எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,மார்ச்.15 - அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளான இடது கம்யூனிஸ்ட் மற்றும் வலது கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கான இடங்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. இடது கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகளும் வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகளை பெற்ற இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் அ.தி.மு.க. கூட்டணியின் அமோக வெற்றிக்கு பாடுபடுவோம் என்று உறுதி அளித்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தமாதம் 13-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் இந்த தேர்தலை சந்திக்கினறன. அ.தி.மு.க. அணியில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க., வைகோ தலைமையிலான ம.தி.மு.க. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம், மற்றும் இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு இளஞர் பேரவை, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கட்சிகளில் ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவர, மற்ற அனைத்து கட்சிகளுக்கும் ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. ம.தி.மு.க.வுடனும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்தநிலையில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து நேற்று கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. முன்னதாக நேற்று பிற்பகல் 3 மணி அளவில் வலது கம்யூனிஸ்ட் தலைவர்களான நல்லகண்ணு, தா.பாண்டியன், மகேந்திரன், பழனிசாமி ஆகியோர் போயஸ்கார்டன் சென்றனர். அவர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அன்புடன் வரவேற்றார். இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக இந்த சந்திப்பின்போது முடிவானது. அதற்கான ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும் தா.பாண்டியனும் கையெழுத்திட்டனர். பின்னர் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த தா.பாண்டியன் கூறுகையில் மத்திய மாநில அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை முறியடித்து அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும். எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தோழமை கட்சிகளின் வெற்றிக்கும் நாங்கள் பாடுபடுவோம் என்று கூறினார்.
ஜனநாயகத்தை மீட்கவும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும் சுறுக்கமாக சொன்னால் தமிழ்நாட்டை மீட்கும் போராட்டமாக எங்கள் கூட்டணியின் போராட்டம் அமையும் என்றும் வலது கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் தா.பாண்டியன் கூறினார். 10 தொகுதிகள் என்னென்ன என்று கேட்டபோது ஜெயலலிதா நாளை (இன்று) அறிவிப்பார் என்று கூறிய தா.பாண்டியன், 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ததில் தங்களுக்கு திருப்தியே என்றும் தெரிவித்தார்.
இடது கம்யூனிஸ்டுக்கு 12 தொகுதிகள்
அதன் பிறகு இடதுகம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பிற்பகல் 3.30 மணி அளவில் போயஸ் கார்டன் வந்தார். அவருடன் மத்திய கமிட்டி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர். ஜெயலலிதாவின் வீட்டிற்குள் சென்ற ராமகிருஷ்ணன்,அவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். இந்த சந்திப்பின்போது இடது கம்யூனிஸ்டு கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதாக முடிவானது. அதற்கான ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும் ராமகிருஷ்ணனும்ம் கையெழுத்திட்டனர். பின்னர் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராமகிருஷ்ணன், அ.தி.மு.க. கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. காங்கிரஸை எதிர்த்து தங்கள் கட்சி கடுமையாக தேர்தல் களத்தை சந்திக்கும் என்றும் ராமகிருஷ்ணன் கூறினார். இந்த கூட்டணி ஒரு மகத்தான கூட்டணி என்று கம்யூனிஸ்டு தலைவர்கள் பூரிப்போடு தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.