எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் உயர்தரமிக்க உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் ஆய்வு நடத்தினார். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அங்கு பார்வையிட்ட கட்டமைப்புகளை பற்றி விவாதித்ததுடன், அது போன்ற உயர்தரமிக்க உள்கட்டமைப்புகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். இதன் மூலம், அதிக முதலீடுகளை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஈர்த்து, வேலைவாய்ப்பை பெருக்க அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டமைப்பு திட்டங்களான, சென்னை நிதி தொழில்நுட்ப நகரம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த சுற்றுலா வளர்ச்சித் திட்டம், சென்னை ஒருங்கிணைந்த வாகன நிறுத்துமிட மேலாண்மை திட்டம், சதர்ன் ஸ்ட்ரக்சுரல்ஸ் போன்ற அரசு நிறுவனங்களின் நிலங்களில் புதிய முதலீடுகளை ஈர்த்தல், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து பணிமனைகளை நவீனப்படுத்தும் திட்டம், சென்னையில் இலகு ரயில் பயணத் திட்டம், வெளி வட்டச்சாலை –தொழில் மேம்பாட்டுத் திட்டம், கடல் அருங்காட்சியகம் அமைத்தல், அறிவியல் நகரத்தில் தொழில்நுட்பம் மூலம் அறிவுசார் காட்சியகம் அமைத்தல், எம்.ஜி.ஆர். திரைப்பட நகரத்தில் தொழில்நுட்பத்தில் பொழுதுபோக்கு காட்சியகம் அமைத்தல், மெடி பார்க் அமைத்தல், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம், பொன்னேரி மையத்தில் சென்னை - பெங்களூரு தொழில் வழித்தடத் திட்டம், நடந்தாய் வாழி காவேரி திட்டம், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருச்சி மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் கழிவுநீர் மறுசுழற்சி செய்யும் திட்டங்கள், சென்னையில் உள்ள நீர்வழித் தடங்களை மீட்டெடுக்க ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம், சென்னையில் கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் திட்டம், தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராமத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், ராமநாதபுரம் மாவட்டம், குதிரைமொழி கிராமத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் பகுதிகளுக்கு குடிநீர் வழங்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான செயல் திட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
மேலும், இந்த திட்டங்களை விரைவில் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுரைகள் வழங்கினார். இத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், கூடுதல் முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், கூடுதல் வேலைவாய்ப்பும் ஏற்படும். மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கான திட்ட அறிக்கைகள் தயாரிப்பதற்கென தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திற்கு 289 கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், எம்.சி. சம்பத், விஜயபாஸ்கர், வெல்லமண்டி என். நடராஜன், எம்.ஆர். விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / கூடுதல் தலைமைச் செயலாளர் சபிதா, நிதித்துறை முதன்மைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், நிதித்துறை (செலவினங்கள்) முதன்மை செயலாளர் . எம்.ஏ. சித்திக், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) கார்த்திக், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.