எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிக்கிம் வடக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் டீஸ்டா நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அங்கு சிக்கி தவித்துள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. டீஸ்டா நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சங்தாங் - லச்சென் - தாங்கு இடையே பல்வேறு பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டுள்ளது. லேச்சன் பகுதியில் இருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஸிமா என்ற இடத்தில் மட்டும் 250 முதல் 300 சுற்றுலா பயணிகள் வரை சிக்கிக் கொண்டனர். நீர் சூழ்ந்த விடுதிகளில் இருந்த வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்டு லச்சென் பகுதிக்கு அனுப்பி வைப்பதற்கான பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வடக்கு சிக்கிமில் மோசமான வானிலை நிலவுவதால் லச்சென், லச்சங், டிசோங்கு ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை பொதுமக்கள் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


