எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம்-ரா மநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் அ.தி.மு.க.நிர்வாகி பா.ஜ.க. வேட்பாளரை வரவேற்று ஆதரவளித்ததால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் அவரை அரிவாளால் வெட்டியதில் படுகாயடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பாலைக்குடி. இந்த ஊர் தெற்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் முகம்மதுகாசிம்(வயது43). ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் பொருளாளரான இவர் நேற்று முன்தினம் இரவு அதேபகுதியை சேர்ந்த யூசுப் என்பவரால் அரிவாளால் வெட்டப்பட்டு இடது கையில் படுகாயமடைந்தார். அதிக ரத்தம் வெளியாகி உயிருக்குஆபத்தான நிலையில் அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளித்ததன் பயனாக ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டார். டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த முகம்மது காசிம் கூறியபோது, கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகளுடன் எங்கள் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது நான் எனது குடும்பத்துடனும், இஸ்லாமிய சகோதரர்களுடனும் சென்று சிறப்பான வரவேற்பு அளித்து ஆதரவை தெரிவித்தோம். இதனை பொறுக்க முடியாமல் பா.ஜ.க. வேட்பாளருக்கு எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்று விரோதம் கொண்டு தி.மு.க.வை சேர்ந்த யூசுப் என்பவர் இவ்வாறு கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இவ்வாறு கூறினார்.
இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முகம்மது காசிமை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் முன்னாள் தொகுதி செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அ.தி.மு.க-வினருடன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் அவர் கூறியதாவது:- திருப்பாலைக்குடி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது அப்பகுதி இஸ்லாமிய பெண்கள், பொதுமக்கள் திரளாக வந்து வரவேற்று பா.ஜ.க. வேட்பாளர் நயினார்நாகேந்திரனுக்கு தங்களின் ஆதரவினை தெரிவித்ததுடன் தங்களின் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர். திருப்பாலைக்குடி பகுதி திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும் அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தேர்தல் முடிந்ததும் நிச்சயம் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தேன். இதனை மகிழ்ச்சியுடன் அனைவரும் ஏற்று கொண்டனர். இவ்வாறு இஸ்லாமிய பெண்களும், பெருந்திரளான பொதுமக்களும் வந்து ஆதரவளித்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் கொலை முயற்சியில் இறங்கி உள்ளனர். இதுகுறித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதால் வாக்களிக்க வலியுறுத்தி வருவதை போல அதேபோல, வாக்காளர்களிடம் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் வாக்கு சேகரிப்பதும் ஜனநாயாக கடமையுடன், உரிமையாகும். அதனை தடுப்பது கடும் கண்டனத்திற்குரியது. தற்போதைய நிலையில் அ.தி.மு.க. ஆதரவு பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் நயினார்நாகேந்திரன் மக்களின் ஆதரவின் காரணமாக குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் விரக்தியில் தி.மு.க.வினர் இதுபோன்று செயல்பட்டு வருகின்றனர். தி.மு.க. ஒரு வன்முறை கட்சி. பிரியாணி கடையில் சாப்பிட்டுவிட்டு பணம்கொடுக்காமல் இருப்பது. புரோட்டா கடையில் வன்முறை, அழகு நிலையத்தில் தாக்குதல் என வன்முறையில் ஊறிய கட்சி. வன்முறை என்பது இருபக்கமும் கூரிய ஆயுதம். அதனை யாரும் கையில் எடுக்க கூடாது. பொதுவாகவே அ.தி.மு.க வன்முறைக்கு எதிரான கட்சி. வன்முறையை ஒருபோதும் அ.தி.மு.க ஆதரிக்காது. ஆனால் தி.மு.க. வன்முறையாலேயே வளர்ந்த கட்சி. இதுகுறித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-07-2025.
10 Jul 2025 -
பிரேசிலுக்கு 50 சதவீத வரி: ட்ரம்ப் முடிவுக்கு அதிபர் லூலா டி சில்வா எதிர்ப்பு
10 Jul 2025வாஷிங்டன், பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவ
-
சேலம் முத்துமலை முருகன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
10 Jul 2025சென்னை, சேலம் முத்துமலை முருகன் கோயிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.
-
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் சூழல் இல்லை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
10 Jul 2025புதுச்சேரி, புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறும் சூழல் ஏதுமில்லை என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? தமிழக அரசுக்கு விஜய் கண்டனம்
10 Jul 2025சென்னை, “மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா?” என தி.மு.க. அரசுக்கு த.வெ.க.
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேர் சென்னை ஐகோர்ட்டில் ஆஜர்
10 Jul 2025சென்னை, பா.ஜ.க. தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
-
நேரில் ஆஜராகி மன்னிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து
10 Jul 2025சென்னை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திரும்பப்
-
கடலூர் ரயில் விபத்து: தனியார் பள்ளிக்கு கல்வித் துறை நோட்டீஸ்
10 Jul 2025கடலூர், கடலூர் ரயில் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
சூதாட்ட செயலி விளம்பரம்: நடிகர்கள் 29 பேருக்கு சிக்கல்
10 Jul 2025புதுடெல்லி, சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, பிரணீதா உட்பட 29 நடிகர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப
-
தமிழகத்தின் பெருமையை மறைக்க கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கின்றனர்: மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
10 Jul 2025திருவாரூர், தமிழகத்தின் பெருமையை மறைக்க கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கின்றனர் என்று திருவாரூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மத்திய அரசு மீது முதல்வ
-
மைசூரு மருத்துவமனைகளில் இதய பரிசோதனைக்காக குவியும் மக்கள்
10 Jul 2025மைசூரு, மைசூரு மருத்துவமனைகளில் இதய பரிசோதனைக்காக குவிந்து வரும் மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு
10 Jul 2025வடோதரா, குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
-
தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை நீக்கும் பணி தொடக்கம்
10 Jul 2025சென்னை, இந்திய தேர்தல் ஆணையம், பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
-
காவி உடை அணியும் நிலைக்கு மாறி விட்டார் இ.பி.எஸ். அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
10 Jul 2025அரியலூர், கோவில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் பழனிசாமி, வெள்ளை வேட்டிக்குப் பதிலாக காவி உடை அணியும் நிலைக்கு மாறிவிட்டார் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்க
-
காரைக்காலில் மாங்கனித் திருவிழா: மாங்கனிகளை வீசி வழிபட்ட பக்தர்கள்
10 Jul 2025காரைக்கால், காரைக்காலில் நடந்த திருவிழாவில், பக்தர்கள் மாங்கனிகளை வீசி வழிபாடு நடத்தினர்.
-
கோவை குண்டுவெடிப்பு வழக்கு: 28 ஆண்டுகளுக்கு பிறகு தேடப்பட்ட நபர் கைது
10 Jul 2025கோவை, கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர், கர்நாடகா மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
-
27 நாடுகளின் உயரிய விருதுகள்: பிரதமருக்கு பவன் கல்யாண் வாழ்த்து
10 Jul 2025புதுடெல்லி, பிரேசில், கானா, நமீபியா உட்பட 27 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்றிருப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்
-
நாமக்கல்லில் 40.86 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் வழங்கினார்
10 Jul 2025சென்னை, நாமக்கல்லில் ரூ. 40.86 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
-
1,996 காலியிடங்களுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி: போட்டித்தேர்வு நாள் அறிவிப்பு
10 Jul 2025சென்னை, அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1,996 காலியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள
-
கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
10 Jul 2025சென்னை, நெல்லையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
அன்புமணி இனி என் பெயரை பயன்படுத்தக் கூடாது: ராமதாஸ்
10 Jul 2025கும்பகோணம், ‘என் பேச்சை கேட்காதவர்கள் என் பெயரை பயன்படுத்தக்கூடாது.
-
கனிம வகைகளை பெற ஆஸி.யிடம் இந்தியா பேச்சுவார்த்தை
10 Jul 2025புதுடெல்லி, ஆஸ்திரேலியாவிடம் இருந்து அரிய வகை கனிம வகைகளை பெற இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
-
கடலூர் ரயில் விபத்து: திருச்சியில் விசாரணையை தொடங்கியது சிறப்பு குழு
10 Jul 2025திருச்சி, கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில், 11 பேரிடம் திருச்சியில் சிறப்புக்குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
-
கேரள நர்ஸ் மரண தண்டனையை தடுக்க கோரி மனு:சுப்ரீம்கோர்ட் இன்று விசாரணை
10 Jul 2025புதுடெல்லி, கேரள நர்ஸ் நிமிஷா பிரியா தரப்பு மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
-
முதல்முறையாக இங்கி.,க்கு எதிரான மகளிர் டி-20 தொடரை வென்று இந்திய அணி சாதனை
10 Jul 2025லண்டன், இங்கிலாந்து மகளிருக்கு எதிரான டி20 தொடரினை முதல்முறையாக இந்திய மகளிரணி வென்று இந்திய மகளிர் அணி சாதனைவென்ற சாதனை படைத்துள்ளது.