எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி பதக்கம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் மற்றும் அத்திவரதர் சிறப்புப் பணிகளுக்கான 604 பதக்கங்களை போலீசாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும் அத்திவரதர் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 28 ஆயிரம் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் முதல்வர் வழங்கினார்.
ஜனாதிபதி பதக்கங்கள், தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் மற்றும் அத்திவரதர் சிறப்புப் பணி பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது, இந்த விழாவில் பதக்கங்கள் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள காவல் துறையில், காவல் துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்புப் படை மற்றும் தடய அறிவியல் துறை ஆகிய துறைகளில் தகைசால்பணி, மெச்சத்தக்க பணி, பொது சேவையில் சீர்மிகு பணி, சிறந்த நற்பணி, சீர்மிகு புலனாய்வு, விரல் ரேகை அறிவியல் சீர்மிகு பணி, தடய அறிவியல் சீர்மிகு பணி ஆகியவற்றிற்கான ஜனாதிபதி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் மற்றும் அருள்மிகு அத்திவரதர் சிறப்புப் பணி பதக்கங்களை 604 நபர்களுக்கு இச்சிறப்புமிகு விழாவில் வழங்கியதில் நான் பெரும் மகிழ்ச்சியடைவதோடு, பதக்கங்கள் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவலர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பதுடன், அவர்கள் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் மட்டும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். காவல் துறை பணிகளில் குறுக்கீடு செய்ய யாருக்குமே அதிகாரமில்லை என்பது தான் எனது திடமான கருத்து ஆகும். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கின்ற முதலமைச்சர் கூட அதன் செயல்பாடுகளில் தலையிடமுடியாது என்றார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் காவல் துறையினரை பற்றி குறிப்பிடுகையில், நான் எங்கே வைத்து காவல்துறையினரை பற்றி பேசுகிறேன் என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு தாய்த்தன்மைக்கு ஈடாக, என்னைப் பெற்றெடுத்த தாய்க்கு ஈடாக வைத்து எண்ணுகிறேன் என்று காவல்துறையைப் பற்றி மிகவும் உயர்வாகக் கூறியுள்ளார். காவல்துறையின் செயல் திறம் சிறக்க, பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளையும், காவலர்களின் நலன் காக்க பல்வேறு நலத் திட்டங்களையும் நமது இரு பெரும் தலைவர்களும் செயல்படுத்தியுள்ளனர். இவர்களின் நல்லாசியுடன் செயலாற்றும் அம்மாவின் அரசும் இந்தப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு காவல் துறையினர், தங்களது சிறப்பான செயல்பாடுகளினால், வரவுள்ள பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிந்து தேவையான தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு மாநிலத்தில் சாதி, சமய பூசல்கள் ஏதுமின்றி, பொதுஅமைதியை பேணிக் காத்து வருகின்றனர். மேலும், மாநிலம் முழுவதும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்தி, குற்ற நிகழ்வுகளைத் தடுத்து வருவதுடன், குற்ற வழக்குகளில் எதிரிகளைக் கைது செய்து தண்டனை பெற்றுத் தந்தும் வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான குற்ற நிகழ்வுகள் கணிசமாக குறைந்துள்ளன.
அமைதி, வளம், வளர்ச்சி என்ற கோட்பாட்டின்படி அம்மாவின்அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு மாநிலம் வளர்ச்சி பெற வேண்டுமானால், அந்த மாநிலத்தின் மக்கள் வளம் பெற வேண்டும். மக்கள் வளம் பெற வேண்டுமெனில் அந்த மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கென இது போன்ற பல்வேறு காரணிகள் இருந்தாலும், இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது பொது அமைதி, பாதுகாப்பு ஆகியவைதான். பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துக் காரணிகளும் இருந்தாலும், அமைதியான சூழ்நிலை நிலவவில்லை என்றால் அங்கே எந்தவிதமான வளர்ச்சியும் ஏற்படாது. எனவே தான் பொது அமைதிக்கும், பாதுகாப்பிற்கும், சட்ட ஒழுங்கிற்கும் மிகுந்த முக்கியத்துவத்தை அம்மாவின் அரசு அளித்து வருகிறது. இதன் பயனாக தமிழ்நாட்டை நாடி பல்வேறு தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் வந்தவண்ணம் உள்ளன. இவ்வாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் சந்திப்பும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்பதை பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-01-2026
08 Jan 2026 -
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவுக்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
08 Jan 2026வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
-
நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும்: அதிபர் ட்ரம்ப் தகவல்
08 Jan 2026வாஷிங்டன், நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மர்ம நபர்களால் வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் படுகொலை
08 Jan 2026டாக்கா, மர்ம நபர்களால் வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்.
-
பா.ம.க. சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை : ராமதாஸ் பேட்டி
08 Jan 2026விழுப்புரம், பா.ம.க.
-
பொங்கல் பரிசு தொகை டோக்கன் வாங்காதவர்கள் என்ன செய்யலாம்..?
08 Jan 2026சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
-
பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து அ.தி.மு.க. பேச்சுவரத்தை: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
08 Jan 2026புதுடெல்லி, பா.ம.க.வைத் தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் எங்களுடன் வந்து இணையவுள்ளார்கள்.
-
ராமேசுவரம்-தாம்பரம் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள்
08 Jan 2026திருச்சி, ராமேசுவரம் - தாம்பரம் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணக்கப்பட்டுள்ளது.
-
மதுரையில் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான இணையதள பதிவு நிறைவு
08 Jan 2026மதுரை, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான இணையதள பதிவு நேற்றுடன் முடிவடைந்தது.
-
கடலூரில் இன்று நடைபெறுகிறது தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு: கூட்டணி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
08 Jan 2026கடலூர், கடலூரில் தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் கூட்டணி குறிதது அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் மாநாடு: ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
08 Jan 2026சென்னை, சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைய
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம் நிச்சயம் வெற்றி பெறும்: அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
08 Jan 2026சென்னை, உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி அலறுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ரகுபதி, இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவ
-
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்பொழுது? அமைச்சர் சேகர்பாபு தகவல்
08 Jan 2026சென்னை, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தை பிறந்தால் வழிபிறக்கும்: கூட்டணி குறித்து ஓ.பி.எஸ். விளக்கம்
08 Jan 2026சென்னை, ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி குறிதது தைபிறந்தால் வழிபிறக்கு என்று கூறினார்.
-
ஜன நாயகன் திரைப்படத்தை திரையிட தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பா..? மதுரையில் வைகோ பேட்டி
08 Jan 2026மதுரை, ஜன நாயகன் படத்தை திரையிட தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகள் எதிர்க்கவில்லை என்று வைகே கூறினார்.
-
ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள்: மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை
08 Jan 2026சிட்னி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை சென்னை ஆலந்தூரில் துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
08 Jan 2026சென்னை, சென்னை ஆலந்தூரில் ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
08 Jan 2026மதுரை, சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இடம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க கலெக்டர் தலைமையில் மாவட்டம்தோறும் குழு தமிழ்நாட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
08 Jan 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிக்க மாவட்டம் தோறும் கலெக்டர் தலைமையில் குழு அமைக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
-
கணினிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய சீனா திடீர் தடை
08 Jan 2026பீஜிங், சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் ராணுவ தொழில்நுட்பங்களான அணுசக்தி உபகரணங்கள், மின்னணு பொருட்கள், கணினிகள், விமான பொருட்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட
-
மேலும் வலுப்பெற்ற தாழ்வு மண்டலம்: திருவாரூர், நாகப்பட்டினத்தில் இன்று மிக கனமழை பெய்யும்
08 Jan 2026சென்னை, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஜன.
-
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி தொடக்கம்
08 Jan 2026புதுடெல்லி, முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுக்கும் பணிகள் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு
-
பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது: இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
08 Jan 2026சென்னை, பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என்று இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஞாயிற்றுக்கிழமையான வரும் பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய பார்லி. குழு பரிந்துரை
08 Jan 2026புதுடெல்லி, ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய பாராளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியா? ரிலையன்ஸ் விளக்கம்
08 Jan 2026புதுடெல்லி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கிடையாது என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.


