எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.8 - ராமேரி கல்லூரியைச்சேர்ந்த 3 மாணவிகள் சாலையை கடக்கும்போது கடந்த 28-ந் தேதி மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு மாணவி இறந்தார். மற்ற 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் பாதிக்கப்பட்டு தவறான சிகிச்சையால் இறந்த மாணவிக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று நேற்று காலை சென்னை ராணி மேரி கல்லூரி மாணவிகள் கல்லூரிக்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த 28-ந் தேதி திங்கட்கிழமை, ராணி மேரி கல்லூரி மாணவிகளான ரஞ்சிதம், கல்பனா மற்றும் காயிதே மில்லத் கல்லூரி மாணவி சந்தியா ஆகிய 3 பேரும், லேடி வெல்லிங்டன் பெண்கள் விடுதிக்கு முன்னால் சாலையை கடக்கும்போது மோட்டார் சைக்கிள் மோதியதால் படுகாயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த வெங்கடேசன், ஜீவானந்தம் ஆகிய 12 பேரும் படுகாயமடைந்தனர்.
சாலையை கடந்த 3 மாணவிகள், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஆகிய 5 பேரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 3-ந் தேதி வியாழக்கிழமை ரஞ்சித்துக்கு ஆபரேஷன் நடந்தது. மறுநாள் சிகிச்சை பலனின்றி ரஞ்சிதம் இறந்தார். இதையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததால் ரஞ்சிதம் இறந்துவிட்டதாக கூறி மாணவிகள் மருததுவமனைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்த வெங்கடேசன், ஜீவானந்தம் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஞ்சித்தின் உடல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவருடைய தாயார் கண்ணம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற 2 மாணவிகள் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதையொட்டி நேற்று காலையில் ராணிமேரி கல்லூரி மாணவிகள் 500 பேர், கல்லூரிக்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுடன் புரட்சிகர மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கும் கலந்து கொண்டனர். போலீஸ் உதவி கமிஷனர்கள் வசந்தகுமாரி, கண்ணன் தலைமையில் போலீஸ் படைகுவிக்கப்பட்டது.
விபத்தில் மரணம் அடைந்த மாணவிக்கு அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 மாணவிகளுக்கான மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும்.
கல்லூரிக்கு முன்பு வி.ஐ.பி.க்கள் வந்தால் மட்டுமே போலீசார் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மற்ற நேரங்களில் வருவதில்லை. காலையிலும், மாலையிலும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். கல்லூரி முன்பு வேகத்தடை அல்லது சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து மாணவிகள் கோஷம் போட்டனர்.
கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியைகள் சாலைக்கு வந்து மாணவிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயல்வதாக கூறி, கல்லூரிக்குள் வரும்படி கெஞ்சி கேட்டுக் கொண்டனர். சுமார் 2 மணி நேர சாலை மறியலுக்கு பிறகு மாணவிகள், கல்லூரிக்குள் சென்றனர். ஆனால் வகுப்புகள் செல்லாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் மாணவர்களின் இத்தகைய போராட்டங்கள் எல்லை மீறி போய் கொண்டிருப்பதாக கூறி கண்டனம் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
26 Jan 2026சென்னை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் இன்று (ஜன. 27) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி குடியரசு தின விழாவில் 900 கி.மீ. வேகத்தில் பறந்து போர் விமானங்கள் சாகசம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் பறந்து இந்திய போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன.
-
நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக்கொடியை ஏற்றினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
26 Jan 2026புதுடெல்லி, நாட்டின் 77-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் டெல்லியில் ஜல்லிக்கட்டு காளையுடன் அணிவகுத்த தமிழ்நாடு அரசின் வாகனம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் ஜல்லிக்கட்டு காளையுடன் தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும்
-
77-வது குடியரசு தின விழா: சென்னையில் தேசியக்கொடியை ஏற்றினார்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
26 Jan 2026சென்னை, 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் 5-வது முறையாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றினார்.
-
77- வது குடியரசு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
26 Jan 2026புதுடெல்லி, 77- வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டம்
26 Jan 2026சென்னை, குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
-
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
26 Jan 2026புதுடெல்லி, டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
-
வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம்: தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Jan 2026தஞ்சாவூர், தேர்தல் பணியாற்ற நாம் உறுதியேற்போம் என்று தஞ்சையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம் என்றும் அவர் தெ
-
இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15.65 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
26 Jan 2026சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாட்டில் 15 லட்சத்து 65 ஆயிரத்து 454 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
-
இந்திய மக்களாட்சி வலுப்பெற அனைவரும் உறுதியேற்போம் இ.பி.எஸ். குடியரசு தின வாழ்த்து
26 Jan 2026சென்னை, இந்திய மக்களாட்சி வலுப்பெறும் வகையில் செயல்பட இந்நாளில் உறுதியேற்போம் என 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க.
-
பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின குடியரசு தின விழா வாழ்த்து
26 Jan 2026சென்னை, பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம் என்று குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு 3-வது வரிசையில் சீட் ஒதுக்கீடு
26 Jan 2026டெல்லி, குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு பின்வரிசை அமரவைக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
திருப்பூர் கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்: தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
26 Jan 2026சென்னை, குடியரசு நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்தது
26 Jan 2026சென்னை, தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையானது.
-
அரசியலமைப்பின் மாண்பை காக்க உறுதியேற்போம்: விஜய்
26 Jan 2026சென்னை, அரசியலமைப்பின் மாண்பைக் காக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய், குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இனி பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் புதிய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
26 Jan 2026புதுடெல்லி, பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
கவர்னரின் தேநீர் விருந்து: தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு
26 Jan 2026சென்னை, குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியை அறிவித்தார் முதல்வர்
26 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சியல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு நிதி உதவியை முதல்வர் அறிவித்தார்.
-
சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு
26 Jan 2026டெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா\ விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.



