எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சாத்தூர், நவ.- 12 - தமிழகத்தில் வெண்மைப் புரட்சி பசுமைப் புரட்சியுடன் அறிவுப்புரட்சி செய்த ஒரே முதல்வர் ஜெயலலிதா ஒருவர்தான் என்று சாத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேசினார். சாத்தூர் தொகுதியில் உள்ள தூங்காரெட்டியபட்டியிலும் பொம்மங்கிபுரத்திலும் தமிழக அரசின் சிறப்பு நலத்திட்ட உதவிகளான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தூங்காரெட்டியபட்டியில் 53 பயனாளிகளுக்கும், கொம்மங்கிபுரத்தில் 393 பயனாளிகளுக்கும் விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸிகளை முன்னாள் அமைச்சரும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது, இன்று பெளர்ணமியும் வெள்ளிக்கிழமையும் இணைந்த லட்சுமிகரமான நன்னாளாகும். இந்த நல்ல நாளில் உங்களுக்கெல்லாம் தாய்வீட்டு சீதனமாக, இந்த விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை தங்களது வீடுகளுக்கு கொண்டுசென்று நீங்கள் அனைவரும் சுபீட்சமாக, சந்தோஷமாக உங்கள் குடும்பத்தாருடன் நீடூழி வாழ வேண்டும். தேர்தல் நேரத்தில் சொன்னதை மின்னல் வேகத்தில் நிறைவேற்றி வருகின்ற இந்தியத் திருநாட்டின் ஒரே முதலமைச்சர் நமது அம்மா ஆவார். தமிழகத்தின் ஏழு கோடி மக்களுக்காக இரவும் பகலும் உழைத்துக்கொண்டிருக்கிறார். அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அடுத்த நிமிடத்திலிருந்து சட்டம் ஒழுங்கு சீர்படுத்தப்பட்டு இன்று தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. எல்லாத் தரப்பினரும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று வருகின்றனர். இந்த நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கடைக்கோடி மக்களுக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற தொலைநோக்கில் சட்டமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த கால ஆட்சியில் கருணாநிதியின் ஒரு குடும்பம் மட்டுமே பயன்பெற்றது. ஆனால் இன்று அம்மா அவர்கள் ஆட்சியில் 7 கோடி மக்களும் பயன்பெற்று அமைதியாக வாழ்கிறார்கள்.
இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை அம்மா அறிவிக்கின்றபோது, இவற்றையெல்லாம் தர முடியுமா? என்று பலர் கேட்டனர். கொடுக்கின்ற மனமிருந்தால் எல்லாம் தரமுடியும் நமது முதல்வர் அம்மா சொன்னார்கள். அவர் சொன்னபடி இங்கு சிறப்பு நலத்திட்ட உதவிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. ஏரத்தாழ ஒன்றரை வருடத்திற்குள் தமிழகம் முழுவதும் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவிடும் என்று முதல்வர் அம்மா தெரிவித்துள்ளார். எனவே அனைவருக்கும் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி கிடைத்துவிடும் என்பது உறுதி. தமிழகத்தில் முதல்வர் அம்மா வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சி, அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.அதன் அடிப்படையில் விவசாயத்தில் நவீன யுக்திகள் கையாளப்பட்டு இன்று பசுமைப் புரட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மை பெறவேண்டும் என்பதற்காக லேப் டாப் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டு இன்று கடைக்கோடியில் இருக்கும் மாணவ-மாணவியருக்கும் அறிவுப் புரட்சியை ஏற்படுத்த வாய்ப்பு தரப்பட்டுள்ளது. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேலை வாய்ப்பற்ற கிராம மக்கள் பயனடைய அவர்களுக்கு கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டு கிராமப்புற மக்கள் பயனடைந்து வருகின்றனர். நமது முதலமைச்சரின் வழிகாட்டுதலின்பேரில் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் உங்களுக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறோம். அ.தி.மு.க. அரசு மக்கள் ஜனநாயக அரசாக இன்று செயல்பட்டு வருகிறது. இந்திய திருநாட்டின் திருவிளக்காய் உலகை ஆளுகின்ற வல்லமைபெற்ற ஒப்பற்ற நமது முதலமைச்சர் தமிழக மக்களுக்காக நல்ல பல திட்டங்களை தினம் தினம் கொண்டுவந்து நிறைவேற்றி வருகிறார். அவரது வழியில் அயராது உழைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் விருதுநகர் மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தா அழகர்சாமி, சாத்தூர் ஒன்றிய சேர்மன் வேலாயுதம், வெம்பக்கோட்டை ஒன்றியச் சேர்மன் ரேவதி, துணைச் சேர்மன் மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்புராம், சசீலா, பாலமுருகன், சாத்தூர் தொகுதி செயலாளர் சேதுராமானுஜம், நகரச் செயலாளர் என்.எஸ்.வாசன், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மகேஷ் செல்வம், சுபா பரமராஜ், தொகுதி இணைச் செயலாளர் தாசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அழகர்சாமி, சண்முகக்கனி, காசி துரைப்பாண்டியன், ஏழாயிரம்பண்ணை ராஜேந்திரன், ரெட்டியபட்டி சமுத்திரம், குகன்பாறை ராஜ், சிப்பிப்பாறை கவுன்சிலர் ஜெயராஜ், மினுத்தான், விஜயாபோஸ், ஏழாயிரம்பண்ணை துரைராஜ், கனகராஜ், கணேசன், சந்தனமாரி, சீனிவாசன், காளியப்பன், கிளைச் செயலாளர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சாத்தூர் தாசில்தார் கு.பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய் அதிகாரிகள் செய்திருந்தனர். முன்னதாக சிவகாசி கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.