எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடிஸ் அபாபா : எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரோமியா பிராந்தியத்தில் உள்ள மெட்டு நகரை சேர்ந்த பெண் அல்மாஸ் டெரீஸ் (வயது 21). மேல்நிலை படிப்பு படித்து வரும் இவர், திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமானார். இந்த நிலையில், பிரசவம் நடப்பதற்கு முன்னரே பள்ளி தேர்வுகளை எழுதி முடித்து விட வேண்டும் என தீர்மானித்திருந்தார். ஆனால் ரம்ஜான் பண்டிகை காரணமாக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.
கடந்த திங்கட்கிழமை தேர்வு எழுத செல்வதற்கு முன்பு அல்மாஸ் டெரீசுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதே சமயம் குழந்தை பிறந்த காரணத்தால் பள்ளிப்படிப்பை கைவிட விரும்பாத அல்மாஸ் டெரீஸ், தேர்வுகளை எழுதுவதில் விடாப்பிடியாக இருந்தார். எனவே அவரது கணவர் தடீஸ் துலு, அல்மாஸ் டெரீஸ் படிக்கும் பள்ளி நிர்வாகிகளிடம் பேசி, மருத்துவமனையிலேயே அவர் தேர்வு எழுத ஒப்புதல் பெற்றார்.
அதன்படி குழந்தை பெற்றெடுத்த அரை மணி நேரத்துக்குள்ளாக மருத்துவமனை படுக்கையில் இருந்தபடியே அல்மாஸ் டெரீஸ் தனது தேர்வுகளை எழுதினார். ஒரே நாளில் ஆங்கிலம், அம்ஹாரிக், கணிதம் உள்ளிட்ட தேர்வுகளை அவர் எழுதினார். அடுத்த 2 நாட்களில் நடக்கும் தேர்வுகளை அவர் தேர்வு மையத்துக்குச் சென்று எழுத இருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


