LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,மார்ச்.15 - அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளான இடது கம்யூனிஸ்ட் மற்றும் வலது கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கான இடங்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. இடது கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகளும் வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகளை பெற்ற இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் அ.தி.மு.க. கூட்டணியின் அமோக வெற்றிக்கு பாடுபடுவோம் என்று உறுதி அளித்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தமாதம் 13-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் இந்த தேர்தலை சந்திக்கினறன. அ.தி.மு.க. அணியில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க., வைகோ தலைமையிலான ம.தி.மு.க. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம், மற்றும் இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு இளஞர் பேரவை, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கட்சிகளில் ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவர, மற்ற அனைத்து கட்சிகளுக்கும் ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. ம.தி.மு.க.வுடனும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்தநிலையில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து நேற்று கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. முன்னதாக நேற்று பிற்பகல் 3 மணி அளவில் வலது கம்யூனிஸ்ட் தலைவர்களான நல்லகண்ணு, தா.பாண்டியன், மகேந்திரன், பழனிசாமி ஆகியோர் போயஸ்கார்டன் சென்றனர். அவர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அன்புடன் வரவேற்றார். இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக இந்த சந்திப்பின்போது முடிவானது. அதற்கான ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும் தா.பாண்டியனும் கையெழுத்திட்டனர். பின்னர் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த தா.பாண்டியன் கூறுகையில் மத்திய மாநில அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை முறியடித்து அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும். எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தோழமை கட்சிகளின் வெற்றிக்கும் நாங்கள் பாடுபடுவோம் என்று கூறினார்.
ஜனநாயகத்தை மீட்கவும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும் சுறுக்கமாக சொன்னால் தமிழ்நாட்டை மீட்கும் போராட்டமாக எங்கள் கூட்டணியின் போராட்டம் அமையும் என்றும் வலது கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் தா.பாண்டியன் கூறினார். 10 தொகுதிகள் என்னென்ன என்று கேட்டபோது ஜெயலலிதா நாளை (இன்று) அறிவிப்பார் என்று கூறிய தா.பாண்டியன், 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ததில் தங்களுக்கு திருப்தியே என்றும் தெரிவித்தார்.
இடது கம்யூனிஸ்டுக்கு 12 தொகுதிகள்
அதன் பிறகு இடதுகம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பிற்பகல் 3.30 மணி அளவில் போயஸ் கார்டன் வந்தார். அவருடன் மத்திய கமிட்டி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர். ஜெயலலிதாவின் வீட்டிற்குள் சென்ற ராமகிருஷ்ணன்,அவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். இந்த சந்திப்பின்போது இடது கம்யூனிஸ்டு கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதாக முடிவானது. அதற்கான ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும் ராமகிருஷ்ணனும்ம் கையெழுத்திட்டனர். பின்னர் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராமகிருஷ்ணன், அ.தி.மு.க. கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. காங்கிரஸை எதிர்த்து தங்கள் கட்சி கடுமையாக தேர்தல் களத்தை சந்திக்கும் என்றும் ராமகிருஷ்ணன் கூறினார். இந்த கூட்டணி ஒரு மகத்தான கூட்டணி என்று கம்யூனிஸ்டு தலைவர்கள் பூரிப்போடு தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
தக்காளி ரசம்![]() 3 days 23 hours ago |
தக்காளி ரசம்![]() 4 days 10 min ago |
கேரளா குடம்புளி மீன் குழம்பு![]() 6 days 23 hours ago |
-
முல்லை பெரியாறு அணை நீர் திறப்பு விவகாரம்: கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிசெய்யும் : பினராய் விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
09 Aug 2022சென்னை : முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது.
-
2022-காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி சாதித்தது என்ன?
09 Aug 2022இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
-
அக்னி பாதை திட்டம்: ராணுவ காவல்துறையில் சேர தமிழக இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம்
09 Aug 2022அக்னி பாதை திட்டத்தில் ராணுவ காவல் துறையில் சேர தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எ
-
பீகாரில் ஜே.டி.யு. - பா.ஜ.க. கூட்டணி முறிந்தது: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்
09 Aug 2022பீகாரில் முதல்வர் நிதிஷ் குமரை தன் கூட்டணியில் தக்கவைக்க பா.ஜ.க. எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது.
-
உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலருக்கு ஆயுத உதவி: அமெரிக்கா
09 Aug 2022வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது.
-
ஏக்நாத் ஷிண்டேவின் அமைச்சரவை விரிவாக்கம்: மகாராஷ்டிராவில் 18 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
09 Aug 2022புனே : மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை முதல்கட்ட விரிவாக்கத்தின்படி, மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்று கொண்டனர்.
-
துவரிமான் ஸ்ரீசக்திமாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்
09 Aug 2022மதுரை : துவரிமானில் 80 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசக்திமாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ., அவரது துணைவி ஜெயந்திராஜூ ஆகியோர் அன்னதானத்தை தொடங்க
-
செல்பி மோகத்தால் ஏற்பட்ட பயங்கரம்: நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் 7 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு
09 Aug 2022திண்டுக்கல் : பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் செல்பி மோகத்தால் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் 7 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்க்கப்பட்டார்.
-
காமன்வெல்த் போட்டி: பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Aug 2022சென்னை : காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
50 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன சோழர் கால பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
09 Aug 2022தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 12-ம் நூற்றாண்ட்டை சேர்ந்த இந்து மத கடவுள் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
குஜாராத்தில் 10 பேருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்க வாழ்நாள் தடை
09 Aug 2022காந்திநகர் : குஜராத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த 10 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து அம்மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
மாயத்தேவர் மறைவு: ஓ.பி.எஸ். இரங்கல்
09 Aug 2022சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மாயத்தேவர் மறைவுக்கு ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
44-வது செஸ் ஒலிம்பியாட் 2022: வெண்கலம் வென்றது இந்திய மகளிர் ‘ஏ’ மற்றும் ‘பி’ அணி
09 Aug 2022மாமல்லபுரம் : நடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் ‘ஏ’ அணியும், இந்திய ‘பி’ அணியும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளன.
-
செஸ் ஒலிம்பியாட் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கப்பதக்கம், பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம்
09 Aug 2022சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்றார். பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம் கிடைத்து உள்ளது.
-
பாக். டிடிபி அமைப்பின் தளபதி கண்ணிவெடி தாக்குதலில் பலி
09 Aug 2022கராச்சி : கண்ணிவெடி தாக்குதலில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தலிபான் (டி.டி.பி) அமைப்பின் தளபதி பலியானார்.
-
சாலை விபத்தில் பலியான பிரபல கிரிக்கெட் நடுவர்
09 Aug 2022தென்னாப்பிரிக்காவில் லீக் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் ரூடி கோர்ட்ஸென்.
-
அ.தி.மு.க.வின் இலவச வேட்டி, சேலை திட்டம் தொடருமா ? தமிழக அரசுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி
09 Aug 2022நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் அ.தி.மு.க.வின் இலவச வேட்டி, சேலை திட்டத்தை தி.மு.க தொடருமா என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்
-
ஒமைக்ரான் தொற்றுக்காக புதிய தடுப்பூசி: ஜப்பான் அரசு ஒப்புதல்
09 Aug 2022டோக்கியோ : ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக செயல்பட கூடிய புதிய கொரோனா தடுப்பூசிக்கு ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி : ஹர்திக் பாண்ட்யா பேட்டி
09 Aug 2022லாடெர்ஹில் : வருங்காலத்தில் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
-
44-வது செஸ் ஒலிம்பியாட்: இந்திய மகளிர் பி அணியில் திவ்யா தேஷ்முக் வெற்றி
09 Aug 2022186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.
-
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: டிரம்ஸ் இசைத்த முதல்வர் ஸ்டாலின்
09 Aug 2022சென்னை : செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார்.
-
சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் : கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
09 Aug 2022சென்னை : சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
பயங்கரவாதிகள் தாக்குதல்: கேமரூனில் ராணுவ வீரர் உள்ளிட்ட 5 பேர் பலி
09 Aug 2022கேமரூன் நாட்டில் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
-
எப்.பி.ஐ. அதிகாரிகள் டிரம்பின் எஸ்டேட்டில் திடீர் சோதனை : இது இருண்ட காலம் என விமர்சனம்
09 Aug 2022புளோரிடா : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
-
மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கனஅடி நீர் திறப்பு : கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கியில் எச்சரிக்கை
09 Aug 2022சேலம் : மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.