எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பிப். 23 - இரண்டு இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள நிலைமை குறித்து ஆலோசிப்பதற்காக இத்தாலிய துணைவெளியுறவு மந்திரி மிஸ்துரா நேற்று டெல்லி வந்து மத்திய வெளியுறவு விவகாரத்துறை இணை அமைச்சரை அவசரமாக சந்தித்துப் பேசினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை இத்தாலியில் நடத்த வேண்டும் என்று அந்நாடு கோரிவரும் நிலையில் இத்தாலிய அமைச்சரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மீனவர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. அவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து சென்றாலும் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். எல்லை தாண்டி வந்ததாக குற்றம் சாட்டி இவர்களை இலங்கை கடற்படை தாக்கி கொன்று வருகிறது. சரி, ராமேஸ்வரம் மீனவர்களுக்குத்தான் எல்லை பற்றி தெரியவில்லை என்பதை ஒருவாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும்கூட, கோடியக்கரை மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்வதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ளமுடியும்? நேற்றுகூட நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற் படையினர் தாக்கி அவர்களது வலைகளை அறுத்தெறிந்து மீன்களை கொள்ளையடித்ததோடு, பெட்ரோல் குண்டுகளையும் வீசிவிட்டு போய் இருக்கிறார்கள். இதில் பல மீனவர்கள் காயத்தோடு தப்பிவிட்டார்கள். இந்திய கடலோர காவல்படை என்னதான் செய்கிறது என்று தெரியவுமில்லை, புரியவுமில்லை. மீனவர்களுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்ய மட்டும்தான் இந்த படைக்கு தெரியும்போலும்.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள்தான் தாக்கப்படுகிறார்கள் என்றால் கேரள பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இருவருக்கும் சமீபத்தில் ஒரு துயர நிலை ஏற்பட்டது. கடந்த 15 ம் தேதி கேரள கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 2 மீனவர்களை கடற்கொள்ளையர்கள் என்று தப்புக்கணக்கு போட்டு சுட்டுத்தள்ளி இருக்கிறார்கள் இத்தாலியைச் சேர்ந்த ஒரு சரக்கு கப்பலின் பாதுகாவலர்கள். இச்சம்பவத்தில் 2 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி சமீபத்தில் கூறியிருந்தார்.
மீனவர்களை சுட்டுக்கொன்ற இரண்டு இத்தாலிய கடற்படையினரும் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்களை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று துடிக்கிறது இத்தாலி. காரணம் சம்பவம் நடந்த இடம் சர்வதேச கடற்பகுதியாம். அதனால் இந்த வழக்கு விசாரணையையும் இத்தாலியில் தான் நடத்த வேண்டுமாம். இப்படிச் சொல்லி தப்பிக்கப்பார்க்கிறது இத்தாலி. ஆனால் இந்தியா விடுவதாக இல்லை. இந்த விஷயத்தில் சற்று தீவிரமாகவே உள்ளது. இந்தியாவில்தான் விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகளை விசாரணைக்காக இத்தாலியிடம் ஒப்படைக்க முடியாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதுமட்டுமல்ல, விசாரணை பூர்த்தியடையும்வரை இத்தாலி காத்திருக்கத்தான் வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இத்தாலிய துணை வெளியுறவு அமைச்சர் மிஸ்த்ரா டெல்லி வந்து மத்திய வெளியுறவு இணை அமைச்சர் பிரினித் கவுரை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக இத்தாலியில் இருந்து உயர்மட்ட குழு ஒன்றும் டெல்லி வந்ததோடு, கேரளாவுக்கும் விரைந்துள்ளதாம். எது எப்படி இருந்தாலும் சரி, இந்த விவகாரத்தில் ஒரு கை பார்த்துவிடுவது என்பதில் உறுதியாக உள்ளது கேரள அரசு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தி.மலை கோவிலில் பரபரப்பு: போலீசார் - ஆந்திர பக்தர்களிடையே வாக்குவாதம்
06 Dec 2025திருவண்ணாமலை கோவிலில் போலீசார் மற்றும் ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது.
-
தங்கம் விலை உயர்வு
06 Dec 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையானது.
-
குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
06 Dec 2025சென்னை, சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025.
06 Dec 2025 -
ஒரேநாளில் இண்டிகோ 1,000 விமானங்கள் ரத்து
06 Dec 2025டெல்லி, ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் திணறி வருகிறது.
-
2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
06 Dec 2025இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் கருத்து
06 Dec 2025சென்னை, இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
-
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: காங்., மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை சந்திப்பு
06 Dec 2025திருச்சி, காங்கிரஸ் மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணி: 99.81 சதவீதம் பேருக்கு படிவங்கள் விநியோகம்
06 Dec 2025சென்னை, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு 99.81 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு வடிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் 2 பேர் விலகல்
06 Dec 2025கேப்டவுன் : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டோனி டி சோர்ஜி மற்றும் குவேனா மபாகா விலகியுள்ளனர்.
-
மேகதாது அணை திட்ட அறிக்கை: திருப்பி அனுப்பியது காவிரி மேலாண்மை ஆணையம்
06 Dec 2025தஞ்சாவூர், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்
-
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...!
06 Dec 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
மேலமடை சந்திப்பு மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2025சென்னை, இன்று திறந்து வைக்கப்படவுள்ள மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டிப் பெருமையடைகிறோ
-
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 265 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Dec 2025சென்னை, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட கடனுதவி என ரூ.26
-
வக்ப் உரிமையை காக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
06 Dec 2025சென்னை : வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்
06 Dec 2025புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
06 Dec 2025பெங்களூரு, காதலியுடன் ஆடம்பரமாக வாழவே திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸி., 511 ரன்களுக்கு ஆல்-அவுட்
06 Dec 2025பிரிஸ்பேன் : ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கு ஆல்-அவுடானது.
-
புதிய விதிகளை ஏற்க மறுப்பு: மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு 1,250 கோடி ரூபாய் அபராதம்
06 Dec 2025லண்டன், எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
இம்மாத இறுதியில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: தமிழகத்திற்கு அதிக மழை பொழிவு இருக்கும்
06 Dec 2025சென்னை, வடகிழக்கு பருவமழை காலத்தின் 3-வது புயல் சின்னம் தெற்கு வங்கக்கடலில் 23-ம் தேதிக்கு பிறகு உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர்
-
விஜய் - சக்கரவர்த்தி சந்திப்பு: செல்வப்பெருந்தகை கருத்து
06 Dec 2025சென்னை, விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
06 Dec 2025சென்னை, நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
இண்டிகோ விமான விவகாரம்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
06 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: விமான டிக்கெட் விலை கடும் உயர்வு
06 Dec 2025டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதையடுத்து விமான டிக்கெட்டின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து


