எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : வரும் 26,27-ந்தேதி தொடர்ந்து இரண்டு நாட்கள் வங்கிகள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவதால் தமிழகத்தில் 20000 ஏடிஎம் மையங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.350 லட்சம் கோடி மதிப்பு கொண்ட பொருளாதார நாடாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால் தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலை மத்திய அரசின் இலக்குக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துவிட்டது.
பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 30-ந்தேதி 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி 4 பெரிய வங்கிகளுடன் 6 சிறிய வங்கிகள் இணைக்கப்படுகின்றன.
இந்த இணைப்பு நடவடிக்கை காரணமாக நாட்டில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைகிறது.
வங்கிகள் இணைப்புக்கு அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், “வங்கிகள் இணைப்பால் நிறைய பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். நாளடைவில் இது தனியார் மயத்துக்கு வழிவகுத்து விடும்” என்று தெரிவித்தனர்.
வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் என்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தின. ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக வருகிற 25-ந்தேதி நள்ளிரவு முதல் 27-ந்தேதி நள்ளிரவு வரை வேலை நிறுத்தம் செய்யப் போவதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனவே வருகிற 26, 27-ந்தேதிகளில் (வியாழன், வெள்ளி) இரண்டு நாட்கள் வங்கி சேவைகள் அனைத்தும் முடங்கும். வங்கிகள் திறக்கப்பட்டாலும் எந்த ஊழியரும் பணியில் ஈடுபடமாட்டார்கள்.
அதற்கு பிறகும் மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் முதல் கட்ட போராட்டத்தை வெற்றிகரமாக மாற்றும் முயற்சிகளில் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்வதால் பண பரிவர்த்தனைகளில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். குறிப்பாக தானியங்கி எந்திரம் மூலம் பணம் பெறும் ஏ.டி.எம். சேவை வறண்டு விடும் நிலை உருவாகும். இது ஏ.டி.எம். சேவையை மட்டுமே நம்பி இருக்கும் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும்போது வங்கி அதிகாரி மேற்பார்வையில்தான் பணம் நிரப்பப்படும். 26, 27-ந்தேதிகளில் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்வதால் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் சேவைக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். நாளை (25-ந்தேதி) மாலையில் இருந்தே வங்கி அதிகாரிகள், ஏ.டி.எம். சேவை பணிகளை புறக்கணிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
எனவே வருகிற புதன் கிழமை ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்படும் பணம் தான் வருகிற வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 2 நாட்களின் தேவையை சமாளிக்க வேண்டியதிருக்கும். ஆனால் ஏ.டி.எம். எந்திரங்களில் அதிக அளவு மக்கள் பணம் எடுக்கும் பட்சத்தில் வியாழக்கிழமையே ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லாத வறண்ட சூழ்நிலை ஏற்பட்டு விடும்.
இதன் தொடர்ச்சியாக வருகிற வியாழன், வெள்ளி இரு நாட்களும் ஏ.டி.எம். சேவை முடங்கும் அபாயம் உள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் 2 லட்சத்து 12 ஆயிரம் ஏ.டி.எம்.களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது நாடு முழுவதும் சுமார் ரூ.48 ஆயிரம் கோடி பணப் பரிவர்த்தனையை பாதிக்கும்.
தமிழ்நாட்டில் சுமார் 20 ஆயிரம் ஏ.டி.எம். சேவை வருகிற வியாழன், வெள்ளிக்கிழமைகளில் முடங்கும் என்று தெரிய வந்துள்ளது. சனி, ஞாயிற்றுகிழமைகளில் விடுமுறை என்பதால் வியாழன் முதல் ஞாயிறு வரை 4 நாட்களுக்கு தொடர்ச்சியாக வங்கி பணிகளும், ஏ.டி.எம். சேவைகளும் முடங்கும் அபாய நிலை உள்ளது.
தமிழ்நாட்டில் வருகிற வெள்ளிக்கிழமை சுமார் 20 ஆயிரம் ஏ.டி.எம்.களில் “சுத்தமாக பணம் இல்லை” என்ற நிலை ஏற்பட கூடும். இது தமிழ்நாட்டில் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பண பரிவர்த்தனையை பாதிக்கும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளில் ஒருவரான சேகரன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி
06 Jul 2025இண்டியானா : அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்கு அதிகாலையில் சில சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை : தொல். திருமாவளவன் கணிப்பு
06 Jul 2025திருச்சி : பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது: நிதின் கட்கரி வருத்தம்
06 Jul 2025நாக்பூர் : வல்லரசுகளின் சர்வாதிகாரத்தால் மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
ஒடிசா, புரி ஜெகநாதரை தரிசிக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
06 Jul 2025புவனேஸ்வர் : தங்க அங்கி அலங்காரத்தில் ஜொலிக்கும் தெய்வங்களை தரிசனம் செய்வதற்காக பல லட்சம் பக்தர்கள் புரி நகரில் குவிந்தனர்.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் நோய்க்கு 17 பேர் பலி : பொதுமக்கள் அதிர்ச்சி
06 Jul 2025திருவனந்தபுரம் : கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் தாக்குதலில் 17 பேர் பலியான சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி
06 Jul 2025திருப்புவனம் : திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
அமைச்சர் சிவசங்கரை யார் என்று கேட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்
06 Jul 2025அரியலூர் : திடீர் ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சிவசங்கரை யார் என்று அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் கேட்ட சம்பவம் நடந்துள்ளது.
-
தலைக்கவசங்களுக்கு இனி பி.ஐ.எஸ். தரச்சான்று கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு
06 Jul 2025சென்னை : பி.ஐ.எஸ். தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
-
அரசு பங்களாவை காலி செய்யாதது ஏன்? முன்னாள் நீதிபதி சந்திரசூட் விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: தான் அரசு பங்களாவை காலி செய்யாததற்கான காரணத்தை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கியுள்ளார்.