எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், அக். 19 - பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரி மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மனைவியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ். விஜயலெட்சுமி ஆந்திர ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 1995 ம் ஆண்டு முதல் 2004 வரை முதல்வராக இருந்த போது தனது ஆதாயத்துக்காக நிர்வாக அமைப்பை சந்திரபாபு நாயுடு சீர்குலைத்தார் என தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். பல்வேறு முறைகேடுகள், மோசடிகளை குறிப்பிட்டு விஜயலெட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனது மனுவுடன் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை இணைத்திருப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவில் குறிப்பிடப்பட்ட சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. அமலாக்கப் பிரிவு ஆகியவை விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அவரது மனைவி புவனேசுவரி, மகன் வெங்கடேஷ் ஆகியோர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் சி.பி.ஐ. அமலாக்கப் பிரிவு ஆகியவை பதிலளிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை தெலுங்கு தேசம் கட்சி மறுத்துள்ளது.
சந்திரபாபு நாயுடு மீது இப்போது கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஏற்கனவே கூறப்பட்டவைதான். அவையனைத்தையும் பல்வேறு நீதிமன்றங்கள் முன்னரே நிராகரித்திருக்கின்றன. உரிய ஆதாரங்களை தாக்கல் செய்ய முடியாததால் புகார் மனுக்களை மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி திரும்பப் பெற்றுக் கொண்டார் என்று தெலுங்கு தேச கட்சியை சேர்நத எம்.எல்.ஏக்கள் பையாவுலு கேசவ், லிங்கரெட்டி ஆகியோர் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


