எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி : சிறிய நகரங்களை பெரிய நகரங்களுடன் இணைக்கும் சேவா ரயில் சேவையை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் துவக்கி வைத்தார். தமிழகத்தில் கரூர், சேலம், பொள்ளாச்சி வழித்தடங்களில் 3 புதிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலத்தில் இருந்து ஒரு ரயில் சேவை மற்றும் கோவையில் இருந்து 2 ரயில்கள் இயக்கி வைக்கப்படுகின்றன.
கரூர், சேலம், பொள்ளாச்சி வழித்தடங்களில் இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது. சேலத்தில் இருந்து கரூருக்கு தினமும் ரயில் சேவை தேவை என்ற கோரிக்கையை தொடர்ந்து, கடந்த 7 மாதங்களாக சேலத்தில் இருந்து கரூருக்கு தற்காலிக ரயில் சேவை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தற்போது நிரந்தர சேவையாக மாற்றம் செய்ய மத்திய ரயில்வே துறை முடிவெடுத்திருந்தது. அதன்படி நேற்று நிரந்தர ரயில் சேவையை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சி டெல்லி ரயில்வேத்துறை அலுவலகம், சேலம் சந்திப்பு ரயில் நிலையம், பொள்ளாச்சி மற்றும் கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்றது. சேலத்தில் இருந்து கரூருக்கு செல்லும் பயணிகள் ரயில் சேவையை சேலம் கொட்ட மேலாளர் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் நேரில் சென்று துவக்கி வைத்தனர். இந்த ரயில் சேலத்தில் இருந்து 1.40 நிமிடத்திற்கு புறப்பட்டு 3.25 மணியளவில் கரூரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையானது மல்லூரில் 1.54 மணிக்கும் பிறகு ராசிபுரத்தில் 2.05 மணிக்கும், கலங்காணி மற்றும் நாமக்கல் மோகனுர் வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் - கரூர் செல்ல ரூ.25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல கோவையில் இருந்து பழனி ரயில் சேவையையும், பொள்ளாச்சியில் இருந்து பழனிக்குமான ரயில் சேவையையும் நேற்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் துவக்கி வைத்தார். இது போன்று நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 10 வழித்தடங்களில் புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.