எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, நவ.19 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வருகிற 22 ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சனைகளை கிளப்பி அரசியல் புயலை ஏற்படுத்த பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரின்போது 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்சனையை கிளப்பின. காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் போன்றவற்றையும் எதிர்க்கட்சிகள் எழுப்பின. இந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது அடிக்கடி சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்த கூட்டத் தொடர் முடிந்து வருகிற 22 ம் தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் துவங்குகிறது. இந்த கூட்டத் தொடர் வருகிற டிசம்பர் மாதம் 23 ம் தேதிவரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் ஏற்கனவே கிளப்பப்பட்ட 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப்பணம், விலைவாசி உயர்வு, வலுவான லோக்பால் மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தனித்தெலுங்கானா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி அரசியல் புயலை உருவாக்க பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த பிரச்சனையானாலும் அதை சமாளிக்க மத்திய அரசு வலுவாக உள்ளது என்று மத்தியில் உள்ள மூத்த அமைச்சர்கள் உறுதிபட கூறுகின்றனர். என்றாலும்கூட பாராளுமன்ற நடவடிக்கைகளை சமூகமாக நடத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜேட்லி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை மத்திய நிதியமைச்சரும், பாராளுமன்ற அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி சந்தித்து பாராளுமன்றத்தை சமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்றைக் கூட்டி பாராளுமன்ற நடவடிக்கைகளை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவது, தனித் தெலுங்கானா கோரி நடந்து வரும் போராட்டம் ஆகியவை குறித்து நடக்கவிருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. மேலும் ஊழல், மணிப்பூர் நிலவரம், வெள்ளம், வேகமாக பரவி வரும் மூளைக் காய்ச்சல், இந்தியா - பாகிஸ்தான் உறவு, காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்தும் தங்கள் கட்சியின் எம்.பிக்கள் நோட்டீஸ் அனுப்புவார்கள். காஷ்மீரின் ஆயுத படை சிறப்பு அதிகார சட்டத்தை விலக்கிக் கொள்வது தொடர்பான அந்த மாநில அரசின் கோரிக்கை, 2 ஜி. ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றியும் முக்கியமாக விரிவாக விவாதிக்கப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீரில் ப்ளூரைடு இருப்பது குறித்து தங்களது கட்சி கவன ஈர்ப்பு மசோதாவை கொண்டு வரும் என்று லோக்சபை எதிர்க்கட்சி தலைவரும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மாசுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் முக்கியமாக விலைவாசி உயர்வு பிரச்சினையை வைத்து காங்கிரஸ் அரசை மடக்க இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: த.வெ.க. சார்பிலான ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
02 Jul 2025சென்னை : காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில், த.வெ.க.
-
மத நம்பிக்கையில் தலையிட முடியாது: கண்டதேவி தேரோட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
02 Jul 2025மதுரை : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
02 Jul 2025சென்னை : 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது.
-
பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jul 2025சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில்
-
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: ட்ரம்ப்
02 Jul 2025வாஷிங்டன் : காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
கோவில் காவலர் மரண வழக்கு: திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
02 Jul 2025திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் வ
-
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்
02 Jul 2025சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்
-
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியில் சிறப்பாக செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
02 Jul 2025திருவாரூர், குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து
-
தைரியமா இருங்க, நாங்க இருக்கோம்: அஜித்குமார் குடும்பத்தாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
02 Jul 2025சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அ.தி.மு.க.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி வீரர், வீராங்கனைகள்
02 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
02 Jul 2025சென்னை : ரூ. 1,853 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க.
-
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
02 Jul 2025புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
02 Jul 2025சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
02 Jul 2025ஒகேனக்கல் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்
02 Jul 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்: ஈரான்
02 Jul 2025டெஹ்ரான் : ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
-
சமிக்கு ஐகோர்ட் உத்தரவு
02 Jul 2025இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்ன
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் பயங்கரவாதிகள் இருவர் கைது
02 Jul 2025சென்னை : ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு; அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'பைப் குண்டு' வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வ
-
குரூப் 4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு
02 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
-
தமிழகம் முழுவதும் காவல் தனிப்படைகள் கலைப்பு : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு
02 Jul 2025சென்னை : தமிழகம் முழுவதும் மாவட்டம், மாநகரங்களில் செயல்பட்டு வந்த அங்கீகரிக்கப்படாத போலீஸ் தனிப்படைகளை கலைத்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
5 ஆண்டுகளும் நான்தான் முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
02 Jul 2025பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.