எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : 17-ம் தேதி ஆகம விதிப்படி அத்திவரதர் சிலை குளத்தில் வைக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரும் 16-ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடிகிறது. 17-ம் தேதி ஆகம விதிப்படி அத்திவரதர் சிலை குளத்தில் வைக்கப்படும். வந்தவாசி திருவண்ணாமலையில் இருந்து வரும் பக்தர்கள் டி.ஏ.வி பள்ளி அருகே தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 80 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். அத்திவரதரை தரிசனம் செய்த பக்தர்கள் அளித்த காணிக்கை மூலமாக ரூ.5 கோடி கிடைத்துள்ளது.
பக்தர்கள் வரும் வழிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கார் பார்க்கிங் பகுதி அருகே பக்தர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை முதல் இரவு வரை அன்னதானம், கழிவறை, குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் அத்திவரதர் கோவில் பாதுகாப்பு பணியில் குளறுபடி இருந்ததால் கோபப்பட்டுவிட்டேன். காவல்துறையினரை பற்றி தவறாக பேசியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பும் செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அத்தி வரதர் தரிசிக்க வரும் பக்தர்களிடம் அனுமதி சீட்டு பெற்ற பிறகு தரிசிக்க அனுப்ப வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கூறியும் சிலர் இதை கடைபிடிப்பது இல்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் காவல்துறை உட்பட பலரை கண்டித்தார். இதனால் சில காவலர்கள் உட்பட பலர் சமூக வலைத்தளங்களில் ஆட்சியரை பற்றி விமர்சனம் எழுப்பினர். பணிகள் சரியாக நடக்க வேண்டும் என்பதால் சில விஷயங்களில் கண்டிக்கக் கூடிய சூழல் உள்ளது. இது தொடர்பாக மீம்ஸ்களை பரப்ப வேண்டாம் உணர்வுப் பூர்வமாகப் பேசப்பட்ட வார்த்தைகளை பெரிதுப்படுத்த வேண்டாம் எனவும், எனது பேச்சு தனிப்பட்ட நபருக்கு எதிரானது கிடையாது.
பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களை தங்க வைத்து அனுப்புவதற்காக கீழம்பி, பி.ஏ.வி. பள்ளி அருகேயும், பச்சையப்பன் பள்ளி மைதானத்திலும் இளைப்பாறும் கூடங்கள் அமைத்துள்ளோம். அங்கிருந்து தமிழக முதல்வர் உத்தரவு படி 25 மினி பேருந்துகள் இயக்கப்படும். காவலர்கள் எண்ணிக்கை 12,500 ஆக உயர்த்தப்படும் என்று கலெக்டர் பொன்னையா, போலீஸ் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியின்போது தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


