எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கள்ளக்குறி்ச்சி : தமிழகத்தின் 34-வது மாவட்டம் கள்ளக்குறி்சசியின் சிறப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உங்கள் முகமலர்ச்சியோடு, அரசால் தோற்றுவிக்கப்படுகிறது. இப்புதிய மாவட்டத்தின் மக்களுக்கு முதலில் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலாற்றுக்கு வடக்கில் இருப்பது வட ஆற்காடு மாவட்டம் என்றும், தெற்கில் இருப்பது தென் ஆற்காடு மாவட்டம் என்றும் இருந்தது. 1993-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து பிரித்து விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இன்று விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவாவதால், மாவட்டத்திற்கான அரசு அலுவலக வளாகம், மாவட்ட மருத்துவமனை, பல்வேறு துறைகளின் மாவட்டஅலுவலகங்கள் என ஒரு மாவட்டத்திற்கு உரிய அனைத்து வசதிகளையும் பெறும்.இதனால், இது வரை மக்கள் தங்களது தேவையினை நிறைவேற்றிக் கொள்ள அரசு அலுவலகங்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்யும் நேரம் குறைந்து, எளிதில் அரசு அலுவலகங்களை அணுக வழிவகை செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டமும், மக்களும் வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்ல இது ஏதுவாக இருக்கும். பழம் பெருமைகளைக் கொண்டது இம்மாவட்டம். உதாரணமாக, ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கிடையே, தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு நாடு அமைந்திருந்தது. மலைகள் அதிகம் கொண்டது என்பதால் மலையமா நாடு என்று அழைக்கப்பட்டது. அம்மலை நாடு பெண்ணையாற்றின் உதவியால் பல வளங்களும் பெற்று சிறந்திருந்தது.
திருக்கோவிலூரை தலைநகரமாகக் கொண்ட அம்மலையமா நாட்டை காரி என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் முதலில் முள்ளூருக்கும், முள்ளூர் மலைக்கும் தலைவனாகி, பிறகு மலை நாட்டிற்கே அரசன் ஆனான். சிறந்த கல்விமானான காரி, ஊர்கள் தோறும் கல்விக் கூடங்கள் பல அமைத்தான். ஆண், பெண் பேதமின்றி மக்கள் கல்வியறிவு பெற ஏற்பாடு செய்தான். காரி, கல்வி மட்டுமன்றி, போர்ப் பயிற்சியிலும் வலிமை கொண்டவனாக விரும்பினான். வில், வேல் போன்ற படைக்கல பயிற்சிகளிலும் பங்கேற்று வலிமை உடையவனாக விளங்கினான். அதனால் மூவேந்தர்களும், தங்களுக்கு வேண்டிய பொழுதெல்லாம் அவனைப் படைக்குத் துணையாக அழைப்பர். காரி எப்பக்கமோ, அப்பக்கமே வெற்றி என்ற நிலையில் காரியின் போர்த்திறன் பெரிதும்போற்றப்பட்டது. கல்வி, வீரம் மட்டுமன்றி, நெஞ்சின் ஈரத்திலும் நிகரில்லாத வள்ளலாக காரி திகழ்ந்தான். போரில் செய்த உதவிகளின் பொருட்டு, மூவேந்தர்களும் அவனுக்குபல பொருட்களை பரிசாக வழங்கினார்கள். அவ்வாறு பெற்ற செல்வத்தை ஒருபோதும் தன்னுடையதாகக் கொண்டதில்லை காரி. அனைத்தும் பிறருடையது என்ற எண்ணம்கொண்டிருந்தான். அத்தகைய சிறப்பு வாய்ந்த காரி மன்னர் ஆட்சி செய்த ஊர் தான்திருக்கோவிலூர் ஆகும். அதே போல, சின்ன சேலம், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் பிரதான நகரமாக உள்ளது. இந்த சின்ன சேலம் பேரூராட்சியில் பல நவீன அரிசி ஆலைகள் உள்ளன. மேலும், இப்பேரூராட்சிப் பகுதியில்அதிக அளவு நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளதால், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு நெல் அறுவடை இயந்திரங்கள் இப்பகுதியில் இருந்து தான் செல்கின்றன.
புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகராக கள்ளக்குறிச்சி நகராட்சி விளங்கும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மக்கள் தொகை 13,70,281. மாவட்டத்தின் பரப்பளவு 3,520.37 சதுர கிலோ மீட்டர். கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் இயங்கும். மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்ன சேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன் மலை ஆகிய 6 வட்டங்களும், 23 உள் வட்டங்களும், 558 வருவாய் கிராமங்களும் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தில் திருக்கோவிலூர் (பகுதி), கள்ளக்குறிச்சி, சங்கராபுரம்,உளுந்தூர்பேட்டை (பகுதி), ரிஷிவந்தியம் என 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் உட்பட 9 ஊராட்சி ஒன்றியங்களும், சின்ன சேலம்,சங்கராபுரம் உட்பட 7 பேரூராட்சிகளும், 406 கிராம ஊராட்சிகளும் அமைந்துள்ளன.
இம்மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன் மலையானது கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதியாகும். மேலும், பச்சைமலை, ஜவ்வாது மற்றும் சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவேரி ஆற்றுவடி நிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லைகளாக அமைந்துள்ளன. கல்வராயன் மலையின் வட பகுதி சின்ன கல்வராயன் மலை என்றும், தென் பகுதி பெரியகல்வராயன் மலை என்றும் அழைக்கப்படுகிறது. மணியாறு மற்றும் முக்தா ஆறு இணையும் இடத்தில் மணிமுக்தா அணை கட்டப்பட்டுள்ளது. இம்மலையில்தான்கோமுகி நதி உற்பத்தியாகி, அந்நதியின் குறுக்கே கோமுகி அணை கட்டப்பட்டுள்ளது.கோமுகி அணையைச் சுற்றி 15 ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய பூங்காஅமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் நீராட மேகம், பெரியார் மற்றும்புண்ணிம்பாடி போன்ற அருவிகள் உள்ளன. மலையில் உள்ள ஓடையின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கப்பட்டு, படகு குழாம் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்று சுற்றுலாப் பயணிகளை கவரும் பல்வேறு அம்சங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன.இம்மாவட்டத்தில் மணிமுக்தா மற்றும் கோமுகி அணைகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 16,300 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன. இதில் நெல் மற்றும் கரும்பு,கடலை, எள் மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்கள் அதிக அளவில் சாகுபடிசெய்யப்படுகின்றன. இதனால் இம்மாவட்டத்தில் கோமுகி சர்க்கரை ஆலை, மூங்கில் துறைப்பட்டு சர்க்கரை ஆலை, தியாகதுருகம் சர்க்கரை ஆலை என பலசர்க்கரை ஆலைகளும், நவீன அரிசி ஆலைகள் போன்ற பல தொழிற்சாலைகளும் நிறைந்துள்ளன. மேலும், இங்கே அரசின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளிலும், புதியகாடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள மலையோர கிராமங்களிலும் சுவைமிக்க விளாம் பழங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளியூர்களுக்குஅனுப்பப்படுகிறது.
இது போன்ற எண்ணற்ற இயற்கை வளங்களைக் கொண்ட இந்த மலைப் பகுதிகளை, வருங்காலங்களில், தேவைகளுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மலைவாழ் மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். அரசும் மலைவாழ் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து நல்ல பலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வராயன் மலையில் வாழும் பழங்குடியின மக்களுக்கான திட்டங்களை சீரியமுறையில் செயல்படுத்த ஒரு திட்ட அலுவலரும், அலுவலகமும் 2017- முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் மலைவாழ் மக்களுக்கான திட்டங்கள் விரைந்து சென்றடைவது உறுதி செய்யப்பட்டது. பி.எட்., மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த பழங்குடியினஇளைஞர்களைக் கொண்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்ட பழங்குடியின மக்கள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள ஏதுவாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டுத் திறன் மேம்பாட்டுமையம் ஒன்று வெள்ளிமலையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய கள்ளக்குறிச்சி மாவட்டம் தோற்றுவிக்கப்படுவதன் மூலம், மலைவாழ் மக்கள் வாழுகின்ற மலைப் பிரதேசமான கல்வராயன் மலையை உள்ளடக்கிய ஒரு புதிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது இதற்காக கட்டடம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்., சுகாதாரத் துறை மூலமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 3.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விபத்துமற்றும் அவசர கால சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 12.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாய் சேய் நலப் பிரிவு அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை மூலமாக பல்வேறு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டும் பல்வேறு பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவவாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...
-
கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு
23 Sep 2025கோபி : கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.