எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : டெல்லியில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தில் பாராளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதாவது நாட்டின் பிரதமராக அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு கூட்டணி தலைவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பிறகு ஜனாதிபதி மாளிகை சென்ற மோடி, அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் ஆதரவு கடிதங்களையும் ஜனாதிபதியிடம் மோடி வழங்கினார். வரும் 30-ம் தேதி அவர் பிரதமராக பதவியேற்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அமோக வெற்றி
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 303 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் அதிகமாக இடங்களை கைப்பற்றி உள்ளது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி எதிர்பாராத விதமாக படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து அவர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பினார். ஆனால் அவரது கோரிக்கை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றம்...
முன்னதாக நேற்று பிரதமர் மோடி புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைப்பது குறித்தும் 17-வது மக்களவையை உருவாக்குவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை சென்ற பிரதமர் மோடி அங்கு ஜனாதிபதியை சந்தித்து 16-வது மக்களவையை கலைக்கும் படி பரிந்துரை செய்தார். அந்த கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி நேற்று 16-வது மக்களவையை கலைத்து உத்தரவிட்டார்.
எம்.பி.க்கள் கூட்டம்
இந்நிலையில் நேற்று பிரதமர் தேர்வு, புதிய அரசு பொறுப்பேற்பு ஆகியவற்றுக்காக பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வந்தார். அப்போது அவருக்கு கரகோஷத்துடன் புதிய எம்.பி.க்கள் வரவேற்பு அளித்தனர். பிறகு தே.ஜ. கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற குழு தலைவர் பதவிக்கு மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி ஆகியோர் முன்மொழிந்தனர்.
ஏகமனதாக தேர்வு
இதை ஏற்று நரேந்திர மோடியை பாராளுமன்ற குழு தலைவராக தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். அப்போது அரங்கு நிறைந்த கரவொலி எழுந்தது. இதையடுத்து தலைவர்கள் அனைவரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். முதலில் அமித்ஷா மோடிக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பூங்கொத்து கொடுத்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவரது காலில் விழுந்து மோடி ஆசி பெற்றார். அவரை தொடர்ந்து மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரது காலிலும் விழுந்து மோடி ஆசி பெற்றார்.
பிறகு கட்சித் தலைவர்களான ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி, பீகார் முதல்வர் நிதீஷ்குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரிசையாக வந்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
வாழ்த்தி பேச்சு...
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மோடியை வாழ்த்தி பேசினார். அப்போது பேசிய அவர், புதிய அரசுக்கு அ.தி.மு.க. எப்போதும் ஆதரவளிக்கும். என்றும் அரசுக்கு துணை நிற்கும் என்றும் பேசினார். தலைவர்களின் வாழ்த்துக்களை மோடி ஏற்றுக் கொண்டார். பிறகு பேசிய அவர், புதிய எம்.பி.க்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், பா.ஜ.க.வின் வெற்றியை உலகத்தில் உள்ள இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில்உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், ஸ்மிருதி இராணி, சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு ஜனாதிபதி மாளிகை சென்ற நரேந்திரமோடி அங்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் ஆதரவு கடிதங்களையும் ஜனாதிபதியிடம் மோடி வழங்கினார். வரும் 30-ம் தேதி அவர் பிரதமராக பதவியேற்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் துணை ஜனாதிபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களும் பங்கேற்பு
29 Oct 2025மதுரை, இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை, துணை முதல்வர் உதயநிதி உள்ள
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
ரபேல் போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி முர்மு
29 Oct 2025சென்னை : ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரெளபதி பறந்தார்.
-
தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
29 Oct 2025தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட்: வரும் 1-ம் தேதி கவுண்ட்டவுன் துவக்கம்
29 Oct 2025ஆந்திரா : ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது வருகிற 1-ந்தேதி முதல் கவுண்ட்டவுன் தொடங்கப்பட உள்ளது.
-
ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
29 Oct 2025டெல்லி : ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.
-
வலிமையான, போற்றத்தக்க தலைவர்: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
29 Oct 2025சியோல் : இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என
-
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை: தமிழக அரசு அறிவிப்பு
29 Oct 2025சென்னை : மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மாணவியின் கனவு இல்லத்தை பார்வையிட்ட முதல்வர் ஆய்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ
-
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ரோகித்; சச்சின் சாதனை முறியடிப்பு
29 Oct 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர்: நிதீஷ் குமார் ரெட்டி விலகல்
29 Oct 2025பெர்த், : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டி விலகியுள்ளார்.
-
கலைஞரின் கனவு இல்ல ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Oct 2025சென்னை : கலைஞரின் கனவு இல்லத்தின் 1 லட்சமாவது பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
ஜமைக்காவை புரட்டி போட்ட மெலிசா புயல்
29 Oct 2025வாஷிங்டன் : 300 கி.மீ. வேகத்தில் ஜமைக்காவை புரட்டி போட்ட மெலிசா புயல் குறித்து உசேன் போல்ட் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
-
டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வி
29 Oct 2025டெல்லி : டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வியடைந்தது.
-
இந்தியா வருகிறார் இஸ்ரேல் அமைச்சர்
29 Oct 2025புதுடெல்லி : இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகிறார்.


