எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை. டிச.30- சென்னைக்கு 250 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள கடுமையான சூறாவளி புயலான தானே' நாளை காலை நாகப்பட்டினத்திற்கும் சென்னைக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 135 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும், மிக அதிகபட்சமாக 25 செ.மீ. வரை பலத்த மழை கொட்டும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான மிகக் கடுமையான சூறாவளி புயலான தானே' மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் சென்னைக்கு 250 கிலோ மீட்டர் கிழக்கு மற்றும் தென்கிழக்கிலும் புதுச்சேரிக்கு 270 கிலோ மீட்டர் கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த தானே' புயல் மேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழ்நாடு கடற்கரையை நாகப்பட்டினத்திற்கும் சென்னைக்கும் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று அதிகாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தானே புயல் கரையை நெருங்கும்போது லேசாக பலவீனமடையும் என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறி உள்ளது.
இந்த புயல் காரணமாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி, தெற்கு ஆந்திர பிரதேச கடலோர மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும். மாலையில் மழை மேலும் வலுவடைந்து சில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும். 25 செ.மீட்டர் அளவுக்கு கூட மழை இருக்கலாம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. புதுச்சேரி துறைமுகத்தில் மிக அபாயம் என்று கருதப்படும் 10ம் எண் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் துறைமுகங்களில் 9ம் எண் எச்சரிக்கை கொடியும் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்களில் 8ம் எண் எச்சரிக்கை கொடியும் ஏற்றப்பட்டுள்ளன.
சூரைக்காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வட தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் வீசும். இது படிப்படியாக உயர்ந்து 110 கிலோ மீட்டர் முதல் 135 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கடல் அலைகள் 4 அடி உயரத்திற்கு எழும்பியது. இதன் காரணமாக கடற் கரையை ஒட்டி உள்ள தாழ்வான பகுதியில் வெள்ள நீர் புகுவதற்கான அபாயம் உள்ளது. கடல் கொந்தளிப்பு தொடர்ந்து நீடித்தது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி தெற்கு ஆந்திராவைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கன மழை நீடிக்கும் என்றும்மரங்கள் வேரோடு சாயக்கூடும், மின் சப்ளை மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்படலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே ஆந்திர மாநிலம் நெல்லூர் பிரகாசம், ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்களில் 8 முதல் 10 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் வீசுகிறது. இதன் காரணமாக கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில இடங்களில் அடித்துச் செல்லப்பட்டன. வேறு சில இடங்களிலும் படகுகள் சேதம் அடைந்தன. நேற்று காலை முதலே குளிர் காற்றுடன் மழை நீடித்தது.
தயார் நிலையில் தமிழக அரசு.
சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ள புயலின் தாக்கத்தால் மாநகர மக்கள் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு நிர்வாகமும், மாநகராட்சியும் செய்து வருகின்றன..
மழை வெள்ள பாதிப்பிலிருந்து உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை தொடங்குவதற்கும் அரசு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னைக்கு அருகே வங்கக்கடலில் புயல் மையம் கொண்டிருப்பதால் கடந்த 3 நாட்களாக கடற்பகுதி மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நேற்றிரவு முதல் வடசென்னை கடற்கரை பகுதியில் உள்ள எண்ணூர், அன்னை சிவகாமிநகர், இந்திராகாந்தி நகர், பாரதிநகர், மேட்டுக்குப்பம், காசி கோயில் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடல்சீற்றத்தின் காரணமாக தடுப்பு கற்களையும் தாண்டி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 150 வீடுகள் பாதிப்புக்குள்ளாகின. அவர்கள் எல்லாம் தங்கள் உடைமைகளுடன் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகரித்ததை முன்னிட்டு ராயபுரம், காசிமேடு பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் சீனிவாசா நகர், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் சீற்றமும், கொந்தளிப்பும் அதிகமாகி உள்ளது. தொடர்ந்து சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருப்பதால் அரசுத்துறை அதிகாரிகளும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 15 மண்டல அதிகாரிகளும், பணியாளர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பலத்த சூறாவளி காற்றால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு வாகனங்களுடன் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். வெள்ள நீர் சூழ்ந்தால் அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு ராட்சத மோட்டார் இயந்திரங்களும் தயாராக உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூகநலக்கூடங்கள், மருத்துவக்குழுக்கள், உணவு வழங்குவதற்கான சமையற் கூடங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
ஏரிகளில் தண்ணீர் திறப்பு:
தானே புயலின் விளைவாக கடும் மழை பெய்வதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதையொட்டி பொதுப்பணித்துறை செயலாளர் காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்களுக்கு எச்சரித்துள்ளார். இதையொட்டி ஏரிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தேவைப்பட்டால் ஏரிகளில் உள்ள நீரை வெளியேற்றும்படி பொதுப்பணித்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். நீர்வரத்தை பொறுத்து 200 கன அடியிலிருந்து 2,500 கன அடி நீர் வரை வெளியேற்றுவதற்கும், அதையொட்டி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றப்படுவதற்கும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
புயல் கரையை கடக்கும் சூழலில் நீர்வரத்து அதிகமாகும் நிலையையொட்டி கடலோர பகுதி மற்றும் ஏரி, குளம் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷிஷ் சாட்டர்ஜி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
-
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி..!
13 Jul 2025கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.