எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,மே.- 3 - எனக்கு எதிராக அவதூறு பரப்பும் தர்மபுரம் ஆதீனம் மடம் முன்பு தொடர் உண்ணாவிரதம் மற்றும் வழக்கு பதிவு தொடரப்படும் என்று மதுரை இளைய ஆதீனம் நித்தியானந்தா நேற்று மதுரையில் தெரிவித்தார். மதுரையில் நேற்று இளைய ஆதீனம் நித்யானந்தா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: தருமபுர ஆதீனம் மற்றும் திருப்பனந்தாள் ஆதீனம் சேர்ந்து என் மீதும் மதுரை ஆதீனம் மீதும் அவதூறு பரப்பும் விதமாக சில செய்திகள் வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் என்னிடம் எந்தவொரு தன்னிலை விளக்கம் கேட்காமலேயே அவதூறு பரப்பி இருப்பது வருந்தத்தக்கதாகும். என்னிடம் விளக்கம் கேட்டு அந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றால், நான் ஆதீனம் பொறுப்பை ராஜினாமா செய்து இருப்பேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு கொடுக்கப்படவில்லை. கொலை குற்றவாளிக்கு கூட ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனக்கு அந்த வாய்ப்பு கூட தரப்படவில்லை. சைவவேளாளர் குலத்தை சேர்ந்தவர் தான் மதுரை ஆதீனமாக வர முடியும் என்று கூறுகிறார்கள். ஆனால் நான் அதே வகுப்பைச் சேர்ந்தவன்தான். தொண்டை மண்டல முதலியார் வகுப்பை சேர்ந்தவன்.(அந்த சமயத்தில் அருகில் இருந்த மதுரை ஆதீனம் குறுக்கிட்டு 289, 290 -வது சன்னிதானங்கள் உள்பட 7 சன்னிதானங்கள் தொண்டை மண்டல முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். எனவே நித்யானந்தாவுக்கு மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்க தகுதி உள்ளது என்றார்). தொடர்ந்து நித்யானந்தா கூறியதாவது:பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் என் மீது வழக்கு இருக்கிறதாக குற்றம் சாட்டுகிறார்கள். பொதுவாழ்க்கையில் ஈடுபடும் யார் மீதுதான் வழக்கு இல்லை? நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 3 லட்சம் கற்பழிப்பு வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விசித்தரம் என்னவென்றால் என் மீது யாரும் புகார் கொடுக்காமலேயே கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என் மீது தொடரப்பட்ட வழக்கு மத தாக்குதலாகும். இந்து மதத்திற்கும் சைவ சமயத்திற்கும் அரும்பணி ஆற்றி வருகிறேன். பல புத்தகங்கள் மூலமும்கிந்து மதத்தை பரப்பி வருகிறேன். இப்படி சேவை செய்கிற எனக்கு ஆதீனங்கள் உறுணையாக இருக்கவேண்டும் மாறாக அவதூறு பரப்புவது வேதனை அளிக்கிறது. புகழுக்காகவோ சொத்துக்காகவோ மதுரை ஆதீன பொறுப்பை நான் ஏற்கவில்லை. இப்போது பத்திரிக்கைகள் மூலம் ஒரு உறுதி அளிக்கிறேன். மதுரை ஆதீனம் சொத்தை விற்கவோ, இழப்பு ஏற்படுத்தவோமாட்டேன். சொத்தை மேலும் வளர்க்கத்தான் பாடுபடுவேன். ஆதீனங்கள் அறிவித்துள்ள தீர்மானத்தால் என் தியான பிட சீடர்கள் மனவேதனைக்குள்ளாகி கொதித்து போய்உள்ளார்கள்.
தீர்மானங்கள் மீது கையெழுத்திட்ட ஆதீனங்கள் மீது எங்கள் நித்யானந்தா பீடத்தை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்கள். ஆதீனங்கள் மீது மதம் தொடர்பான வழக்கு தொடர அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு ரத்த கையழுத்திட்டு வேண்டுகோள் கடிதம் எழுத உள்ளோம். மதுரை ஆதீனமாக பொறுப்பேற்பவர்கள் தலைமுடி வைத்திருக்க கூடாது என்கிறார்கள். இந்து மதத்தில் தலைபோக கூடிய விஷயம் எவ்வளவோ இருக்கும் போது எனது தலைமுடி பெரிய பிரச்சினை இல்லை. எனக்கு எதிராக ஆதீனங்கள் நிறைவேற்றி உள்ள தீர்மானத்தை வாபஸ் பெற வேண்டும். தருமபுரம் ஆதீனம் முன்பு என் சீடர்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருக்கிறார்கள். மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள எனக்கு சில அரசியல் கட்சிகளும் 40 இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச ஆடைகளுக்கு பதில் வங்கி கணக்கில் பணம் வரவு
27 Dec 2025புதுச்சேரி, இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'இலவச ஆடை' வழங
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-12-2025.
27 Dec 2025 -
வரும் சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டி: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவேன் என்று டி.டி.வி. தினகரன் அதிரடியாக அறிவித்தார்.
-
நாகப்பட்டினம் அருகே கரை ஒதுங்கிய ராக்கெட் வடிவிலான மர்ம பொருள்
27 Dec 2025நாகப்பட்டினம், நாகப்பட்டினத்தில் ராக்கெட் வடிவிலான மர்ம பொருள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
27 Dec 2025டெல்லி, 2025-ம் ஆண்டில் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா தான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி: ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை
27 Dec 2025சிட்னி, இந்தியாவில் வெறிநாய்க்கடிக்கு போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பாத ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
27 Dec 2025டெல்லி, புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஆதார் அட்டை கட்டாயம்: ஐ.ஆர்.சி.டி.சி. அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடியாக அறிவித்துள்ளது.
-
அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது
27 Dec 2025சென்னை, அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலி
27 Dec 2025விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி: அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு
27 Dec 2025உக்ரைன், புளோரிடா மாகாணத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேசுகிறார்.
-
உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்: 8 பேர் படுகாயம்
27 Dec 2025கீவ், உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே காங்., நிலைப்பாடு: செல்வப்பெருந்தகை பேட்டி
27 Dec 2025சென்னை, எங்களை பொறுத்தவரை இண்டியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் அவர
-
ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் டென்மார்க்; 96-வது இடத்தில் இந்தியா
27 Dec 2025புதுடெல்லி, ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டென்மார்கும், இந்தியா 96-வது இடத்தில் உள்ளது.
-
மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு ஊழல் வழக்கில் 15 ஆண்டுகள் சிறை
27 Dec 2025கோலாலம்பூர், ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசவம் பார்த்தது திருமாவளவன்தான்: நாம் தமிழர் சீமான் பதிலடி
27 Dec 2025சென்னை, என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசம் பார்த்தது திருமாவளவன்தான் என்று சீமான் கூறினார்.
-
இ.பி.எஸ். இன்று முதல் 7-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் துவக்கம்: திருப்போரூர் தொகுதியில் பிரச்சாரம்
27 Dec 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளார்.
-
ஆந்திர மாநிலத்தில் 9 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது
27 Dec 2025ஸ்ரீகாகுளம், ஆந்திர மாநிலத்தில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
27 Dec 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 963 கனஅடியிலிருந்து வினாடிக்கு 836 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
-
எல்லையில் நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி: திடீர் போர்நிறுத்தத்தை அறிவித்த தாய்லாந்து-கம்போடியா அரசுகள்
27 Dec 2025பாங்காக், எல்லையில் உடனடியாக போர்நிறுத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து-கம்போடியா அரசுகள் அறிவித்துள்ளன.
-
தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்னுரிமை; கனமழையால் பாதித்த பயிர்சேதங்களை கணக்கிட்டு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: திருவண்ணாமலை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
27 Dec 2025திருவண்ணாமலை, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் திராவிட மாடல் அரசு முன்னோடி என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையால் பாத
-
பெண்களை புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது: கனிமொழி எம்.பி. பேச்சு
27 Dec 2025சென்னை, வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை இருப்பதை பெண்கள் புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்காக கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
27 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
-
ராமநாதபுரத்தில் வரும் 30-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ராமநாதபுரத்தில் வருகிற 30-ம் தேதி தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


