எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : ரூபாய் இரண்டாயிரம் கோடியில் சென்னைக்கு அருகே உணவுப் பூங்கா அமைக்கப்படவுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம், சங்ககிரி சட்டமன்றத் தொகுதி, தாரமங்கலம் புதிய புறவழிச் சாலை மற்றும் மேம்பாலங்களை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
இந்தியாவின் ராணுவத் தளவாடங்களுக்கான உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்வதற்கு மிகப்பெரிய தொழிற்சாலையை சேலம் ஸ்டீல் பிளாண்ட் பகுதியில் உள்ள ஒரு பகுதி நிலத்தில் மத்திய அரசு அமைக்க இருப்பதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது ஒரு வரப்பிரசாதமான திட்டம், இதனையும் அம்மாவின் அரசு தான் கொண்டு வந்திருக்கிறது. குடிநீருக்காக கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். தற்போது, நீர்மேலாண்மை மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. விவசாயத்திற்கு தேவையான நீர், குடிப்பதற்கான பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆகியவை விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், பொதுமக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையில், ஆங்காங்கே இருக்கின்ற ஏரிகளை விவசாய சங்கங்களிடம் ஒப்படைத்து, விவசாயிகளின் பங்களிப்போடு உருவாக்க வேண்டுமென்று, குடிமராமத்துத் திட்டத்தினை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். விவசாய அமைப்புகளும் தங்களுடைய ஆதரவினை நல்கி இத்திட்டம் சிறப்பாக செயல்பட உதவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இத்திட்டத்தின் மூலம் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படுவதால் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து தங்கள் நிலங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேட்டூர் அணையில் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் அம்மாவினுடைய அரசு தாரளமாக அனுமதி வழங்கியிருக்கின்றது. ஓமலூர் பகுதி விவசாயிகள் மலர்களை அதிகளவில் பயிரிட்டு பெங்களூரில் விற்பனை செய்கின்றார்கள். அதற்குத் தகுந்த விலை கிடைப்பதில்லை. எனவே, அம்மாவின் அரசால் சர்வதேச அளவில் மலருக்கான ஏலமய்யம் ஒன்றை ஓசூரில் ஏற்படுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளேன். விவசாயிகளுக்குத் தேவையான விலை கிடைக்காத காலங்களில் அங்குள்ள குளிர்பதனக் கிடங்குகளில் மலர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். விவசாயிகளுக்கு அங்கே ஓய்வு அறைகளும் கட்டிக் கொடுக்கப்படும். சர்வதேச அளவில் வருகை புரியும் வியாபாரிகளுக்கும் தங்குவதற்கு தேவையான ஓய்வு அறைகளும் கட்டிக் கொடுக்கப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமென்பதற்காக ஓமலூரிலிருந்து மேச்சேரி செல்கின்ற சாலையில் பிரம்மாண்டமான கட்டிடம் கட்டப்படும். அதில், விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருள்களை அந்த மார்கெட்டில் ஆன் - லைன் மூலமாக விற்பனை செய்து கொள்ளலாம். அப்படியும் விலை கட்டுப்படியாகாத காலங்களில் அங்குள்ள குளிர்பதனக் கிடங்கில் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். அதற்கு வாடகை ஏதுமில்லை, இங்கு ஏ.டி.எம். வசதியும் செய்து கொடுக்கப்படும்.
சென்னைக்கு அருகே ரூபாய் இரண்டாயிரம் கோடியில் உணவுப் பூங்கா அமைக்கவிருக்கின்றோம். விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களை உணவுப் பூங்காவில் விற்பனை செய்கின்ற பொழுது உரிய விலை கிடைக்கும். வறட்சியால் பாதிக்கப்படுகின்ற விவசாய நிலங்களுக்கு சொட்டுநீர்ப் பாசன கருவிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஒரு ஏக்கர் வைத்திருப்பவர்களுக்கு 100 சதவிகித மானியம் கொடுக்கின்றோம். ஒரு ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு 75 சதவிகித மானியத்தில் கொடுக்கின்றோம். விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்க வேண்டுமென்று பிரதமர் சொல்லியிருக்கின்றார். எனவே அம்மாவின் அரசு விவசாயிகளின் நலன் காக்கின்ற அரசாக இருக்கின்றது. தொழில் வளம் பெருக, விவசாயம், ஜவுளித் தொழில் இரண்டும் சிறக்க, கைத்தறி நெசவாளர்களுக்கு நிறைய சலுகைகளை கொடுத்திருக்கின்றோம். பொங்கல் திருநாளன்று அணிவதற்கு பொது மக்கள் கைத்தறி வேட்டி, சேலைகள் நெய்வதற்கான கூலியை உயர்த்திக் கொடுத்திருக்கின்றோம். புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவதன் மூலமாக அதிகமான வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும் அம்மாவின் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது மக்களின் அரசு, விவசாயிகளின் அரசு, அம்மாவினுடைய அரசு. விவசாயிகளின் நலனை தலையாய கடமையாகக் கொண்டிருக்கின்றது. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற அரசு அம்மாவினுடைய அரசு. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் துணை ஜனாதிபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களும் பங்கேற்பு
29 Oct 2025மதுரை, இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை, துணை முதல்வர் உதயநிதி உள்ள
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2025.
29 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
29 Oct 2025தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
ரபேல் போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி முர்மு
29 Oct 2025சென்னை : ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரெளபதி பறந்தார்.
-
வலிமையான, போற்றத்தக்க தலைவர்: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
29 Oct 2025சியோல் : இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என
-
ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
29 Oct 2025டெல்லி : ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை: தமிழக அரசு அறிவிப்பு
29 Oct 2025சென்னை : மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட்: வரும் 1-ம் தேதி கவுண்ட்டவுன் துவக்கம்
29 Oct 2025ஆந்திரா : ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது வருகிற 1-ந்தேதி முதல் கவுண்ட்டவுன் தொடங்கப்பட உள்ளது.
-
மாணவியின் கனவு இல்லத்தை பார்வையிட்ட முதல்வர் ஆய்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ரோகித்; சச்சின் சாதனை முறியடிப்பு
29 Oct 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர்: நிதீஷ் குமார் ரெட்டி விலகல்
29 Oct 2025பெர்த், : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டி விலகியுள்ளார்.
-
வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விண்ணப்பிக்கிறார் விஜய்?
29 Oct 2025சென்னை : வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விஜய் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கலைஞரின் கனவு இல்ல ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Oct 2025சென்னை : கலைஞரின் கனவு இல்லத்தின் 1 லட்சமாவது பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: வரும் 2-ம் தேதி அனைத்து கட்சிக்கூட்டம்
29 Oct 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான வரும் 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.


