எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, ஜன.- 8 - முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாபற்றி நக்கீரன் தமிழ் வாரப்பத்திரிகையில் நேற்று அவதூறு செய்தி வெளியானது. இதை பார்த்த அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் கொதித்தெழுந்தனர். அந்த வார பத்திரிகையை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் கடைகளில் விற்பனைக்கு இருந்த அந்த வார பத்திரிகைகள் அனைத்தையும் வாங்கி தீவைத்து எரித்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் அந்த பத்திரிகையை தீவைத்து எரித்தனர். அப்போது எதிர்ப்பு கோஷங்களையும் அ.தி.மு.க.வினர் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் கோபாலகிருஷ்ணன், அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டியன், பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மண்டலத் தலைவர்கள் பெ.சாலைமுத்து, கே.ஜெயவேல், மு.இராஜபாண்டியன், கே.ராஜபாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், தொகுதி செயலாளர் எஸ்.குமார், தொகுதி இணைச் செயலாளர் கிரம்மர் சுரேஷ், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன், மகளிரணி செயலாளர் பெ.இந்திராணி, பகுதிக்கழக செயலாளர்கள் அண்ணாநகர் முருகன், பூமிபாலகன், செ.ஜெயபால், கவுன்சிலர் கேசவபாண்டியம்மாள், தெற்கு 3 ம் பகுதி இளைஞரணி செயலாளர் முத்திருளாண்டி, வக்கீல் ரமேஷ், வட்டச் செயலாளர்கள் ஏ.காஜா, சக்திவிநாயகர் ஆர்.பாண்டி, முக்கூரான், எம்.தேவதாஸ், எம்.ஜி.ஆர்.மன்ற துணைத்தலைவர் டி.எஸ்.பி.முத்துச்சாமி, மதுரைவீரன் பழக்கடை தமிழ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மதுரை அவுட்போஸ்ட் டாக்டர் அம்பேத்கார் சிலை முன்பு வடக்கு தொகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளர் வக்கீல் ஏ.பி.பாலசுப்பிரமணியம் தலைமையில் அ.தி.மு.க.வினர் வார இதழை கண்டித்து கொடும்பாவி எரித்தனர். இதில் வழக்கறிஞர்கள் கே.ரமணி, முத்துக்குமார், இளமன், ராமகிருஷ்ணன், புதூர் ஆனந்தஜோதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். புதூர் பஸ் நிலையம் அருகே மதுரை மாநகர் மாவட்ட பேரவை துணைத் தலைவரும் கவுன்சிலருமான புதூர் அபுதாஹிர், வட்டச் செயலாளர் கார்த்திக் முனியசாமி, சம்பக்குளம் ஆழ்வார் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் வார இதழ்களை தீயிட்டு கொளுத்தினர். பெரியார் பஸ்நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே கவுன்சிலர் கு.திரவியம் தலைமையில் பரவை பேருராட்சித் தலைவர் ராஜா மற்றம் அ.தி.மு.க.வினர் நக்கீரன் இதழை தீயிட்டு எரித்தனர்.
மதுரை வெற்றிலைப்பேட்டை எம்.ஜி.ஆர்.சிலை முன்பு மாவட்ட பேரவை செயலாளர் கா.டேவிட் அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷ.ராஜலிங்கம் ஆகியோர் தலைமையில் வார இதழை தீயிட்டு கொளுத்தினர். இதில் மாவட்ட மீனவரணி செயலாளர் வில்லாபுரம் விஜயகுமார், கறிக்கடை முருகேசன், கவுன்சிலர் நூர்முகமது, வட்டச் செயலாளர் ஏ.ராஜாமுகமது உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் எதிரே வடக்கு 1 ம் பகுதிக் கழக செயலாளர் அண்ணாநகர் எம்.என்.முருகன் தலைமையில் வார இதழை தீவைத்து எரித்தனர். இதில் வட்டச் செயலாளர்கள் ஏ.முத்துச்சாமி, தங்கப்பாண்டி, கவுன்சிலர் சுசீந்திரன், மானகிரி மகாதேவன், மானகிரி பாண்டி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் எதிரே வட்டச் செயலாளர் புதூர் கே.எம்.கண்ணன் தலைமையில் இளைஞரணி செயலாளர் விஜி என்ற விஜயசேகர், பாசறை செயலாளர் ரவி, மாவட்ட பிரதிநிதி அம்பிகா நாச்சியப்பன், அவைத்தலைவர் மருதுபாண்டி மற்றும் அ.தி.மு.க.வினர் வார இதழை தீவைத்து கொளுத்தினர்.
மதுரை மத்திய 2 ம் பகுதிக்கழக செயலாளர் தளபதி ஆர்.மாரியப்பன் தலைமையில் மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பில் வார இதழை அ.தி.மு.க.வினர் தீவைத்து எரித்தனர். பின்னர் தளபதி ஆர்.மாரியப்பன் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேதாஜி ரோட்டில் உள்ள நக்கீரன் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த அலுவலகத்தில் உள்ள வார இதழ்கள் மற்றும் அந்தப் பகுதிக் கடைகளில் இருந்த வார இதழ்கள் அனைத்தையும் சேகரித்து தீவைத்து எரித்தனர். இந்த போராட்டத்தில் வட்டச் செயலாளர்கள் சுவீட்ஸ்டால் சுப்பையா, நாகேந்திரன், கவுன்சிலர் சித்திரைஜோதி, அலியார், திலகர், ஐயப்பன், மாயாண்டி, தமயந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மதுரை முனிச்சாலை பகுதியில் கிழக்கு மண்டலத் தலைவரும் தெற்குப் பகுதிக் கழக செயலாளருமான மு.இராஜபாண்டியன் தலைமையில் அழ.பாண்டி, ராமநாதன், கோவிந்தசாமி, எம்.ஜி.ஆர்.நாகராஜன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் வார இதழினை தீயிட்டு கொளுத்தினர். பழங்கானத்தம் பகுதியில் பகுதிக்கழக செயலாளரும் தெற்கு மண்டலத் தலைவருமான பெ.சாலைமுத்து தலைமையில் அ.தி.மு.க.வினர் வார இதழ்களை தீயிட்டு கொளுத்தினர். மதுரை மாநகர் மாவட்ட பாசறை செயலாளர் டி.வினோத்குமார் தலைமையில் பாசறை நிர்வாகிகள் வி.எஸ்.பிரசன்ன குமார், ஜெயந்தி, மகேஸ்வரன், முருகன், செல்வராஜ், பழனிவேல், சதாம், விஜயகுமார், மணி, சங்குராஜா உள்ளிட்ட பாசறை நிர்வாகிகள் வார இதழை தீவைத்து எரித்தனர்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை, அய்யர் பங்களா ஆகிய இடங்களில் கே.தமிழரசன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒன்றியச் செயலாளர்கள் தக்கார் பாண்டி, எம்.முருகேசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எஸ்.முருகன், வக்கீல் தி.கோபி, ஆனையூர் ஐயப்பன், அஜீஸ், ரவி, பிரதாப் மற்றும் அ.தி.மு.க.வினர் அவதூறு செய்தி வெளியிட்ட வார இதழ்களை தீவைத்து எரித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டார் ஐ.சி.சி. நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்
18 Sep 2025அபுதாபி: ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐ.சி.சி.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
18 Sep 2025மே.தீவுகள் அணி அறிவிப்பு
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவின் ஏற்றுமதி 6 சதவீதம் வரை அதிகரிக்கும்: பியூஷ் கோயல்
18 Sep 2025மும்பை: இந்தியாவின் ஏற்றுமதி 6 சதவீதம் வரை அதிகரிக்கும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.