எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : தமிழகத்தில் உள்ள பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ஈஷா யோகா மையத்தின் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மரம் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.
ஈஷா யோகா மையத்தின் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் மரம் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பது பழமொழி. நாம் அனைவரும் நிழலின் அருமையை உணர்ந்துள்ள இவ்வேளையில், நிழலினை உருவாக்க மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதும், நிழல் தரும் மரங்களைக் காப்பதும் நம் அனைவரின் கடமையாகும். மரங்களால் சுவாசக் காற்று அதிகரிக்கின்றது, நில அரிப்பு தடுக்கப்படுகின்றது. மழை மாதந்தோறும் பொழிவதற்கு மண்ணின் மீதுள்ள மரங்களே அழைத்திடுகிறது. மரம் நடுவோம்! மழை பெறுவோம்! என்ற வாசகம் நாம் அனைவரும் அறிந்ததே, மரங்கள் மழை கொடுக்க வேண்டுமென்றால் நமக்குத் தேவை காடுகள். காடுகள் மனிதர்களால் உருவாக்கப்படுவதில்லை, மனிதன் நட்ட மரங்களைவிட மண்ணே நட்ட மரங்களே அதிகம். கரங்கள் நட்ட மரங்களைவிட காற்றே நட்ட மரங்களே அதிகம். ஒற்றை மரம், ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 300 லிட்டர்கள் வரை தண்ணீரைத் தன்னுடைய வியர்வையாக வெளியேற்றுகிறது. மரங்கள் தங்களது தேவையான நீரைவிடப் பல மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக் கொள்ளும். அந்த உபரி நீர் அவ்வளவும் வெளியாகி ஈரப்பதமாக காற்றில் கலந்து விடுகிறது. அந்த உபரி நீர்தான் காற்றைக் குளிர்வித்து நம்மையும் குளிர்விக்கின்றன. அந்த உபரி நீரை கொண்டுதான் மேகங்களும் நமக்கு மழையை கொடுக்கின்றன.
இந்தியத் திருநாட்டின் கலாச்சாரத்தில் மரம் ஒரு இன்றியமையாத பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, நாம் வேப்ப மரத்தினை மாரியம்மன் தெய்வத்தினோடும், அரச மரத்தினை விநாயகப் பெருமானோடும் எப்பொழுதும் இணைத்து வழிபடுவது வழக்கம். இன்றும் பல்வேறு பழங்குடியின மக்களின் சடங்குகளில், குறிப்பாக திருமண சடங்குகளில் மரத்தினை வணங்கி திருமணத்தை நடத்துவது வழக்கமாக கடைபிடிக்கப்படுகின்றது. மருது சகோதரர்கள் நினைவாக மரங்கள் இரண்டினை வளர்த்து வந்த ஓர் பெரியவர், அம்மரங்களை அரசரே ஆணையிட்டும் வெட்ட அனுமதிக்காத நிகழ்வு மக்களுக்கு மரத்தின் மீது இருந்த அக்கறையினை உணர்த்துகிறது.
அம்மாவின் பிறந்த தினத்தையொட்டி, மாநிலத்தில் பசுமைப் போர்வையினை அதிகரித்தல், சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் விளைவுகளைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டு மாபெரும் மரம் நடவுத் திட்டம் அம்மாவால் துவக்கப்பட்டது. தொடர்ந்து அம்மாவின் அரசாலும் 2011-12 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு, 4 கோடியே 69 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2019-20ஆம் ஆண்டில் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காக கொண்டு இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழகம் சந்திக்க உள்ள சவால்களை முழுவதுமாக உணர்ந்து தான் அம்மாவின் அரசு மாநில வனக் கொள்கை, 2018-ஐ வடிவமைத்துள்ளது. இந்தக் கொள்கையில் மாநிலத்தின் நீண்ட நெடும் கடற்கரை, கிழக்கு மற்றும் மேற்கு மலைத் தொடர்கள், வறண்ட பருவநிலை மற்றும் நீர் பற்றாக்குறையை போக்க வேண்டிய பாங்கு, வனப்பகுதிகளுக்கு வெளியேயும் மரங்களை வளர்த்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சுற்றுச் சூழல் மாசினை கட்டுப்படுத்த தமிழ்நாடு சூழல் சுற்றுலாக் கொள்கை, 2017 மற்றும் தமிழ்நாடு சுற்றுசூழல் கொள்கை, 2017 அறிவிக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் அம்மாவின் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன.
காவேரி ஆற்றின் பல்லுயிர் காத்தல், காவேரி மற்றும் அதன் துணை நதிகளில் மாசுகளை அகற்றுதல், காவேரி நகர்ப்புற கழிவு நீரை சுத்திகரிக்க தேவையான சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுதல், ஆற்றுப்படுகையில் மரங்களை நட்டு காடுகளை வளர்த்தல், ஆற்று முகப்பு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள நடந்தாய் வாழி காவேரி என்ற திட்டத்தினை செயல்படுத்த பாரதப் பிரதமரிடம் நான் கோரிக்கை வைத்ததன் தொடர்ச்சியாக நடந்தாய் வாழி காவேரி திட்டத்தினை பாராட்டி, இதேபோல் நாட்டிலுள்ள ஜீவநதிகளில் செயல்படுத்த ஜனாதிபதி நாடாளுமன்ற கூட்டத்தில் தனது உரையில் இத்திட்டத்தினை குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று, தமிழகத்திலுள்ள பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி ஆறுகளும் மாசுபடுவதைக் தடுக்க அம்மாவின் அரசு நடவடிக்கை எடுக்கும். இதேபோன்று, வைகை மற்றும் நொய்யல் ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.24.58 கோடி மதிப்பீட்டில் 2017-18 முதல் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு 2018-19ஆம் ஆண்டு வரை ரூ.14.06 கோடி செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பாலாறு ஆற்றிற்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் 2019-20ம் ஆண்டு முதல் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அம்மாவின் அரசு பல்வேறு புதிய நீர் மேலாண்மை திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும் அம்மாவின் அரசு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை என்னும் திட்டத்தினை முன்னெடுத்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் திட்டம் தொடர பிரதமர் இந்தியா முழுவதும் செயல்படுத்த அறிவிப்பு செய்துள்ளார்.
உதாரணமாக, அம்மாவின் மழை நீர் சேகரிப்பு திட்டம் எப்படி மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டதோ அதுபோல, மரங்கள் நட்டு நதியைப் பாதுகாக்கும் திட்டத்தையும் மக்கள் இயக்கமாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம், திருமண நிகழ்ச்சி, திருமண ஆண்டு விழா நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் போது மரக்கன்றுகளை வழங்கினால் இந்தத் திட்டம் இன்னும் விரிவடையும். மரக்கன்றுகளை முறையாக நட்டு வளர்த்தால் காடு செழிக்கும். நாடு செழிக்கும். தமிழக மக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் பெருவாரியாக மரம் வளர்ப்புப் பணிகளில் தொடர்ந்து பங்கேற்று தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்க அம்மாவின் அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
கண்ணன் ரவியுடன் இணையும் கவுதம் கார்த்திக்
22 Sep 2025KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த திங்களன்று தொடங்கியது.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு மேலும் உயரும்: அமித்ஷா
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.