எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஜன.- 8 - முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாபற்றி நக்கீரன் தமிழ் வாரப்பத்திரிகையில் நேற்று அவதூறு செய்தி வெளியானது. இதை பார்த்த அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் கொதித்தெழுந்தனர். அந்த வார பத்திரிகையை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் கடைகளில் விற்பனைக்கு இருந்த அந்த வார பத்திரிகைகள் அனைத்தையும் வாங்கி தீவைத்து எரித்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் அந்த பத்திரிகையை தீவைத்து எரித்தனர். அப்போது எதிர்ப்பு கோஷங்களையும் அ.தி.மு.க.வினர் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் கோபாலகிருஷ்ணன், அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டியன், பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மண்டலத் தலைவர்கள் பெ.சாலைமுத்து, கே.ஜெயவேல், மு.இராஜபாண்டியன், கே.ராஜபாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், தொகுதி செயலாளர் எஸ்.குமார், தொகுதி இணைச் செயலாளர் கிரம்மர் சுரேஷ், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன், மகளிரணி செயலாளர் பெ.இந்திராணி, பகுதிக்கழக செயலாளர்கள் அண்ணாநகர் முருகன், பூமிபாலகன், செ.ஜெயபால், கவுன்சிலர் கேசவபாண்டியம்மாள், தெற்கு 3 ம் பகுதி இளைஞரணி செயலாளர் முத்திருளாண்டி, வக்கீல் ரமேஷ், வட்டச் செயலாளர்கள் ஏ.காஜா, சக்திவிநாயகர் ஆர்.பாண்டி, முக்கூரான், எம்.தேவதாஸ், எம்.ஜி.ஆர்.மன்ற துணைத்தலைவர் டி.எஸ்.பி.முத்துச்சாமி, மதுரைவீரன் பழக்கடை தமிழ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மதுரை அவுட்போஸ்ட் டாக்டர் அம்பேத்கார் சிலை முன்பு வடக்கு தொகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளர் வக்கீல் ஏ.பி.பாலசுப்பிரமணியம் தலைமையில் அ.தி.மு.க.வினர் வார இதழை கண்டித்து கொடும்பாவி எரித்தனர். இதில் வழக்கறிஞர்கள் கே.ரமணி, முத்துக்குமார், இளமன், ராமகிருஷ்ணன், புதூர் ஆனந்தஜோதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். புதூர் பஸ் நிலையம் அருகே மதுரை மாநகர் மாவட்ட பேரவை துணைத் தலைவரும் கவுன்சிலருமான புதூர் அபுதாஹிர், வட்டச் செயலாளர் கார்த்திக் முனியசாமி, சம்பக்குளம் ஆழ்வார் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் வார இதழ்களை தீயிட்டு கொளுத்தினர். பெரியார் பஸ்நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே கவுன்சிலர் கு.திரவியம் தலைமையில் பரவை பேருராட்சித் தலைவர் ராஜா மற்றம் அ.தி.மு.க.வினர் நக்கீரன் இதழை தீயிட்டு எரித்தனர்.
மதுரை வெற்றிலைப்பேட்டை எம்.ஜி.ஆர்.சிலை முன்பு மாவட்ட பேரவை செயலாளர் கா.டேவிட் அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷ.ராஜலிங்கம் ஆகியோர் தலைமையில் வார இதழை தீயிட்டு கொளுத்தினர். இதில் மாவட்ட மீனவரணி செயலாளர் வில்லாபுரம் விஜயகுமார், கறிக்கடை முருகேசன், கவுன்சிலர் நூர்முகமது, வட்டச் செயலாளர் ஏ.ராஜாமுகமது உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் எதிரே வடக்கு 1 ம் பகுதிக் கழக செயலாளர் அண்ணாநகர் எம்.என்.முருகன் தலைமையில் வார இதழை தீவைத்து எரித்தனர். இதில் வட்டச் செயலாளர்கள் ஏ.முத்துச்சாமி, தங்கப்பாண்டி, கவுன்சிலர் சுசீந்திரன், மானகிரி மகாதேவன், மானகிரி பாண்டி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் எதிரே வட்டச் செயலாளர் புதூர் கே.எம்.கண்ணன் தலைமையில் இளைஞரணி செயலாளர் விஜி என்ற விஜயசேகர், பாசறை செயலாளர் ரவி, மாவட்ட பிரதிநிதி அம்பிகா நாச்சியப்பன், அவைத்தலைவர் மருதுபாண்டி மற்றும் அ.தி.மு.க.வினர் வார இதழை தீவைத்து கொளுத்தினர்.
மதுரை மத்திய 2 ம் பகுதிக்கழக செயலாளர் தளபதி ஆர்.மாரியப்பன் தலைமையில் மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பில் வார இதழை அ.தி.மு.க.வினர் தீவைத்து எரித்தனர். பின்னர் தளபதி ஆர்.மாரியப்பன் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேதாஜி ரோட்டில் உள்ள நக்கீரன் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த அலுவலகத்தில் உள்ள வார இதழ்கள் மற்றும் அந்தப் பகுதிக் கடைகளில் இருந்த வார இதழ்கள் அனைத்தையும் சேகரித்து தீவைத்து எரித்தனர். இந்த போராட்டத்தில் வட்டச் செயலாளர்கள் சுவீட்ஸ்டால் சுப்பையா, நாகேந்திரன், கவுன்சிலர் சித்திரைஜோதி, அலியார், திலகர், ஐயப்பன், மாயாண்டி, தமயந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மதுரை முனிச்சாலை பகுதியில் கிழக்கு மண்டலத் தலைவரும் தெற்குப் பகுதிக் கழக செயலாளருமான மு.இராஜபாண்டியன் தலைமையில் அழ.பாண்டி, ராமநாதன், கோவிந்தசாமி, எம்.ஜி.ஆர்.நாகராஜன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் வார இதழினை தீயிட்டு கொளுத்தினர். பழங்கானத்தம் பகுதியில் பகுதிக்கழக செயலாளரும் தெற்கு மண்டலத் தலைவருமான பெ.சாலைமுத்து தலைமையில் அ.தி.மு.க.வினர் வார இதழ்களை தீயிட்டு கொளுத்தினர். மதுரை மாநகர் மாவட்ட பாசறை செயலாளர் டி.வினோத்குமார் தலைமையில் பாசறை நிர்வாகிகள் வி.எஸ்.பிரசன்ன குமார், ஜெயந்தி, மகேஸ்வரன், முருகன், செல்வராஜ், பழனிவேல், சதாம், விஜயகுமார், மணி, சங்குராஜா உள்ளிட்ட பாசறை நிர்வாகிகள் வார இதழை தீவைத்து எரித்தனர்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை, அய்யர் பங்களா ஆகிய இடங்களில் கே.தமிழரசன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒன்றியச் செயலாளர்கள் தக்கார் பாண்டி, எம்.முருகேசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எஸ்.முருகன், வக்கீல் தி.கோபி, ஆனையூர் ஐயப்பன், அஜீஸ், ரவி, பிரதாப் மற்றும் அ.தி.மு.க.வினர் அவதூறு செய்தி வெளியிட்ட வார இதழ்களை தீவைத்து எரித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.