எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் உள்ள பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ஈஷா யோகா மையத்தின் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மரம் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.
ஈஷா யோகா மையத்தின் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் மரம் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பது பழமொழி. நாம் அனைவரும் நிழலின் அருமையை உணர்ந்துள்ள இவ்வேளையில், நிழலினை உருவாக்க மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதும், நிழல் தரும் மரங்களைக் காப்பதும் நம் அனைவரின் கடமையாகும். மரங்களால் சுவாசக் காற்று அதிகரிக்கின்றது, நில அரிப்பு தடுக்கப்படுகின்றது. மழை மாதந்தோறும் பொழிவதற்கு மண்ணின் மீதுள்ள மரங்களே அழைத்திடுகிறது. மரம் நடுவோம்! மழை பெறுவோம்! என்ற வாசகம் நாம் அனைவரும் அறிந்ததே, மரங்கள் மழை கொடுக்க வேண்டுமென்றால் நமக்குத் தேவை காடுகள். காடுகள் மனிதர்களால் உருவாக்கப்படுவதில்லை, மனிதன் நட்ட மரங்களைவிட மண்ணே நட்ட மரங்களே அதிகம். கரங்கள் நட்ட மரங்களைவிட காற்றே நட்ட மரங்களே அதிகம். ஒற்றை மரம், ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 300 லிட்டர்கள் வரை தண்ணீரைத் தன்னுடைய வியர்வையாக வெளியேற்றுகிறது. மரங்கள் தங்களது தேவையான நீரைவிடப் பல மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக் கொள்ளும். அந்த உபரி நீர் அவ்வளவும் வெளியாகி ஈரப்பதமாக காற்றில் கலந்து விடுகிறது. அந்த உபரி நீர்தான் காற்றைக் குளிர்வித்து நம்மையும் குளிர்விக்கின்றன. அந்த உபரி நீரை கொண்டுதான் மேகங்களும் நமக்கு மழையை கொடுக்கின்றன.
இந்தியத் திருநாட்டின் கலாச்சாரத்தில் மரம் ஒரு இன்றியமையாத பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, நாம் வேப்ப மரத்தினை மாரியம்மன் தெய்வத்தினோடும், அரச மரத்தினை விநாயகப் பெருமானோடும் எப்பொழுதும் இணைத்து வழிபடுவது வழக்கம். இன்றும் பல்வேறு பழங்குடியின மக்களின் சடங்குகளில், குறிப்பாக திருமண சடங்குகளில் மரத்தினை வணங்கி திருமணத்தை நடத்துவது வழக்கமாக கடைபிடிக்கப்படுகின்றது. மருது சகோதரர்கள் நினைவாக மரங்கள் இரண்டினை வளர்த்து வந்த ஓர் பெரியவர், அம்மரங்களை அரசரே ஆணையிட்டும் வெட்ட அனுமதிக்காத நிகழ்வு மக்களுக்கு மரத்தின் மீது இருந்த அக்கறையினை உணர்த்துகிறது.
அம்மாவின் பிறந்த தினத்தையொட்டி, மாநிலத்தில் பசுமைப் போர்வையினை அதிகரித்தல், சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் விளைவுகளைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டு மாபெரும் மரம் நடவுத் திட்டம் அம்மாவால் துவக்கப்பட்டது. தொடர்ந்து அம்மாவின் அரசாலும் 2011-12 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு, 4 கோடியே 69 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2019-20ஆம் ஆண்டில் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காக கொண்டு இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழகம் சந்திக்க உள்ள சவால்களை முழுவதுமாக உணர்ந்து தான் அம்மாவின் அரசு மாநில வனக் கொள்கை, 2018-ஐ வடிவமைத்துள்ளது. இந்தக் கொள்கையில் மாநிலத்தின் நீண்ட நெடும் கடற்கரை, கிழக்கு மற்றும் மேற்கு மலைத் தொடர்கள், வறண்ட பருவநிலை மற்றும் நீர் பற்றாக்குறையை போக்க வேண்டிய பாங்கு, வனப்பகுதிகளுக்கு வெளியேயும் மரங்களை வளர்த்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சுற்றுச் சூழல் மாசினை கட்டுப்படுத்த தமிழ்நாடு சூழல் சுற்றுலாக் கொள்கை, 2017 மற்றும் தமிழ்நாடு சுற்றுசூழல் கொள்கை, 2017 அறிவிக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் அம்மாவின் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன.
காவேரி ஆற்றின் பல்லுயிர் காத்தல், காவேரி மற்றும் அதன் துணை நதிகளில் மாசுகளை அகற்றுதல், காவேரி நகர்ப்புற கழிவு நீரை சுத்திகரிக்க தேவையான சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுதல், ஆற்றுப்படுகையில் மரங்களை நட்டு காடுகளை வளர்த்தல், ஆற்று முகப்பு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள நடந்தாய் வாழி காவேரி என்ற திட்டத்தினை செயல்படுத்த பாரதப் பிரதமரிடம் நான் கோரிக்கை வைத்ததன் தொடர்ச்சியாக நடந்தாய் வாழி காவேரி திட்டத்தினை பாராட்டி, இதேபோல் நாட்டிலுள்ள ஜீவநதிகளில் செயல்படுத்த ஜனாதிபதி நாடாளுமன்ற கூட்டத்தில் தனது உரையில் இத்திட்டத்தினை குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று, தமிழகத்திலுள்ள பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி ஆறுகளும் மாசுபடுவதைக் தடுக்க அம்மாவின் அரசு நடவடிக்கை எடுக்கும். இதேபோன்று, வைகை மற்றும் நொய்யல் ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.24.58 கோடி மதிப்பீட்டில் 2017-18 முதல் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு 2018-19ஆம் ஆண்டு வரை ரூ.14.06 கோடி செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பாலாறு ஆற்றிற்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் 2019-20ம் ஆண்டு முதல் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அம்மாவின் அரசு பல்வேறு புதிய நீர் மேலாண்மை திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும் அம்மாவின் அரசு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை என்னும் திட்டத்தினை முன்னெடுத்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் திட்டம் தொடர பிரதமர் இந்தியா முழுவதும் செயல்படுத்த அறிவிப்பு செய்துள்ளார்.
உதாரணமாக, அம்மாவின் மழை நீர் சேகரிப்பு திட்டம் எப்படி மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டதோ அதுபோல, மரங்கள் நட்டு நதியைப் பாதுகாக்கும் திட்டத்தையும் மக்கள் இயக்கமாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம், திருமண நிகழ்ச்சி, திருமண ஆண்டு விழா நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் போது மரக்கன்றுகளை வழங்கினால் இந்தத் திட்டம் இன்னும் விரிவடையும். மரக்கன்றுகளை முறையாக நட்டு வளர்த்தால் காடு செழிக்கும். நாடு செழிக்கும். தமிழக மக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் பெருவாரியாக மரம் வளர்ப்புப் பணிகளில் தொடர்ந்து பங்கேற்று தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்க அம்மாவின் அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –10-01-2026
10 Jan 2026 -
த.வெ.க. உடன் கூட்டணியா? ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
10 Jan 2026சென்னை, த.வெ.க. உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
-
நாளை விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி சி-62: திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்
10 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி சி-62 நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் ராக்கெட் மாதிரியை வைத்து திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம் செய்தனர்.
-
அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: மம்தா பானர்ஜி
10 Jan 2026கொல்கத்தா, நிலக்கரி ஊழல் பணம் தொடர்பாக அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப
-
ஜனநாயகன் பட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த தயாரிப்பு நிறுவனம்
10 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளத
-
வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி..? பிரேமலதா வைத்த 'சஸ்பென்ஸ்'
10 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் கடலூர் மாநாட்டில் பேசிய பிரேமலதா, "தே.மு.தி.க.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கேரளா செல்கிறார்
10 Jan 2026கொச்சி, கேரளாவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று செல்கிறார்.
-
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
10 Jan 2026சென்னை, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி, பதாகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
10 Jan 2026சென்னை, குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி மற்றும் பதாகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
இமாசல பிரதேச பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர்
10 Jan 2026சிம்லா, இமாசல பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களு
-
வளர்ச்சியடைந்த இந்தியா: மூன்றாயிரம் இளைஞர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்
10 Jan 2026டெல்லி, டெல்லியில் நாளை (திங்கள்கிழமை) அன்று நடைபெறும் விக்சித் பாரத்(வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச்
-
அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தமா..? நயினார் நாகேந்திரன் விளக்கம்
10 Jan 2026கோவை, அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
10 Jan 2026புதுடெல்லி, போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
-
மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
10 Jan 2026கடலூர், மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
3 அம்ரித் பாரத் ரயில்களை தமிழகம்-மேற்குவங்கம் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
10 Jan 2026சென்னை, தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
நிதிஷ்க்கு பாரத ரத்னா விருது கொடுங்கள்; பிரதமர் மோடிக்கு ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்
10 Jan 2026பாட்னா, நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுத்தியுள்ளது.
-
பியட் காரை ஓட்டி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
10 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பியட் கார் ஓட்டிய வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை: பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் விரைவில் தமிழகம் வருகிறார்
10 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் மாதம் தமிழகம் வருகிறார்.
-
விஜய் பிரச்சார பேருந்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை வாகன ஓட்டுனரிடமும் விசாரணை
10 Jan 2026சென்னை, விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். விஜய் பிரச்சார வாகன ஓட்டுனரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
-
வார ராசிபலன்
10 Jan 2026


