எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 168 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ.28,632 என்ற நிலையில் விற்பனையானது.
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை, ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த 4-ம் தேதி சவரன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இதே போல் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது. அதன் பின்னர், தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ. 28 ஆயிரத்து 800 என்ற நிலையில் சரிந்திருந்தது. ஒரு கிராம் 3600 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 168 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ. 28,632 என்ற அளவில் விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.3579-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் தங்கத்தின் விலை கடந்த 15 நாட்களில் சவரனுக்கு 1488 ரூபாய் குறைந்துள்ளது. இதே போல் கிலோ 54 ஆயிரத்து 800 ரூபாய் வரை உயர்ந்த வெள்ளி விலையும், சரிந்து வருகிறது. நேற்று கிலோவுக்கு மேலும் 500 ரூபாய் சரிந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ. 49 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் 49 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


