எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அக்.9 - தி.மு.க.வில் கோஷ்டி பூசல் வெடிக்க துவங்கி உள்ளது. கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை என கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ள தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் பரிதி இளம் வழுதி தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார். தி.மு.க.வை பற்றி கருணாநிதி இரும்பு கோட்டை அதை தகர்க்க யாராவது பிறந்து வரவேண்டும் என்று பெருமையாக குறிப்பிடுவார். தற்போது இரும்பு கோட்டை துருப்பிடிக்க துவங்கி உள்ளது. குடும்பத்தாரை விரும்பிய பதவிகளில் வைத்து அழகு பார்த்து கருணாநிதி அதற்கான பலனை கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைத்த படுதோல்வி மூலம் பெற்றார்.
சிறையில் கனிமொழி பற்றி கவலைப்படும் கருணாநிதி நில அபகரிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் கைதாகும் தி.மு.க.வினர் பற்றி சிறிது கூட கவலைப்படாதது கட்சிக்குள் பலரையும் எரிச்சலுக்கு ஆளாக்கி வருகிறது.
கட்சி தோற்றதற்கு காரணம் குடும்பத்தார் கட்சியில் நடத்தும் ஆதிக்க அரசியல் என்று பலரும் வெளிப்படையாக பேச துவங்கி விட்டனர்.
ஒருபுறம் மு.க.ஸ்டாலின் மறுபுறம் அழகிரி இடையே நடக்கும் சண்டை மேலுக்கு மறைக்கப்பட்டாலும் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் தேர்விலும் எதிரொலித்தது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு தி.மு.க.வில் இணைந்த சேகர்பாபுவுக்கு அளிக்கப்படும் அதிகப்படியான முக்கியத்துவம் வி.எஸ்.பாபுவுக்கும், பரிதி இளம் வழுதிக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தி வந்தது. ஸ்டாலினுக்கும் சேகர்பாபுவுக்கும் உள்ள நெருக்கம் காரணமாக வி.எஸ்.பாபுவின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது என்று கூறப்பட்டது.
திரைப்பட நடிகர் தியாகு தி.மு.க.வில் ஆரம்பம் முதல் தி.மு.க.வில் பாடுபட்டு வந்தவர் ஆனால் அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால் வருத்தத்துடன் வெளியேறிய அவர் அ.தி.மு.க.வில் இணைந்தார். இதேபோல் பல இரண்டாம் கட்ட தலைவவ்கள் கடும் ஆத்திரத்துடன் உள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கடுமையான தோல்வியை தழுவிய கருணாநிதி அதற்கான காரணங்களை ஏற்று கொள்ளாமல் இன்றுவரை காகித அறிக்கை அரசியல் மட்டுமே நடத்தி வருவதும் தன் மகளை வெளியே கொண்டு வருவதை பற்றி மட்டுமே கவலைப்பட்டு அதற்கான வேலைகளில் மட்டும் ஈடுபடுவது தி.மு.க.வினரிடையே பெரும் எரிச்சலை கிளப்பி உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஜெயித்து விடவேண்டும் என்பதற்காக பல தி.மு.க அமைச்சர்களும் பல்வேறு சித்து வேலைகளை தனது தொகுதியில் செய்தனர். வாக்காளருக்கு பணம் கொடுப்பது உட்பட பல்வேறு வேலைகளை தனது தொகுதிக்குட்பட்ட பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தனர். வழக்கம் போல் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என்று எண்ணியிருந்தனர்.
இதேபோல் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம் வழுதி பணத்தை தண்ணீராக இறைத்தார். தொகுதியில் வேலை செய்ய பலரை பொறுப்பாளராக போட்டிருந்தார். இதில் கட்சிக்காரர்கள் வைத்த உள்ளடி காரணமாகவும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும் முதல்முறையாக போட்டியிட்ட அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியிடம் தோற்றுபோனார்.
தனது தோல்விக்கு எழும்பூர் பகுதியை சேர்ந்த தலைமை கழக பேச்சாளர் கு.வீராசாமி 103-வது வட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.எம்.நாதன் ஆகியோர் காரணம் என்று பரிதி அளித்த புகாரின் பேரில் 3 பேரும் கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.
இதில் எழும்பூர் கு.வீராசாமி பரிதி இளம் வழுதி டவுசர் போட்ட காலத்திலேயே தி.மு.க.வில் பேச்சாளராக இருந்தவர். இவர்கள் 3 பேரும் சேகர்பாபுவை பிடித்து ஸ்டாலினுடன் பேசி சரி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்காலிகமாக கட்சியை விட்டு நீக்கப்பட்ட 3 பேரையும் தொடர்ந்து பணியாற்றிட அனுமதிக்கப்படுவார்கள் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார்.
இதனால் கடும் வெறுப்படைந்த பரிதி இளம் வழுதி தனது துணைபொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கருணாநிதிக்கு கடிதம் எழுதி அனுப்பினர். தனது விலகல் கடிதத்தில் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பரிதி இளம் வழுதி ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவர் கருணாநிதிக்கும் நெருக்கமானவர் கருணாநிதியை அப்பா என்று தான் அழைப்பார். அப்படிப்பட்ட பரிதி இளம் வழுதி தி.மு.க. தலைமையை விமர்சித்து விலகல் கடிதம் எழுதி அனுப்பி இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம் பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
03 Jul 2025திருவனந்தபுரம்: பிரிட்டனின் எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விம
-
4-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்..!
03 Jul 2025வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 4-வது முறையாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
-
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
03 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
பாலி தீவில் படகு மூழ்கி விபத்து: 4 பேர் உயிரிழப்பு - 38 பேர் மாயம்
03 Jul 2025மணிலா: இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் படகு கவிழ்நது 4 பேர் உயிரிழந்தனர். 38 பேர் மாயமாகி உள்ளனர்.
-
சூர்யவன்ஷி புதிய சாதனை
03 Jul 202519 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 ஒருநாள், 2 டெஸ்ட் போடிகளில் விளையாட இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது.
-
புதிதாக 14 பேருக்கு தொற்று: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
03 Jul 2025புனே: மகாராஷ்டிராவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
-
எல்லைதாண்டி மீன் பிடித்தால் உடனே கைது: இலங்கை அமைச்சர் அதிரடி
03 Jul 2025இலங்கை: தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்தால் உடனே கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
-
2-வது டெஸ்ட் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.25 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டால
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
04 Jul 2025நீலகிரி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜை
04 Jul 2025திருச்செந்தூர் : கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.