எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன் : இங்கிலாந்து நாடாளுமன்றத்தை முடக்கிய அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க ஸ்காட்லாந்து நீதிமன்றம் மறுத்து விட்டது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற முடிவு செய்து, பிரக்சிட் ஒப்பந்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் கடும் சிக்கல் நிலவி வருகிறது. பல எம்.பி.க்களும் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்ய வலியுறுத்துகின்றனர். ஆனால், ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்வதை ஏற்கும் நிலையில் ஐரோப்பிய யூனியன் இல்லை. இதனால், நிர்ணயிக்கப்பட்ட அக்டோபர் 31-ம் தேதிக்குள் இதே ஒப்பந்தத்துடனோ அல்லது ஒப்பந்தமே இல்லாமலோ, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது நிச்சயம் என அந்நாட்டின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதற்காக, செப்டம்பர் 2-ம் வாரத்திலிருந்து அக்டோபர் 14-ம் தேதி வரை நாடாளுமன்றத்தை அவர் முடக்கி உள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து எந்தவித ஒப்பந்தமும் இன்றி வெளியேற, போரிஸ் ஜான்சன் விரும்புகிறார். அதனால்தான், வரும் 3-ம் தேதி நாடாளுமன்றம் கூடும் நிலையில், அடுத்த சில நாட்களிலேயே அதன் செயல்பாட்டை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலம், ஜான்சனின் விருப்பத்திற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போகும். எனவே, அரசின் இந்த முடிவுக்கு இடைக்கால தடை கோரி பல்வேறு எம்.பி.க்கள் ஸ்காட்லாந்து சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேமண்ட் டோஹர்தி ,ஜான்சன் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தார். வழக்கை செப். 6-ல் விசாரிப்பதாக உத்தரவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


