எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பிப்.- 6 - 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை மேற்கொண்டு விசாரிப்பது குறித்த ஆயத்த பணிகள் மற்றும் நடைமுறைகள் ஆகியன குறித்து சி.பி.ஐ. டைரக்டர் ஏ.பி.சிங்குடன் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பிரதீப்குமார் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சாமி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு சிதம்பரம் தொடர்பான மனு மீது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு முடிவு செய்யும் என்று கூறியது. அதன்படி சிதம்பரம் விவகாரம் தொடர்பான மனு மீது விசாரணை நடத்திய சி.பி.ஐ.சிறப்பு கோர்ட்டு சுப்பிரமணியசாமி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. மேலம் ஆ.ராசாவால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 9 கம்பெனிகளின் 122 2 ஜி. உரிமங்களை ரத்து செய்தும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த ஊழல் வழக்கை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மேற்பார்வையிட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இதன் அடிப்படையில் மத்திய புலனாய்வுத்துறை நிறுவனமான சி.பி.ஐ.யின் டைரக்டர் ஏ.பி.சிங்கும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பிரதீப் குமாரும் நேற்று டெல்லியில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். அப்போது 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொண்டு எப்படி நடத்துவது? என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து இவர்கள் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026


