முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரியை செலுத்த வங்கிகள் ரிசர்வ வங்கி அறிவிப்பு

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.- 12 - வருமான வரியை செலுத்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டிசம்பர் மாதக் கடைசியில் ரிசர்வ் வங்கியில் வருமான வரியை செலுத்த வருபவர்களின் கூட்டம் மிக அதிக அளவில் இருப்பது தெரிய வருகிறது. இதன் பொருட்டு, முடிந்த அளவில் கூடுதல் முகப்புகள் அமைக்கப்பட்ட போதிலும், செலுத்தப்படும் வரிப் பணத்தைப் பெறுவதில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பது வங்கிக்கு சிரமமாகவே உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தேவையின்றி அதிகநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதிலுள்ள சங்கடங்களை தவிர்க்கும் பொருட்டு, நகரத்திலுள்ள வரிசெலுத்துவோரின் நலனைக் கருத்தில் கொண்டு கடைசிநேர நெரிசலைத் தவிர்த்து குறித்த நாளுக்கு வெகு முன்னதாகவே அவர்கள் வரியை செலுத்துமாறு வேண்டுகிறோம். இந்திய ரிசர்வ வங்கி தவிர, தமிழகத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட பின்வரும் பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை வங்கிகளின் சில குறிப்பிட்ட கிளைகளுக்கும் வரியை பணமாகவோ காசோலையாகவோ பெற அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவான்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் படியாலா, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, கார்ப்போரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சின்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, விஜயா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐடீபீஐ வங்கி, எச்டீஎஃப்சி வங்கி வருமானவரி செலுத்துவோரின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்