 122 புதிய லைசென்சுகளில் 85 லைசென்சுகள் 12 கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி லைசென்ஸ் பெற்ற கம்பெனிகளில் பல கம்பெனிகள் தொலை தொடர்பு துறையின் வரையறுக்கப்பட்ட தகுதிகளைக்கூட பெறவில்லை. ஆனால் அவற்றுக்கும் 2 ஜி லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது என்றும், அந்த இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை 3 விதமான ஆய்வுகளை நடத்தி தணிக்கை குழு மதிப்பீடு செய்துள்ளது.
முதலாவது முறையில் மதிப்பீடு செய்ததில் 122 லைசென்சுகளுக்கு 6.2 மெஹா ஹெர்ட்ஸ் 2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்காக கோரப்பட்ட தொகை ரூ. 65,725 கோடி. ஆனால் தொலை தொடர்பு துறை வசூலித்த தொகை வெறும் ரூ. 9,013 கோடி.
இரண்டாவது முறைப்படி 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கு ஒதுக்கீட்டு ஏலத் தொகைக்கும் 2ஜி ஏலத்தொகைக்கும் உள்ள வித்தியாசம் கண்டறியப்பட்டது. அதன்படி பார்த்தால் 2ஜி ஒதுக்கீட்டிற்கு ரூ. 1,11,511 கோடி வந்திருக்க வேண்டும். ஆனால் தொலை தொடர்பு துறை பெற்றது வெறும் ரூ.9,013 கோடி. இரட்டை தொழில்நுட்ப லைசென்சுக்கு ரூ. 40,526 கோடி வந்திருக்க வேண்டும். ஆனால் இந்த இரட்டை தொழில்நுட்ப ஒதுக்கீட்டிற்கு தொலை தொடர்பு துறைக்கு கிடைத்தது வெறும் ரூ. 3,372 கோடி மட்டுமே.
மேற்கண்ட இரு மதிப்பீட்டு முறைகளின்படி பார்த்தால் அரசு கஜானாவுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1,39,652 கோடி.
மூன்றாவதாக சில கம்பெனிகளுக்கு 6.2 மெஹா ஹெர்ட்ஸ் அலைவரிசைக்கும் மேல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதையும் சேர்த்து மொத்தமாக பார்த்தால் அரசுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ. 1,76,379 கோடி என்று அந்த இறுதி அறிக்கையில் புள்ளி விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 ஜி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட பலவீனமான நடைமுறைகளுக்கு கணக்கு தணிக்கை குழு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையை ராசா எப்படி நடைமுறைக்கு கொண்டு வந்தார் என்றும் கணக்கு தணிக்கை குழு கேள்வி எழுப்பியுள்ளது.
எவ்வளவு ஸ்பெக்ட்ரம் அலை வரிசை கையிருப்பில் உள்ளது. அதற்கு தேவை எவ்வளவு உள்ளது என்பதை கண்டறியாமல் இந்த 2ஜி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் இக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 2 ஜி ஏலம் தொடர்பாக கடந்த 2007 நவம்பர் மாதம் மந்திரி ராசாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த ஒதுக்கீடுகளை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக நடத்த வேண்டும் என்றும் நுழைவுக்கட்டணத்தை மாற்றி அமைக்கும்படியும் பிரதமர் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு ராசா பதில் கடிதம் ஒன்றை பிரதமருக்கு அனுப்பியுள்ளார். அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை போதுமான அளவுக்கு இருக்கிறது என்றும் அதனால் புதிதாக வருபவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யலாம் என்றும் ராசா பதில் கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த ஒதுக்கீடுகள் எல்லாமே சரியான நடைமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக செய்யப்பட்டுள்ளன என்றும் இதற்கெல்லாம் ராசாவே காரணம் என்றும் கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. இந்த அறிக்கை வெளியான பிறகே ராசா பதவி விலகினார். தற்போது அவர் திஹார் சிறையில் உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –10-01-2026
10 Jan 2026 -
த.வெ.க. உடன் கூட்டணியா? ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
10 Jan 2026சென்னை, த.வெ.க. உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
-
அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: மம்தா பானர்ஜி
10 Jan 2026கொல்கத்தா, நிலக்கரி ஊழல் பணம் தொடர்பாக அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப
-
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
10 Jan 2026சென்னை, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி..? பிரேமலதா வைத்த 'சஸ்பென்ஸ்'
10 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் கடலூர் மாநாட்டில் பேசிய பிரேமலதா, "தே.மு.தி.க.
-
நாளை விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி சி-62: திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்
10 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி சி-62 நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் ராக்கெட் மாதிரியை வைத்து திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம் செய்தனர்.
-
குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி, பதாகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
10 Jan 2026சென்னை, குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி மற்றும் பதாகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த தயாரிப்பு நிறுவனம்
10 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளத
-
இமாசல பிரதேச பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர்
10 Jan 2026சிம்லா, இமாசல பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களு
-
வளர்ச்சியடைந்த இந்தியா: மூன்றாயிரம் இளைஞர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்
10 Jan 2026டெல்லி, டெல்லியில் நாளை (திங்கள்கிழமை) அன்று நடைபெறும் விக்சித் பாரத்(வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச்
-
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கேரளா செல்கிறார்
10 Jan 2026கொச்சி, கேரளாவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று செல்கிறார்.
-
போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
10 Jan 2026புதுடெல்லி, போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
-
மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
10 Jan 2026கடலூர், மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை: பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் விரைவில் தமிழகம் வருகிறார்
10 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் மாதம் தமிழகம் வருகிறார்.
-
அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தமா..? நயினார் நாகேந்திரன் விளக்கம்
10 Jan 2026கோவை, அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
3 அம்ரித் பாரத் ரயில்களை தமிழகம்-மேற்குவங்கம் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
10 Jan 2026சென்னை, தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
பியட் காரை ஓட்டி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
10 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பியட் கார் ஓட்டிய வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
விஜய் பிரச்சார பேருந்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை வாகன ஓட்டுனரிடமும் விசாரணை
10 Jan 2026சென்னை, விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். விஜய் பிரச்சார வாகன ஓட்டுனரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
-
நிதிஷ்க்கு பாரத ரத்னா விருது கொடுங்கள்; பிரதமர் மோடிக்கு ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்
10 Jan 2026பாட்னா, நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுத்தியுள்ளது.
-
வார ராசிபலன்
10 Jan 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் அஷ்டமி சப்பரம், சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்தருளிய காட்சி.
- மதுரை செல்லத்தம்மன் உற்சவாரம்பம்.
-
இன்றைய நாள் எப்படி?
10 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
10 Jan 2026


