எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கள்ளக்குறி்ச்சி : தமிழகத்தின் 34-வது மாவட்டம் கள்ளக்குறி்சசியின் சிறப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உங்கள் முகமலர்ச்சியோடு, அரசால் தோற்றுவிக்கப்படுகிறது. இப்புதிய மாவட்டத்தின் மக்களுக்கு முதலில் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலாற்றுக்கு வடக்கில் இருப்பது வட ஆற்காடு மாவட்டம் என்றும், தெற்கில் இருப்பது தென் ஆற்காடு மாவட்டம் என்றும் இருந்தது. 1993-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து பிரித்து விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இன்று விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவாவதால், மாவட்டத்திற்கான அரசு அலுவலக வளாகம், மாவட்ட மருத்துவமனை, பல்வேறு துறைகளின் மாவட்டஅலுவலகங்கள் என ஒரு மாவட்டத்திற்கு உரிய அனைத்து வசதிகளையும் பெறும்.இதனால், இது வரை மக்கள் தங்களது தேவையினை நிறைவேற்றிக் கொள்ள அரசு அலுவலகங்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்யும் நேரம் குறைந்து, எளிதில் அரசு அலுவலகங்களை அணுக வழிவகை செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டமும், மக்களும் வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்ல இது ஏதுவாக இருக்கும். பழம் பெருமைகளைக் கொண்டது இம்மாவட்டம். உதாரணமாக, ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கிடையே, தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு நாடு அமைந்திருந்தது. மலைகள் அதிகம் கொண்டது என்பதால் மலையமா நாடு என்று அழைக்கப்பட்டது. அம்மலை நாடு பெண்ணையாற்றின் உதவியால் பல வளங்களும் பெற்று சிறந்திருந்தது.
திருக்கோவிலூரை தலைநகரமாகக் கொண்ட அம்மலையமா நாட்டை காரி என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் முதலில் முள்ளூருக்கும், முள்ளூர் மலைக்கும் தலைவனாகி, பிறகு மலை நாட்டிற்கே அரசன் ஆனான். சிறந்த கல்விமானான காரி, ஊர்கள் தோறும் கல்விக் கூடங்கள் பல அமைத்தான். ஆண், பெண் பேதமின்றி மக்கள் கல்வியறிவு பெற ஏற்பாடு செய்தான். காரி, கல்வி மட்டுமன்றி, போர்ப் பயிற்சியிலும் வலிமை கொண்டவனாக விரும்பினான். வில், வேல் போன்ற படைக்கல பயிற்சிகளிலும் பங்கேற்று வலிமை உடையவனாக விளங்கினான். அதனால் மூவேந்தர்களும், தங்களுக்கு வேண்டிய பொழுதெல்லாம் அவனைப் படைக்குத் துணையாக அழைப்பர். காரி எப்பக்கமோ, அப்பக்கமே வெற்றி என்ற நிலையில் காரியின் போர்த்திறன் பெரிதும்போற்றப்பட்டது. கல்வி, வீரம் மட்டுமன்றி, நெஞ்சின் ஈரத்திலும் நிகரில்லாத வள்ளலாக காரி திகழ்ந்தான். போரில் செய்த உதவிகளின் பொருட்டு, மூவேந்தர்களும் அவனுக்குபல பொருட்களை பரிசாக வழங்கினார்கள். அவ்வாறு பெற்ற செல்வத்தை ஒருபோதும் தன்னுடையதாகக் கொண்டதில்லை காரி. அனைத்தும் பிறருடையது என்ற எண்ணம்கொண்டிருந்தான். அத்தகைய சிறப்பு வாய்ந்த காரி மன்னர் ஆட்சி செய்த ஊர் தான்திருக்கோவிலூர் ஆகும். அதே போல, சின்ன சேலம், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் பிரதான நகரமாக உள்ளது. இந்த சின்ன சேலம் பேரூராட்சியில் பல நவீன அரிசி ஆலைகள் உள்ளன. மேலும், இப்பேரூராட்சிப் பகுதியில்அதிக அளவு நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளதால், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு நெல் அறுவடை இயந்திரங்கள் இப்பகுதியில் இருந்து தான் செல்கின்றன.
புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகராக கள்ளக்குறிச்சி நகராட்சி விளங்கும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மக்கள் தொகை 13,70,281. மாவட்டத்தின் பரப்பளவு 3,520.37 சதுர கிலோ மீட்டர். கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் இயங்கும். மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்ன சேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன் மலை ஆகிய 6 வட்டங்களும், 23 உள் வட்டங்களும், 558 வருவாய் கிராமங்களும் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தில் திருக்கோவிலூர் (பகுதி), கள்ளக்குறிச்சி, சங்கராபுரம்,உளுந்தூர்பேட்டை (பகுதி), ரிஷிவந்தியம் என 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் உட்பட 9 ஊராட்சி ஒன்றியங்களும், சின்ன சேலம்,சங்கராபுரம் உட்பட 7 பேரூராட்சிகளும், 406 கிராம ஊராட்சிகளும் அமைந்துள்ளன.
இம்மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன் மலையானது கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதியாகும். மேலும், பச்சைமலை, ஜவ்வாது மற்றும் சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவேரி ஆற்றுவடி நிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லைகளாக அமைந்துள்ளன. கல்வராயன் மலையின் வட பகுதி சின்ன கல்வராயன் மலை என்றும், தென் பகுதி பெரியகல்வராயன் மலை என்றும் அழைக்கப்படுகிறது. மணியாறு மற்றும் முக்தா ஆறு இணையும் இடத்தில் மணிமுக்தா அணை கட்டப்பட்டுள்ளது. இம்மலையில்தான்கோமுகி நதி உற்பத்தியாகி, அந்நதியின் குறுக்கே கோமுகி அணை கட்டப்பட்டுள்ளது.கோமுகி அணையைச் சுற்றி 15 ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய பூங்காஅமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் நீராட மேகம், பெரியார் மற்றும்புண்ணிம்பாடி போன்ற அருவிகள் உள்ளன. மலையில் உள்ள ஓடையின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கப்பட்டு, படகு குழாம் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்று சுற்றுலாப் பயணிகளை கவரும் பல்வேறு அம்சங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன.இம்மாவட்டத்தில் மணிமுக்தா மற்றும் கோமுகி அணைகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 16,300 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன. இதில் நெல் மற்றும் கரும்பு,கடலை, எள் மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்கள் அதிக அளவில் சாகுபடிசெய்யப்படுகின்றன. இதனால் இம்மாவட்டத்தில் கோமுகி சர்க்கரை ஆலை, மூங்கில் துறைப்பட்டு சர்க்கரை ஆலை, தியாகதுருகம் சர்க்கரை ஆலை என பலசர்க்கரை ஆலைகளும், நவீன அரிசி ஆலைகள் போன்ற பல தொழிற்சாலைகளும் நிறைந்துள்ளன. மேலும், இங்கே அரசின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளிலும், புதியகாடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள மலையோர கிராமங்களிலும் சுவைமிக்க விளாம் பழங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளியூர்களுக்குஅனுப்பப்படுகிறது.
இது போன்ற எண்ணற்ற இயற்கை வளங்களைக் கொண்ட இந்த மலைப் பகுதிகளை, வருங்காலங்களில், தேவைகளுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மலைவாழ் மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். அரசும் மலைவாழ் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து நல்ல பலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வராயன் மலையில் வாழும் பழங்குடியின மக்களுக்கான திட்டங்களை சீரியமுறையில் செயல்படுத்த ஒரு திட்ட அலுவலரும், அலுவலகமும் 2017- முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் மலைவாழ் மக்களுக்கான திட்டங்கள் விரைந்து சென்றடைவது உறுதி செய்யப்பட்டது. பி.எட்., மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த பழங்குடியினஇளைஞர்களைக் கொண்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்ட பழங்குடியின மக்கள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள ஏதுவாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டுத் திறன் மேம்பாட்டுமையம் ஒன்று வெள்ளிமலையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய கள்ளக்குறிச்சி மாவட்டம் தோற்றுவிக்கப்படுவதன் மூலம், மலைவாழ் மக்கள் வாழுகின்ற மலைப் பிரதேசமான கல்வராயன் மலையை உள்ளடக்கிய ஒரு புதிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது இதற்காக கட்டடம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்., சுகாதாரத் துறை மூலமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 3.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விபத்துமற்றும் அவசர கால சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 12.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாய் சேய் நலப் பிரிவு அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை மூலமாக பல்வேறு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டும் பல்வேறு பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவவாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-07-2025.
18 Jul 2025 -
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆடும் அணியிலிருந்து கருண் நாயர் நீக்கப்படுகிறார்? பரபரப்பு தகவல்
17 Jul 2025லண்டன்: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
மரணமடைந்தவர்களின் 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம்
17 Jul 2025டெல்லி: 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
ராணுவ தலைமையகம் மீது குண்டு வீச்சு- இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை
17 Jul 2025டமாஸ்கஸ்: சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
-
ஐ.பி.எல். காரணமாக மே.இ.தீவுகள் அணி தரம் குறைந்து வருகிறது: லாரா
17 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின்: ஐ.பி.எல். மற்றும் மற்ற டி20 லீக் ஆகியவற்றின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது என லாரா தெரிவித்துள்ளார்.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
திருப்புவனம் காவலாளி மரண வழக்கு: 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன்
17 Jul 2025சிவகங்கை: மடப்புரம் காவலாளி மரண வழக்கில் 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
-
ஒரே நாளில் 30 பேர் பலி: பாக்.கில் மழைக்கால அவசரநிலை அறிவிப்பு
17 Jul 2025லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் "மழை அவசரநிலைய
-
ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்து பறிமுதல்
17 Jul 2025டெல்லி: ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
-
கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா
17 Jul 2025கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரத்து: அமெரிக்க தூதரம் கடும் எச்சரிக்கை
17 Jul 2025அமெரிக்கா: குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரதது செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இந்திய அணிக்கு கோலி மீண்டும் திரும்ப வேண்டும்: முன்னாள் வீரர் வேண்டுகோள்
17 Jul 2025மும்பை: இளம் வீரர்களுக்கு உதவும் வகையில் ஓய்விலிருந்து திரும்ப வேண்டும் என்று விராட் கோலிக்கு முன்னாள் வீரரான மதன் லால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
4-வது டெஸ்டில் பும்ரா கட்டாயம் விளையாட வேண்டும்: இர்பான்
17 Jul 2025மான்செஸ்டர்: 4-வது போட்டியில் பும்ரா களம் இறக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக விருந்தோம்பல் சேவையை சிறப்பாக நடத்த வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்
17 Jul 2025சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சிறப்பான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
-
கம்யூனிஸ்டுகளை இ.பி.எஸ். அழைப்பது நகைச்சுவையாக உள்ளது: முத்தரசன்
17 Jul 2025சென்னை: கம்யூனிஸ்டு கட்சிகளை இ.பி.எஸ். அழைப்பது நகைச்சுவையாக உள்ளது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
-
பள்ளிகளில் விழிப்புணர்வுக்காக ஆயில் போர்டுகள் வைக்க அறிவுறுத்தல்
17 Jul 2025புதுடெல்லி: மாணவர்களின் விழிப்புணர்வுக்காக பள்ளிகளில் 'ஆயில்' போர்டுகள் வைக்க சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியுள்ளது.
-
மகளிர் முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
17 Jul 2025சவுத்தம்டான்: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
சுற்றுப்பயணம்...
-
பீகார் மாநிலத்தில் ரூ.7,200 கோடியில் திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
18 Jul 2025மோட்டிஹரி : நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பீகார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித
-
‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு
18 Jul 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரி
-
இன்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மி கட்சி : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
18 Jul 2025புதுடெல்லி : தேசிய அளவில் இன்டியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
18 Jul 2025சென்னை : கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உளள ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவில் அவரது நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.