எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்ச் - 27 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கில் இம்மாத இறுதியில் தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட இருக்கும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தி.மு.க.வின் கலைஞர் டி.வி.யும் இடம் பெறும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2008-ம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம்சாட்டியிருந்தது. இதை அடுத்து சி.பி.ஐ. மேற்கொண்ட விசாரணையை அடுத்து அந்த ஒதுக்கீடுகளை செய்த அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இதை அடுத்து ஆ.ராசா டெல்லியில் உள்ள அதிக பாதுகாப்பு மிகுந்த திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் வருகிற 31-ம் தேதி டெல்லியில் தனிக்கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது அப்போதைய உதவியாளர்கள் ஆர்.கே.சந்தோலியா, சித்தார்த் பெஹூரா, தொழில் அதிபர் ஷாகீத் உஸ்மான் பல்வா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பலன் அடைந்த ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஒயர்லஸ் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெறும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குற்றப்பத்திரிகைக்கு இறுதி வடிவம் கொடுத்து வரும் சி.பி.ஐ. தனது ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யாது என்றும் அதற்கு பதிலாக டெல்லி தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில் தி.மு.க.வின் கலைஞர் டி.வி.யின் பெயரும் இடம் பெறும் என்றும் சி.பி.ஐ.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2 ஜி.ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பெறப்பட்ட பணத்தில் ரூ.214 கோடியை கலைஞர் டி.வி. பெற்றுள்ளது . ஆனால் அந்த பணத்தை திருப்பி செலுத்தி விட்டதாக கலைஞர் டி.வி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
என்றாலும் இந்த பணம் எதற்காக கொடுக்கப்பட்டது என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் கலைஞர் டி.வி.யின் தலைமை செயல் அதிகாரி சரத்குமார் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என்றும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த குற்றப்பத்திரிகையில் தி.மு.க. எம்.பி.யும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழி பெயர் சேர்க்க இதுவரை சி.பி.ஐ. எந்த முடிவும் எடுத்ததாக தெரியவில்லை ஆனால் இந்த விஷயம் தொடர்பான சட்ட ஆலோசனை கிடைத்த பிறகே சி.பி.ஐ. இறுதி முடிவை எடுக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த வழக்கில் சி.பி.ஐ. தனது முதலாவது குற்றப்பத்திரிகையை இம்மாதம் 31-ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய எல்லா விதத்திலும் தயாராகி விட்டது.
சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடுவுக்குள் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.தயாராக உள்ளது. அதன்படி இம்மாதம் 31 ம் தேதி இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் குறித்த சி.பி.ஐ. விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த ஒதுக்கீட்டில் நடந்த கிரிமினல் சதி திட்டங்கள் குறித்த அம்சங்கள் இடம் பெறும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
விசாரணையின் போக்கை பொறுத்தும் வழக்கில் சேர்க்கப்பட உள்ள குற்றவாளிகளை பொறுத்தும் அடுத்து தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகைகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும் என்றும் சி.பி. ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகிறது 2 புயல் சின்னம் : வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும்
07 Nov 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமட
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? - இன்று கடைசி போட்டியில் பலப்பரீட்சை
07 Nov 2025பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் எழுந்துள்ள நிலையில் இன்று பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள கடைசி போட்டியில்
-
பாதுகாப்பான அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார் : வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா
07 Nov 2025டெல்லி : அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
-
டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
07 Nov 2025சென்னை : டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
எட்டயபுரம் அருகே விபத்து - 7 பேர் படுகாயம்
07 Nov 2025மதுரை : லாரி மீது பஸ் மோதி விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
07 Nov 2025பாட்னா, வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும் டெல்லியில் வாக்களித்த பா.ஜ.க.
-
பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
07 Nov 2025பாட்னா : பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனு மீது நவ. 11-ல் விசாரணை : சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Nov 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர்.
-
கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் முன்ஜாமீன்
07 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
2-வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: முன்னிலை பெற்றது இந்தியா 'ஏ'
07 Nov 2025பெங்களூரு : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சு மூலம் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி முன்னிலை பெற்றுள்ளது.
-
'வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி ஏந்திக்கொண்டது - மல்லிகார்ஜுன கார்கே
07 Nov 2025புதுடெல்லி : வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி பெருமையுடன் ஏந்திக்கொண்டது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை: குற்றவாளி ஒருவர் சுட்டுப்பிடிப்பு
07 Nov 2025சேலம் : சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சு
-
உடல் உறுப்பு தானம் செய்பவர்களை போற்ற தமிழ்நாடு முழுவதும் தியாகச்சுவர் எழுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
07 Nov 2025சென்னை, உடல் உறுப்புத் தானத்தில் உலகிலேயே தமிழ்நாடுதான் முதலிடம் என தெரிவித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உடல் உறுப்பு கொடையாள
-
பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது
07 Nov 2025பெங்களூரு : பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் என்ஜினீயர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
-
மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் தகவல்
07 Nov 2025மதுரை, மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
-
காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் தங்க பல்லி மாயமானதாக புகார்: இந்து அறநிலையத்துறை மறுப்பு
07 Nov 2025காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் தங்க பல்லி மாயமானதாக வெளியான தகவலுக்கு இந்து சமய அறநிலையத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
அடுத்த வருடம் இந்தியா வருகிறார் அதிபர் ட்ரம்ப்
07 Nov 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த வருடம் இந்தியா வருகிறார்.
-
அரசு முறை பயணமாக இன்று முதல் 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி முர்மு பயணம்
07 Nov 2025புதுடெல்லி : 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணத்தை இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை ஜனாதிபதி திரெளபதி முர்மு மேற்கொள்ளவிருக்கிறார்.
-
இந்தோனேசியா: மதவழிபாட்டு தலத்தில் திடீர் குண்டு வெடிப்பு - 54 பேர் படுகாயம்
07 Nov 2025ஜகார்தா, இந்தோனேசியாவில் உள்ள மதவழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது இதில் 54 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி அவசியம்: நிர்மலா சீதாராமன் தகவல்
07 Nov 2025மும்பை : வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
கைகளில் வலி ஏற்பட்டு சிலம்பம் சுற்ற முடியாததால் மதுரை மாணவி விபரீத முடிவு
07 Nov 2025மதுரை : கைகளில் வலி ஏற்பட்டு சிலம்பம் சுற்ற முடியாததால் வருத்தம் அளிக்கிறது என்று சிலம்பம் மாணவி விபரீத முடிவை எடுத்தார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
07 Nov 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்பனையானது.
-
நாடு முழுவதும் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தெருநாய்கள் நுழைவதை தடுக்க வேண்டும் : மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கூடுதல் உத்தரவு
07 Nov 2025புதுடெல்லி : நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடம், மருத்துவமனை, ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் நாய்கள் நுழையாத வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண
-
நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
07 Nov 2025சென்னை : நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.


