Idhayam Matrimony

சவுதி சிறை பிடித்த ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு

திங்கட்கிழமை, 22 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

டெஹ்ரான் : மூன்று மாதங்களுக்கு முன் சிறை பிடித்த ஈரான் எண்ணெய் கப்பலை சவுதி அரேபியா விடுவித்துள்ளது.

சூயஸ் கால்வாய் நோக்கி 6 ஊழியர்களுடன் புறப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலான `ஹேப்பினஸ் 1, கடந்த ஏப்ரல் 30-ம் தேதி, செங்கடல் பகுதியை கடந்த போது இன்ஜினுக்குள் கடல்நீர் புகுந்ததில் இன்ஜின் பழுதாகி கட்டுப்பாட்டை இழந்து நின்றது. இந்த கப்பல் சவுதி அரேபியா கடலோர காவல்படையினரால் கடந்த மே மாதம் சிறை பிடிக்கப்பட்டது. இதன் பராமரிப்பு செலவாக ஈரான் நாளொன்றுக்கு 1.38 கோடி அளிக்க சவுதி வலியுறுத்தியது. இந்நிலையில், ஏறக்குறைய சிறைபிடிக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில், ஈரான் எண்ணெய் கப்பலை சவுதி விடுவித்தது. இது தொடர்பாக ஈரான் போக்குவரத்துத் துறை அமைச்சர் முகமது இஸ்லாமி கூறுகையில், சவுதியுடனான பேச்சுக்கு பின்னர் எண்ணெய் கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அது பெர்சியன் வளைகுடாவை கடந்துள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து