எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : தமிழகத்தில் உள்ள பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ஈஷா யோகா மையத்தின் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மரம் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.
ஈஷா யோகா மையத்தின் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் மரம் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பது பழமொழி. நாம் அனைவரும் நிழலின் அருமையை உணர்ந்துள்ள இவ்வேளையில், நிழலினை உருவாக்க மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதும், நிழல் தரும் மரங்களைக் காப்பதும் நம் அனைவரின் கடமையாகும். மரங்களால் சுவாசக் காற்று அதிகரிக்கின்றது, நில அரிப்பு தடுக்கப்படுகின்றது. மழை மாதந்தோறும் பொழிவதற்கு மண்ணின் மீதுள்ள மரங்களே அழைத்திடுகிறது. மரம் நடுவோம்! மழை பெறுவோம்! என்ற வாசகம் நாம் அனைவரும் அறிந்ததே, மரங்கள் மழை கொடுக்க வேண்டுமென்றால் நமக்குத் தேவை காடுகள். காடுகள் மனிதர்களால் உருவாக்கப்படுவதில்லை, மனிதன் நட்ட மரங்களைவிட மண்ணே நட்ட மரங்களே அதிகம். கரங்கள் நட்ட மரங்களைவிட காற்றே நட்ட மரங்களே அதிகம். ஒற்றை மரம், ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 300 லிட்டர்கள் வரை தண்ணீரைத் தன்னுடைய வியர்வையாக வெளியேற்றுகிறது. மரங்கள் தங்களது தேவையான நீரைவிடப் பல மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக் கொள்ளும். அந்த உபரி நீர் அவ்வளவும் வெளியாகி ஈரப்பதமாக காற்றில் கலந்து விடுகிறது. அந்த உபரி நீர்தான் காற்றைக் குளிர்வித்து நம்மையும் குளிர்விக்கின்றன. அந்த உபரி நீரை கொண்டுதான் மேகங்களும் நமக்கு மழையை கொடுக்கின்றன.
இந்தியத் திருநாட்டின் கலாச்சாரத்தில் மரம் ஒரு இன்றியமையாத பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, நாம் வேப்ப மரத்தினை மாரியம்மன் தெய்வத்தினோடும், அரச மரத்தினை விநாயகப் பெருமானோடும் எப்பொழுதும் இணைத்து வழிபடுவது வழக்கம். இன்றும் பல்வேறு பழங்குடியின மக்களின் சடங்குகளில், குறிப்பாக திருமண சடங்குகளில் மரத்தினை வணங்கி திருமணத்தை நடத்துவது வழக்கமாக கடைபிடிக்கப்படுகின்றது. மருது சகோதரர்கள் நினைவாக மரங்கள் இரண்டினை வளர்த்து வந்த ஓர் பெரியவர், அம்மரங்களை அரசரே ஆணையிட்டும் வெட்ட அனுமதிக்காத நிகழ்வு மக்களுக்கு மரத்தின் மீது இருந்த அக்கறையினை உணர்த்துகிறது.
அம்மாவின் பிறந்த தினத்தையொட்டி, மாநிலத்தில் பசுமைப் போர்வையினை அதிகரித்தல், சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் விளைவுகளைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டு மாபெரும் மரம் நடவுத் திட்டம் அம்மாவால் துவக்கப்பட்டது. தொடர்ந்து அம்மாவின் அரசாலும் 2011-12 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு, 4 கோடியே 69 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2019-20ஆம் ஆண்டில் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காக கொண்டு இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழகம் சந்திக்க உள்ள சவால்களை முழுவதுமாக உணர்ந்து தான் அம்மாவின் அரசு மாநில வனக் கொள்கை, 2018-ஐ வடிவமைத்துள்ளது. இந்தக் கொள்கையில் மாநிலத்தின் நீண்ட நெடும் கடற்கரை, கிழக்கு மற்றும் மேற்கு மலைத் தொடர்கள், வறண்ட பருவநிலை மற்றும் நீர் பற்றாக்குறையை போக்க வேண்டிய பாங்கு, வனப்பகுதிகளுக்கு வெளியேயும் மரங்களை வளர்த்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சுற்றுச் சூழல் மாசினை கட்டுப்படுத்த தமிழ்நாடு சூழல் சுற்றுலாக் கொள்கை, 2017 மற்றும் தமிழ்நாடு சுற்றுசூழல் கொள்கை, 2017 அறிவிக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் அம்மாவின் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன.
காவேரி ஆற்றின் பல்லுயிர் காத்தல், காவேரி மற்றும் அதன் துணை நதிகளில் மாசுகளை அகற்றுதல், காவேரி நகர்ப்புற கழிவு நீரை சுத்திகரிக்க தேவையான சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுதல், ஆற்றுப்படுகையில் மரங்களை நட்டு காடுகளை வளர்த்தல், ஆற்று முகப்பு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள நடந்தாய் வாழி காவேரி என்ற திட்டத்தினை செயல்படுத்த பாரதப் பிரதமரிடம் நான் கோரிக்கை வைத்ததன் தொடர்ச்சியாக நடந்தாய் வாழி காவேரி திட்டத்தினை பாராட்டி, இதேபோல் நாட்டிலுள்ள ஜீவநதிகளில் செயல்படுத்த ஜனாதிபதி நாடாளுமன்ற கூட்டத்தில் தனது உரையில் இத்திட்டத்தினை குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று, தமிழகத்திலுள்ள பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி ஆறுகளும் மாசுபடுவதைக் தடுக்க அம்மாவின் அரசு நடவடிக்கை எடுக்கும். இதேபோன்று, வைகை மற்றும் நொய்யல் ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.24.58 கோடி மதிப்பீட்டில் 2017-18 முதல் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு 2018-19ஆம் ஆண்டு வரை ரூ.14.06 கோடி செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பாலாறு ஆற்றிற்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் 2019-20ம் ஆண்டு முதல் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அம்மாவின் அரசு பல்வேறு புதிய நீர் மேலாண்மை திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும் அம்மாவின் அரசு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை என்னும் திட்டத்தினை முன்னெடுத்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் திட்டம் தொடர பிரதமர் இந்தியா முழுவதும் செயல்படுத்த அறிவிப்பு செய்துள்ளார்.
உதாரணமாக, அம்மாவின் மழை நீர் சேகரிப்பு திட்டம் எப்படி மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டதோ அதுபோல, மரங்கள் நட்டு நதியைப் பாதுகாக்கும் திட்டத்தையும் மக்கள் இயக்கமாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம், திருமண நிகழ்ச்சி, திருமண ஆண்டு விழா நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் போது மரக்கன்றுகளை வழங்கினால் இந்தத் திட்டம் இன்னும் விரிவடையும். மரக்கன்றுகளை முறையாக நட்டு வளர்த்தால் காடு செழிக்கும். நாடு செழிக்கும். தமிழக மக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் பெருவாரியாக மரம் வளர்ப்புப் பணிகளில் தொடர்ந்து பங்கேற்று தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்க அம்மாவின் அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு த.வெக. தலைவர் விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
21 Sep 2025விருதுநகர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
த.வெ.க.வுக்கு பெருகும் ஆதரவால் பயந்து பொய்யை பரப்புகின்றனர் : விஜய் கடும் விமர்சனம்
21 Sep 2025சென்னை : நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
-
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலை
21 Sep 2025திருவனந்தபுரம் : நவராத்திரி விழாவை முன்னட்டு குமரியில் இருந்து சுவாமி சிலைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடக்கம்
21 Sep 2025கர்நாடகா : கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது, மைசூரு தசரா விழா.
-
வாக்கு திருட்டு புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : கர்நாடக அரசு நடவடிக்கை
21 Sep 2025பெங்களூரு : 2023ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பதிவான அனைத்து வாக்கு திருட்டு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு
-
விர்ஜீனியா மாகாண வழக்கறிஞராக லிண்ட்சேவை நியமித்தார் அமெரிக்க அதிபர்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு நாட்டு முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் உயிரிழப்பு
21 Sep 2025காசா நகரம் : காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 85 பே ர் கொல்லப்பட்டனர். அதில், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற மக்களும் உயிரிழந்தனர்.
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
21 Sep 2025மும்பை : நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
பெண்களை வாதாடி ஜெயிக்க முடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு
21 Sep 2025சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோ
-
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ள தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள்: அதிபர் ட்ரம்ப்
21 Sep 2025வாஷிங்டன் : வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
பிரதமரின் தாயாரை அவமதித்ததாக ஆர்.ஜே.டி. மீது பா.ஜ.க. மீண்டும் குற்றச்சாட்டு
21 Sep 2025புதுடெல்லி : பிரதமர் மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பா.ஜ.க. மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
21 Sep 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடி
-
அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வு : 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வால் சுமார் 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம்
21 Sep 2025டாக்கா : 4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.