எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : கடலில் கலக்கும் வெள்ள உபரி நீரை சேமிக்க காவிரி ஆற்றின் குறுக்கே 5 தடுப்பணைகள் கட்டப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்,
குடிமராமத்து பணிகள் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித்துணைத் தலைவர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. உறுப்பினர் கே.என்.நேரு ஆகியோருக்கு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த பதில் வருமாறு:-
குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2016-2017 ஆம் ஆண்டில் 30 மாவட்டங்களில் 1,519 பணிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த 10.3.2017-ல் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் ஏரியில் குடிமராமத்துப் பணிகளை துவக்கி வைத்தேன். இக்குடிமராமத்துப் பணிகளில் விவசாய சங்கங்கள் அல்லது பாசன சபைகள் அல்லது ஆயக்கட்டுதாரர் மற்றும் ஆயக்கட்டுதாரர்களின் தொகுப்பினர் பணத்தட்டுப்பாடின்றி ஆரம்ப கட்ட பணிகளை தொடங்குவதற்கும், பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு முடிக்கவும் ஏதுவாக ஒப்பந்த மதிப்பில் 15 விழுக்காட்டினை முன்பணமாக வழங்கவும் அதனை 3 தொடர் பட்டியல்களில் பிடித்தம் செய்யவும் 29.10.2018 அன்று அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
நீர்வள ஆதாரத் துறையின் 15 வட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் குடிமராமத்துப் பணிகள் ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டன. 2019-2020 ஆம் ஆண்டில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 1,829 குடிமராமத்துப் பணிகளுக்கு 499.688 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பணிகள் துவங்கப்பட்டு முன்னேற்றத்தில் உள்ளன. இத்திட்டத்தினை கண்காணித்து செயல்படுத்த பாலாஜி, ஐ.ஏ.எஸ். சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 8 ஓய்வுபெற்ற பணியிலுள்ள பொறியாளர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் குழுக்களை அமைத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பணிகளை தொய்வின்றி செயல்படுத்த மாவட்ட அளவிலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவேரி ஆறு கர்நாடகாவில் உள்ள குடகு மலையில் தலைக்காவிரி என்னும் இடத்தில் ஆரம்பித்து 320 கி.மீ தூரத்தில் தமிழக எல்லையில் மஞ்சகொண்டப்பள்ளி என்ற இடத்தில் வந்தடைகிறது. அதன்பின் தமிழகத்தில் 77 கி.மீ பயணித்து மேட்டூர் அணையை வந்தடைகிறது. தமிழ்நாட்டில் மேட்டூரிலிருந்து ஆரம்பித்து 338 கி.மீ தூரம் பயணித்து நாகை மாவட்டம் பூம்புகார் கிராமத்தில் கடலில் கலக்கும் இடம் வரை கீழ்க்கண்ட கட்டமைப்புகளின் மூலம் வெள்ள உபரிநீர் சேமிக்கப்படுகிறது.
மின்சார வாரியத்தால் கட்டப்பட்டுள்ள ஏழு தடுப்பணைகள் மூலம் 3.88 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் மாயனூர் கதவணையின் மூலம் 1.04 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு தடுப்பணையின் மூலம் 0.25 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணையின் மூலம் 0.27 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அணைக்கரை தடுப்பணையின் மூலம் 0.83 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. காவேரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் மேற்கண்ட கட்டமைப்புகள் மூலம் மொத்தம் 6.27 டி.எம்.சி வெள்ள மிகைநீர் சேமிக்கப்படுகிறது. மேலும் கொள்ளிடம் ஆற்றில் நாகை மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு இடையே ஆதனூர் ¬- குமாரமங்கலம் என்ற இடத்தில் தடுப்பணை அமைக்க ரூ. 428.00 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 0.32 டி.எம்.சி வெள்ள மிகைநீர் சேமிக்கப்படும்.
கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு இடையே நஞ்சை புகளூர் கிராமத்தில் காவேரியின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கு ஆய்வு முடிக்கப்பட்டு விபர மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 0.5 டி.எம்.சி வெள்ள மிகைநீரை சேமிக்க இயலும். மேலும் காவேரி ஆற்றின் குறுக்கே கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கிடையே ஒருவந்தூர் கிராமத்திலும், கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு இடையே முசிறி கிராமத்திலும் கதவணை அமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கிடையே தூத்தூர் - வாழ்க்கை கிராமத்திலும், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கிடையே கருப்பூர் - மாதிரி வேலூர் கிராமத்திலும் மற்றும் அளக்குடி கிராமத்திலும் தடுப்பணை அமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆக மொத்தம் ஐந்து தடுப்பணைகள் கட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் 1.80 டி.எம்.சி வெள்ள மிகை நீரை சேமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 14 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.