எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டிங்காம் : உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இன்று மோதும் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
ரவுண்டு ராபின்....
12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் ஒரு ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 9 ஆட்டம் இருக்கும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
தொடர் வெற்றி...
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 36 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இந்திய அணி 3-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை இன்று (13-ம் தேதி) எதிர்கொள்கிறது. நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.
சவாலான ஒன்று...
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். நியூசிலாந்து அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. தான் மோதிய 3 ஆட்டத்திலும் வென்று இருந்தது. இதனால் அந்த அணியை வீழ்த்துவது சவாலாக விளங்கும்.
ஆனால் அதே நேரத்தில் நியூசிலாந்து பெரிய அணிகளுக்கு எதிராக இந்த வெற்றியை பெறவில்லை. இதனால் நம்பிக்கையுடன் இந்திய அணி விளையாடும்.
அணிக்கு பின்னடைவு...
தொடக்க வீரர் தவான் காயம் அடைந்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாகும். பெருவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் அவர் 2 போட்டிகளில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நாடு திரும்ப மாட்டார் என்பதால் மாற்று வீரர் அனுப்பப்படமாட்டார். தவான் இன்றைய போட்டியில் ஆட மாட்டார் என்பதால் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக லோகேஷ் ராகுல் விளையாடுகிறார். அவர் தற்போது 4-வது வரிசையில் விளையாடி வருகிறார்.
தினேஷ் கார்த்திக்...
இதனால் 4-வது வரிசையில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும். தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்தவர். விஜய் சங்கர் ஆல்ரவுண்டர் வரிசையில் ஜொலிக்க கூடியவர். இருவரும் உலக கோப்பையில் இதுவரை விளையாடவில்லை. அதே நேரத்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆல்ரவுண்டரில் முத்திரை பதிக்கக்கூடியவர். மேலும் அனுபவம் வாய்ந்தவர். இதனால் ஜடேஜா முன்னுரிமையில் இருக்கிறார். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து வீரர்கள் தேர்வு இருக்கும்.
வலுவான பேட்டிங்...
இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது. ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, டோனி, ராகுல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இதேபோல பந்து வீச்சும் நேர்த்தியுடன் இருக்கிறது. வேகப்பந்தில் பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோரும் சுழற்பந்தில் யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரும் திறமையாக வீசி வருகிறார்கள்.
குல்தீப் யாதவ்...
பந்து வீச்சாளர்கள் நல்ல நிலையில் இருப்பதால் அணியில் மாற்றம் செய்யப்படமாட்டாது. இதனால் முகமது சமிக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் கூடுதல் சாதகமாக இருந்தால் குல்தீப் யாதவ் இடத்தில் அவர் தேர்வாகலாம்.
நியூசி. ஆர்வம்...
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் வங்காள தேசத்தை 2 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
ஹென்றி, ஜேம்ஸ்...
நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன், காலின் முன்ரோ குப்பில் ஆகியோரும், பாபவசல் டிரான்ட் போல்ட், ஹென்றி, ஜேம்ஸ் நிசம் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். நியூசிலாந்து மிகப்பெரிய அணியுடன் தற்போது மோதுவதால் மிகவும் கவனத்துடன் விளையாடும். அதேநேரத்தில் இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் அந்த அணி வீரர்கள் திறமையாக ஆடக் கூடியவர்கள்.
மழை அச்சுறுத்தல்...
இன்றைய ஆட்டத்திலும் மழை அச்சுறுத்தல் இருக்கிறது. பிற்பகல் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் கடைசியாக இந்த ஆண்டு ஜனவரி- பிப்ரவரி மாதம் நியூசிலாந்தில் ஒரு நாள் தொடரில் மோதின. இதில் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-07-2025.
09 Jul 2025 -
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
ராஜஸ்தானில் பயங்கரம்: இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து - இருவர் பலி
09 Jul 2025ஜெய்பூர் : ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.