எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆமதாபாத், நவ. - 7 - குஜராத்தில் கடந்த 2002 ம் ஆண்டு நிகழ்ந்த மத கலவரத்தில் முக்கிய சாட்சியான நதீம் அகமது சயீத் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். 2002 ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பின்பு குஜராத் மாநிலத்தில் பெரும் மத கலவரம் வெடித்தது. அப்போது நரோடா பாட்டியா பகுதியில் நிகழ்ந்த கலவரத்தில் 95 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் நதீம். இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட கலவர வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தார். இந்நிலையில் ஜூஹாபுரா பகுதியில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியே வந்த நதீமை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக ஆயுதத்தால் தாக்கி விட்டு தப்பியோடி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நதீம் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தகவல் அறியும் சட்ட ஆர்வலராகவும் நதீம் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


