எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.31 - சென்னை இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாகவும் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசுக்கு அ.தி.மு.க பொதுக் குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. சென்னையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் கூடிய அ.தி.மு.க பொதுக் குழுவில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மத்திய அரசைக் கண்டித்து ஜந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ் நாட்டின் நிதி நெருக்கடியை சீர்செய்ய சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கக் கோரி, முதலமைச்சர் ஜெயலலிதா, பாரதப் பிரதமரிடம் அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு கண்டனம்!
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு, மாநில அரசின் நிர்வாகத்தையும், பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகத்தையும் சீரழித்து, ஒரு மிகப்பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. தமிழ்நாட்டின் நிதி நிலையை சீர் செய்யும் நோக்குடனும், பொதுத் துறை நிறுவனங்களை கடன் சுமையில் இருந்து மீட்கும் குறிக்கோளுடனும், வளர்ச்சித் திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் இலக்குடனும், 14.6.2011 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா, பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து சிறப்பு நிதி உதவி வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால், மத்திய அரசோ, இது போன்ற நிதி உதவி வழங்கும் விஷயங்களில், காங்கிரஸ் மற்றும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு சாதகமாகவும், பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாதகமாகவும் நடந்து கொள்கிறது. மத்திய அரசின் இத்தகைய பாரபட்சமான நடவடிக்கைகள் கண்டிக்கத் தக்கவை என்பதை இந்தப் பொதுக்குழு பதிவு செய்கிறது.
மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா, 25.12.2011 அன்று சென்னை வந்த பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து, கடந்த திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடு காரணமாக, 3,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் பற்றாக்குறையும், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையும் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தை சீரமைக்க சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கி உள்ளார்கள்.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா கோரியுள்ள சிறப்பு நிதி உதவியை தமிழ்நாட்டிற்கு உடனடியாக வழங்குமாறும், இதர கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறும், மத்திய அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை உடனடியாக அமல்படுத்தும் வண்ணம் அதனை, அரசிதழில் வெளியிட மத்திய அரசை வலியுறுத்தல்!
காவிரி நதிnullர் பங்கீட்டுப் பிரச்சினையில், காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பை 25.6.1991 அன்று வழங்கிய போது முதலமைச்சராக இருந்த கழகப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதா, அதனை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை மேற்கொண்டார்கள். அதனையடுத்து நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் 10.12.1991 அன்று வெளியிடப்பட்டது. ஆனால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5.2.2007 அன்று வெளியிடப்பட்ட போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, அதனை மத்திய அரசிதழில் வெளியிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காவிரியில் தமிழ் நாட்டின் nullநீர் ஆதார உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், காவிரி நதிnullநீர்ப் பங்கீடு குறித்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடுவது அவசியமாகும். மத்திய அரசோ அத்தகைய அறிவிப்பினை அரசிதழில் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இனியும் தாமதம் செய்யாமல் உடனடியாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட வேண்டும் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதா, புதுடெல்லி சென்று பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் அக்கறையற்று உள்ளது. இதிலும் மெத்தனப் போக்கு, காலதாமதம். இது கண்டிக்கத் தக்கது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை உடனடியாக மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும்; இந்தத் தீர்ப்பினை செயல்படுத்தும் வகையில் கண்காணிப்பு குழுக்களை அமைத்திட வேண்டும் என்று மத்திய அரசை, இந்தப் பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படுவது காவிரி டெல்டா பகுதி. பெருமழை காலத்தில் பயிர்கள் நீnullரில் மூழ்கி குறுவை முழுவதும் பயனற்றுப் போகும் துயரத்தை இதற்கு முன் பல ஆண்டுகளாக காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் அனுபவித்து வந்திருக்கிறார்கள். பருவ மழையின் வீச்சையும், வேகத்தையும் கணிக்க முடியாமலும், விதைக்கின்ற காலத்தை
திட்டமிட முடியாமலும், இது நாள் வரை அல்லல்பட்ட காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் இந்த ஆண்டு உரிய நேரத்தில் விதைத்து, நல்ல விளைச்சலைக் கண்டு மழைக்கு முன் அறுவடை செய்தார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா, மேற்கொண்ட ஞானம் மிகுந்த நடவடிக்கை தான் விவசாயிகளின் இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம். பாசனத்திற்கென ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையிலும், உணவு உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு ஜூன் 6ஆம் தேதியன்றே மேட்டூர் அணையைத் திறந்து, மழைக்கு முன் குறுவை பயிர் அறுவடை காண முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
குறுவை நெற்பயிரைக் காத்து, டெல்டா விவசாயிகளின் விளைச்சல் அதிகரிக்க பருவத்தே பயிர் செய்யும் வாய்ப்பினை வழங்கிய அ.தி.மு.க பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்தப் பொதுக்குழு தனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட மண்ணெண்ணெயை வழங்காத திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசுக்கு கண்டனம்!
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் மோசமான நிர்வாகம் காரணமாக, தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க ஓராண்டு காலத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 1,000 மெகாவாட் கூடுதல் மின்சாரத்தை அளிக்குமாறு 14.6.2011 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா, பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டார்கள்.
முதலமைச்சர் ஜெயலலிதா, கோரியவாறு கூடுதலாக 1,000 மெகாவாட் மின்சாரத்தை வழங்காத மத்திய அரசிற்கு இந்தப் பொதுக்குழு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசின் என்.எல்.சி. நிலை2 விரிவாக்கப் பணிகள் மற்றும் கூடன்குளம் அணுமின் சக்தி நிலையப் பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, வேண்டுகோளினை ஏற்று, கூடுதலாக 1,000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய தொகுப்பில் இருந்து உடனடியாக வழங்குமாறு மத்திய அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டிற்கு மாதம் ஒன்றிற்கு வழங்கி வந்த அளவான 65,140 கிலோ லிட்டரை, மத்திய அரசு தொடர்ந்து குறைத்துக் கொண்டே வந்துள்ளது.
தற்போது 44 ஆயிரத்து 580 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே மத்திய அரசால் மாதம் ஒன்றுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தேவைக்கும், விநியோகத்திற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே ஒதுக்கி வழங்கி வந்த 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை வழங்க வலியுறுத்தி, முதலமைச்சர் ஜெயலலிதா நேரிலும், கடிதம் மூலமாகவும் பாரதப் பிரதமரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இருப்பினும் தமிழ்நாடு
அரசின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு தேவையான மண்ணெண்ணெயை வழங்காமல் குறைத்துக் கொண்டே வரும் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, தமிழ்நாட்டிற்கு தேவையான 65 ஆயிரத்து 140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை ஒவ்வொரு மாதமும் தவறாமல் அளிக்க வேண்டும் என
மத்திய அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையிலான சட்டத்தை இயற்ற திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசை வலியுறுத்தல்!
பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பெண்களின் சமூக பங்களிப்பின் அவசியத்தை உலகுக்கு உரக்கச் சொன்னது தமிழ்ச் சமுதாயம். பெண் கல்வியிலும், பெண்கள் முன்னேற்றத்திலும், பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை கொண்ட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., முதலமைச்சர் ஜெயலலிதா என்ற நீnullண்ட தலைமை வரிசையை கொண்ட nullமி நம் தமிழ் nullமி. இந்தப் புதிய nullமியில் ஊற்றெடுத்த பெண் விடுதலை உணர்வுகள் அனைத்தும் இந்தியத் திருநாட்டிற்கே வழிகாட்டும் ஒளி விளக்குகளாக அமைந்திருக்கின்றன.
1972ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கிய போது
உருவாக்கப்பட்ட கொள்கை விளக்கத்திலேயே, நாடாளுமன்ற, சட்டமன்ற அமைப்புகளில் குறைந்தது 25 விழுக்காடு இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு வழங்கவும், கொள்கை வகுக்கும் அமைப்புகளில் மகளிருக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கவும், ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பங்கு பெறவும் வழிவகை செய்யப்பட்டது.
கழகப் பொதுச் செயலாளராக முதலமைச்சர் ஜெயலலிதா, பொறுப்பேற்ற பின்னர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலைகளிலும் கழக அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
1991ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா, முதன் முதலாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது தான், 31 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இது தவிர, நியமன உறுப்பினராகவும் ஒரு பெண்ணே நியமிக்கப்பட்டார்.
அதாவது, கிட்டத்தட்ட 15 விழுக்காடு பெண்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு 1991ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கூட, அ.தி.மு.க. சார்பில் 33 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் பெண்கள் போட்டியிடும் வாய்ப்பினை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி உள்ளார்கள். குறிப்பாக, 10 மாநகராட்சி மேயர் பதவிகளில், 6 மாநகராட்சிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களாகப் போட்டியிட்ட பெண்களே மேயர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். பெண்கள் முன்னேற்றத்தில் கழகப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உள்ள அக்கறையின் வெளிப்பாடே இந்த வெற்றி.
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதா தொடக்கத்தில் இருந்தே ஆதரித்து வருகிறார்கள். இந்த மசோதா மாநிலங்கள் அவையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது அதற்கு ஆதரவாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள்
வாக்களித்தனர்.
இந்தச் சூழ்நிலையில், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிருக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும், அதற்கான மசோதா மக்களவையில் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. நீnullண்ட காலமாக நிலுவையில் உள்ள மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என மத்திய அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாகவும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும், திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசுக்கு கண்டனம்!
மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடுவதையும், மாற்றுக் கட்சியினர் ஆட்சி நடத்தும் மாநில அரசுகளை வஞ்சிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. அதிலும் குறிப்பாக, திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசில், திமுக முக்கிய பங்கு வகித்துக் கொண்டு, பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
மாநில அரசுகளை அதிகாரமற்றதாக ஆக்கும் வகையில், வகுப்பு வாரி மற்றும் இலக்கு வன்முறை (நியாயம் மற்றும் இழப்பீடு வழங்க வழிவகை செய்தல்) தடுப்புச் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய முயற்சித்தல்; மாநில அரசுகளின் வரி விதிக்கும் உரிமைகளை பறித்தல்; மருத்துவப் படிப்பிற்கு பொது நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்ய முயற்சி செய்தல்; தமிழ் நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய உணவுப் பாதுகாப்புச் சட்ட முன்வடிவினை அறிமுகப்படுத்துதல்; மாநில அரசின் சட்டமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்ட லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து, நிறைவேற்றி, மாநில அரசுகளின் மீது திணித்தல் போன்ற எதேச்சாதிகார நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதே போன்று, காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகள் மற்றும்
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்காத மாநில அரசுகள் ஆகியவற்றிற்கு நிதியுதவி வழங்காமல் மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.
மாநிலத்தின் நலன்களை புறக்கணிக்கும் வகையிலும், மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு மத்திய அரசை கண்டித்து 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 9-ம் தேதி திருச்சி பயணம்
06 Nov 2025புதுக்கோட்டை, திருச்சி - புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார்.
-
6 மாவட்டங்களில் இன்று கனமழை
06 Nov 2025சென்னை, தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று மதுரை, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்
-
20 வருடம் என்பது நீண்ட காலம்; ரொட்டியை திருப்பி போடுங்கள்: லல்லு பிரசாத் யாதவ் சூசகம்
06 Nov 2025பாட்னா, ரொட்டியை திருப்பி போடுகள் என்று லல்லு பிரசாத் தெரிவித்துள்ளார்.
-
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு: துணை முதல்வர் உதயநிதி தகவல்
06 Nov 2025சென்னை, 2016 தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து இந்திய தேர்தல் துணை ஆணையர் ஆய்வு: 11 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு
06 Nov 2025மதுரை, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் நேற்று ஆய்வு செய்தார்.
-
காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிச. 2-ல் தொடங்குகிறது: மத்திய அமைச்சர் தகவல்
06 Nov 2025புதுடெல்லி, காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி வரும் டிசம்பர் 2-ம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.
-
பீகார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்
06 Nov 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா சென்ற காரின் மீது ராஷ்டீரிய ஜனதா தளத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு
06 Nov 2025சென்னை, வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை.,யில் மாணவிகளுக்கு கவர்னர் பட்டங்களை வழங்கினார்
06 Nov 2025கொடைக்கானல், அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது தமிழக கவர்னர் ரவி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
-
பீகாரில் வாக்குத்திருட்டை தடுப்பது இளைஞர்களின் பொறுப்பு: ராகுல்
06 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் பா.ஜ.க. வாக்குகளைத் திருட முயற்சிக்கும் அதனை தடுக்க இளைர்களின் பொறுப்பு என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
-
அரசியல் பொதுக்கூட்டம், பிரச்சாரத்திற்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி: கூடுதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
06 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-
பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
06 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டியுள்ளது என்று தெரிவித்த அ.தி.மு.க.
-
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டம்
06 Nov 2025சென்னை, வார விடுமுறையை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளது.
-
பா.ஜ.க.வின் போராட்டம் அரசியலுக்கான வேடம் : அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்
06 Nov 2025சென்னை, தி.மு.க. அரசில் குற்றம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லாததால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பா.ஜ.க.
-
முதல்வரின் பெருந்தன்மையை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்: சபாநாயகர் அப்பாவு பேட்டி
06 Nov 2025நெல்லை, முதல்வரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள் என்று தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, முதல்வரின் பெருந்தன்மையை சாதாரண மக்கள் பாராட்டி கொண்டிருக்கின்ற
-
அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன் - ராமதாஸ் பேட்டி
06 Nov 2025சென்னை, அன்பு மணியை அமைச்சராக்கியது தவறு என்று ராமதாஸ் கூறினார்.
-
தேர்தலில் தோற்றால் கட்சி பதவிகள் பறிப்பு: தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
06 Nov 2025சென்னை, சங்கரன்கோவில், நெல்லை தி.முக. நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலில் தோற்றால்
-
மகளிர் உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியுடன் ஜனாதிபதி திரெளபதி சந்திப்பு
06 Nov 2025புதுடெல்லி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினரை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
-
2026 டி-20 உலக கோப்பை போட்டிக்கு இந்தியாவில் மைதானங்கள் தேர்வு; அகமதாபாத்தில் இறுதிப்போட்டி
06 Nov 2025மும்பை: 2026 டி-20 உலக கோப்பை போட்டிக்கு இந்தியாவில் அகமதாபாத், டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய 5 மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இறுதிப்போட்டி
-
பெண்ணை தாக்கியதாக ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு
06 Nov 2025தூத்துக்குடி: பெண்ணை தாக்கியதாக நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
வரும் 2026 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் சி.எஸ்.கே. அணி சி.இ.ஓ. தகவல்
06 Nov 2025சென்னை: வரும் 2026 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டப்பேரவை முன்பு தியாகி சங்கரலிங்கனார் சிலை நிறுவ வழக்கு அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
06 Nov 2025மதுரை: தமிழக சட்டப்பேரவை முன்பு தியாகி சங்கரலிங்கனார் சிலை நிறுவக்கோரிய மனுவை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன் - ட்ரம்ப் திட்டவட்டம்
06 Nov 2025வாஷிங்டன்: தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
அபராதம் செலுத்தாததால் 30 ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைப்பு
06 Nov 2025ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி 4 விசைப்படகுகளில் 30 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
-
எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி கிடையாது: சீமான்
06 Nov 2025சென்னை, எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


