எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.22 - சேதுசமுத்திர திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியிருப்பது அதன் அக்கறையற்ற போக்கையும், ஊசலாட்டத்தையுமே வெளிப்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேது சமுத்திரத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யாமல் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்று சொல்வது திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசின் அக்கறையற்ற போக்கையும், ஊசலாட்டத்தையுமே வெளிப்படுத்துகிறது. இது சேது சமுத்திர திட்டத்தை முடக்க முனைவோருக்கு துணை நிற்கும் செயலாகும். இந்த தவறான நிலைபாட்டை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
எனவே, மதவாத சக்திகளின் சீர்குலைவு நடவடிக்கைகளுக்கு இடம் தராமல், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெருமளவு உதவிடும் சேது சமுத்திர திட்டத்தை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள வழித்தடத்திலேயே நிறைவேற்றிட உறுதியான நிலையெடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


