எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு, ஜன. - 18 - தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே உள்ள பாக். ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய கடல் பகுதிகளில் மீன் பிடிக்க ஒரு புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியாவும், இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இலங்கை சென்றுள்ள நிலையில் இலங்கை வெளியுறவு துறை வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பாதுகாப்பு, கடல் வளத்தை நீடித்திருக்க செய்வது, கடல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வாழ்வாதாரம் போன்ற அம்சங்களை இந்த உடன்பாடு கவனத்தில் கொள்ளும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, சர்வதேச கடல் எல்லையை தாண்டி பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா போன்ற பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு இருக்கும் பாரம்பரிய உரிமை தொடர்பான கோரிக்கையை கைவிடுவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டிருப்பதாக இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னா பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் இதற்கு விளக்கமளித்து இலங்கை வெளியுறவு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மீன் பிடித்தல் தொடர்பாக இரு தரப்பு கூட்டு நடவடிக்கை குழுவின் 4 வது கூட்டம் கடந்த 13, 14 ம் தேதிகளில் நடந்தது. அதில் பாரம்பரிய மீன் பிடி உரிமை போன்றவற்றில் இந்தியாவும், இலங்கையும் தத்தமது நிலையை தொடர்ந்து வலியுறுத்தின. அதே நேரத்தில் இரு நாட்டு மீனவர்களும் பாதுகாப்பாக மீன்பிடி தொழிலை செய்வதற்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை தங்களது அரசுகள் எடுக்க விரும்புவதாக இரு தரப்பினரும் தெரிவித்தனர். இந்த விஷயத்தில் பாதுகாப்பு, கடல்வளம், கடல் சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளும் ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு தீர்வை எட்டும் வகையில் தொடர்ந்து பேசுவதற்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக மீன்பிடி தொழிலில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான ஒப்பந்தத்தை மிக விரைவில் செய்து கொள்ளவும் இரு தரப்பும் சம்மதித்திருக்கின்றன. கடலின் தரை பகுதி வரை வலைவீசி மீன் பிடிக்கும் நவீன முறையை மீனவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


