எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் ஆடு வளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது. குறைந்த எண்ணிக்கையில் ஆடுகளை வளர்த்து அதன் மூலம் வருவாய் பெறும் நிலை பெருமளவில் நிலவுகிறது. சிறு பண்ணையாளர்கள் வளர்ப்பு மாடுகளில் நோய் தாக்கம் ஏற்படும் போது நவீன மருத்துவ முறைகள் மற்றும் மருந்து பொருட்களால் அவர்களுக்கு அதிக பொருட்செலவு ஏற்படுகிறது.
கால்நடை வளர்ப்போர் தாங்களாகவே ஆண்டிபயாடிக் எனப்படும் எதிருயிரி மருந்துகளை பயன்படுத்துவதால் உயிர் கொல்லி எதிர்ப்பை உண்டாக்கும். அதாவது மருந்துகள் நோய் எதிர்ப்பு தன்மையை இழந்து விடுகின்றன. உணவு பயன்பாட்டிற்காக பராமரிக்கப்படும் கால்நடைகளில் உபயோகப்படுத்தப்படும் ஒவ்வொரு மருந்திற்கும் வித்டிராயல் பிரீயட் எனப்படும் விலக்கு காலம் கண்டிப்பாக அளிக்க வேண்டும்.
அதாவது கடைசியாக மருந்து உட்செலுத்திய பின் குறிப்பிட்ட கால அளவிற்கு கால்நடைகளிலிருந்து பெறப்படும் உணவு பொருட்களை பயன்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இல்லையெனில் இவற்றில் உள்ள மருந்துப் பொருட்களின் எச்சம் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தால் பரிந்துரைக்கப்படும் மரபுசார் மூலிகை மருத்துவ முறைகள் சிறு பண்ணையாளர்களுக்கு எளிய, அதிக பொருட் செலவில்லாத மருத்துவ முறையாக அமைவதுடன் மருத்துவப் பொருட்களின் எச்சங்கள் இல்லாத இறைச்சி உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. குடற்புழு நீக்கம் வளர்ந்த ஆடுகளுக்கு 2 அங்குல நீல சோற்றுக் கற்றாழையின் முள்ளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
வயிறு உப்புசம்
வெற்றிலை - 3, தரமான மிளகு - 10, பெருங்காயம் - 5 கிராம், இஞ்சி - 50 கிராம், சீரகம் அரை தேக்கரண்டி ஆகியவற்றை நன்றாக அரைத்து நாட்டு சர்க்கரை 50 கிராம் சேர்த்து சாப்பிட வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு வேளை என இரண்டு நாட்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த அளவு 5 ஆடுகளுக்கானது.
சளித் தொல்லை
துளசி, முருங்கை இலை தலா ஒரு கைப்பிடி, ஆடுதொடா, தூதுவளை தலா இரு இலை, மஞ்சள், மிளகு, சீரகம் தலா ஒரு தேக்கரண்டி ஆகியவற்றை அரைத்து அதோட 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒருவேளை என இரண்டு நாட்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த அளவு 5 ஆடுகளுக்கானது.
கழிச்சல்
சின்ன சீரகம், கசகசா, வெந்தயம் தலா 10 கிராம், மிளகு - 5 எண்ணிக்கை, மஞ்சள் தூள் 5 கிராம், பெருங்காயம் 5 கிராம் ஆகியவற்றை நன்கு கருகும் வரை வறுத்து நீர் தெளித்து இடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் 2 பல் வெங்காயம், 2 பல் பூண்டு, 10 கறிவேப்பிலை மற்றும் 100 கிராம் கருப்பட்டியுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி உப்பினில் தோய்த்து நாக்கின் மேல் தடவி உட் செலுத்த வேண்டும். இது நான்கு ஆடுகளுக்குத் தேவையான மருந்து.
பேன், உண்ணி
50 கிராம் வசம்பை தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைத்து நசுக்கி அதோடு நான்கு ஓமவல்லி இலை, தலா ஒரு கைப்பிடி தும்பை, வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து ஆட்டின் மேல் பூசி காயவிட வேண்டும். பிறகு தேங்காய் நாரால் தேய்த்து கழுவிவிட வேண்டும். மழைக்காலம்இ ஈரமான சூழ்நிலைகளில் இதனை தவிர்க்க வேண்டும்.
குளம்பு புண்
கால் குளம்பினை உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரினால் நன்கு கழுவி ஈரத்தை துடைக்க வேண்டும். பின்னர் தலா ஒரு கைப்பிடி துளசி மற்றும் குப்பைமேனி இலை, 4 பல் பூண்டு, 10 கிராம் மஞ்சள் தூள் ஆகிய பொருட்களை அரைத்து 100 மி.லி நல்லெண்ணெயில் வதக்கி ஆறியவுடன் குளம்பில் தடவவும்.
ஆட்டுக்கொல்லி நோய்
சீரகம், வெந்தயம், தலா 10 கிராம், மிளகு 5 எண்ணம் ஆகியவற்றை இடித்து மஞ்சள் தூள் 10 கிராம், பிரண்டை 5 கொழுந்து, பூண்டு 5 பல், முருங்கை இலை ஒரு கைப்பிடி 500 கிராம் கருப்பட்டி ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக நாக்கின் மேல் தேய்த்து கொடுக்க வேண்டும். இதனை நாளொன்றுக்கு மூன்று முறை அளிக்க வேண்டும்.
ஆட்டமை வாய்வழி மருந்து
சீரகம், வெந்தயம், மிளகு தலா 5 கிராம் தண்ணீரில் ஊற வைத்து அரைத்து ஐந்து கிராம் மஞ்சள்தூள், இரண்டு பல் பூண்டு, தலா ஒரு கைப்பிடி வேப்பிலை, முருங்கை, துளசி திருநீற்றுப்பச்சிலை இலை மற்றும் நிலவேம்பு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உப்பினில் தோய்த்து நாக்கின் மேல் தேய்த்து உட்செலுத்த வேண்டும்.
வெளிபூச்சு மருந்து
மேற்கூறிய மருந்து பொருட்களுடன் தலா ஒரு கைப்பிடி குப்பைமேனி, தும்பை சேர்த்து அரைத்து தலா 100 மி.லி விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் சேர்த்து காய்ச்சி ஆறியவுடன் அம்மை கொப்பளம் உள்ள இடங்களில் தடவ வேண்டும்.
கோமாரி
தலா ஒரு தேக்கரண்டி மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து அதோடு ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு பல் பூண்டு சேர்த்து அரைக்க வேண்டும். அரை மூடி தேங்காயைத் துருவி அரைத்து கலவையோடு சேர்த்து 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட கொடுக்க வேண்டும். இது 5 ஆடுகளுக்கான அளவு. நோய் தாக்கம் உள்ள போது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.
மூலிகை மருத்துவம் மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
பயன்படுத்தும் தாவரம் நச்சுத் தன்மை இல்லாதவை என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். மருந்துகளை புகட்டும் போது பனைவெல்லம் சேர்த்து பிசைந்து நாக்கின் மேல் சிறிது சிறிதாக தடவி உள்ளே புகட்ட வேண்டும். கால்நடைகளின் இருப்பிடத்தை (கட்டுத்தரை) சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை கட்டுத்தரையில் வசம்பு, மஞ்சள், பூண்டு ஊற வைத்து சுண்ணாம்பு நீர் கலந்து தெளித்து விட வேண்டும். கால்நடைகளுக்கு ஏற்ற எளிய முதலுதவி மூலிகை செடிகளை வீட்டில் வளர்த்து கால்நடைகளுக்கு எளிய மருத்துவ உதவி கிடைக்க செய்வோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை : பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
13 May 2025இஸ்லாமாபாத் : காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை.
-
பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை: சீனா திட்டவட்டம்
13 May 2025பீஜிங் : பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.
-
மேற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதலில்100-க்கும் மேற்பட்டோர் பலி
13 May 2025பமாகோ : மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
13 May 2025பாகிஸ்தான் : இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது.
-
சவுதி பட்டத்து இளவரசருடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு
13 May 2025ரியாத் : அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
-
எல்லை வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை
13 May 2025புதுடில்லி : சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் வான் பாதுகாப்பை வலுப்படுத்த, ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்குவதற்கான பேச்சுவார
-
கேரளாவில் ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல்
13 May 2025திருவனந்தபுரம் : அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா கோழிக்கோடு விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
-
எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது
13 May 2025ஸ்ரீநகர் : சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் பகுதிகளில் அதிமையான சூழ்நிலை நிலவுகிறது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
-
மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டிக்கு மே 15-ல் உள்ளூர் விடுமுறை
13 May 2025உதகை : உதகையில் மலர்க் கண்காட்சியையொட்டி, வருகிற மே 15 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆன்மிக குருவுடன் கோலி சந்திப்பு
13 May 2025இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (மே 12) அறிவித்தார்.
-
திடீர் ஓய்வு அறிவிப்பு: கோலி மீது பி.சி.சி.ஐ. அதிருப்தி
13 May 2025மும்பை : இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி கோலியின் ஓய்வு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பி.சி.சி.ஐ. கேட்டுக்கொண்டது.
-
இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?
13 May 2025மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
எங்களை சீண்ட வேண்டாம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
13 May 2025பிஜீங் : அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
-
நியூயார்க்கில் சாலை விபத்து: 2 இந்திய மாணவர்கள் பலி
13 May 2025நியூயார்க் : நியூயார்க்கில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: ஆஸி. - தென்ஆப்பிரிக்க அணிகள் அறிவிப்பு
13 May 2025மெல்போர்ன் : 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
-
தங்கம் விலை ரூ.400 சரிவு
14 May 2025சென்னை : சென்னையில் நேற்று (மே 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.70,440க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2025
14 May 2025 -
ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் மே 17-ல் தொடங்கும் : பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
13 May 2025மும்பை : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
-
நாளை வெளியாகும் சூரியின் மாமன்
14 May 2025காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருப்பவர் நடிகர் சூரி. அவர் நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் நாளை வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
-
வெற்றிவிழாவில் 'டூரிஸ்ட் பேமிலி' பட குழு
14 May 2025நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில்,' டூரிஸ்ட் ஃபேமிலி '.
-
வெற்றிவிழாவில் 'டூரிஸ்ட் பேமிலி' பட குழு
14 May 2025நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில்,' டூரிஸ்ட் ஃபேமிலி '.
-
'தி வெர்டிக்ட்' முன்னோட்டம் வெளியீடு
14 May 2025கொலையும் கொலை சார்ந்த புலனாய்வு கதையுமாக உருவாகியுள்ள 'தி வெர்டிக்ட்'. திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
-
கோடநாடு வழக்கிலும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
14 May 2025ஊட்டி : பொள்ளாச்சி வழக்கை போன்று கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
14 May 2025ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். கண்காட்சி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
-
சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு : ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்
14 May 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நேற்று (மே 14) பதவியேற்றுக் கொண்டார்.