எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கள்ளக்குறி்ச்சி : தமிழகத்தின் 34-வது மாவட்டம் கள்ளக்குறி்சசியின் சிறப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உங்கள் முகமலர்ச்சியோடு, அரசால் தோற்றுவிக்கப்படுகிறது. இப்புதிய மாவட்டத்தின் மக்களுக்கு முதலில் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலாற்றுக்கு வடக்கில் இருப்பது வட ஆற்காடு மாவட்டம் என்றும், தெற்கில் இருப்பது தென் ஆற்காடு மாவட்டம் என்றும் இருந்தது. 1993-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து பிரித்து விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இன்று விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவாவதால், மாவட்டத்திற்கான அரசு அலுவலக வளாகம், மாவட்ட மருத்துவமனை, பல்வேறு துறைகளின் மாவட்டஅலுவலகங்கள் என ஒரு மாவட்டத்திற்கு உரிய அனைத்து வசதிகளையும் பெறும்.இதனால், இது வரை மக்கள் தங்களது தேவையினை நிறைவேற்றிக் கொள்ள அரசு அலுவலகங்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்யும் நேரம் குறைந்து, எளிதில் அரசு அலுவலகங்களை அணுக வழிவகை செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டமும், மக்களும் வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்ல இது ஏதுவாக இருக்கும். பழம் பெருமைகளைக் கொண்டது இம்மாவட்டம். உதாரணமாக, ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கிடையே, தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு நாடு அமைந்திருந்தது. மலைகள் அதிகம் கொண்டது என்பதால் மலையமா நாடு என்று அழைக்கப்பட்டது. அம்மலை நாடு பெண்ணையாற்றின் உதவியால் பல வளங்களும் பெற்று சிறந்திருந்தது.
திருக்கோவிலூரை தலைநகரமாகக் கொண்ட அம்மலையமா நாட்டை காரி என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் முதலில் முள்ளூருக்கும், முள்ளூர் மலைக்கும் தலைவனாகி, பிறகு மலை நாட்டிற்கே அரசன் ஆனான். சிறந்த கல்விமானான காரி, ஊர்கள் தோறும் கல்விக் கூடங்கள் பல அமைத்தான். ஆண், பெண் பேதமின்றி மக்கள் கல்வியறிவு பெற ஏற்பாடு செய்தான். காரி, கல்வி மட்டுமன்றி, போர்ப் பயிற்சியிலும் வலிமை கொண்டவனாக விரும்பினான். வில், வேல் போன்ற படைக்கல பயிற்சிகளிலும் பங்கேற்று வலிமை உடையவனாக விளங்கினான். அதனால் மூவேந்தர்களும், தங்களுக்கு வேண்டிய பொழுதெல்லாம் அவனைப் படைக்குத் துணையாக அழைப்பர். காரி எப்பக்கமோ, அப்பக்கமே வெற்றி என்ற நிலையில் காரியின் போர்த்திறன் பெரிதும்போற்றப்பட்டது. கல்வி, வீரம் மட்டுமன்றி, நெஞ்சின் ஈரத்திலும் நிகரில்லாத வள்ளலாக காரி திகழ்ந்தான். போரில் செய்த உதவிகளின் பொருட்டு, மூவேந்தர்களும் அவனுக்குபல பொருட்களை பரிசாக வழங்கினார்கள். அவ்வாறு பெற்ற செல்வத்தை ஒருபோதும் தன்னுடையதாகக் கொண்டதில்லை காரி. அனைத்தும் பிறருடையது என்ற எண்ணம்கொண்டிருந்தான். அத்தகைய சிறப்பு வாய்ந்த காரி மன்னர் ஆட்சி செய்த ஊர் தான்திருக்கோவிலூர் ஆகும். அதே போல, சின்ன சேலம், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் பிரதான நகரமாக உள்ளது. இந்த சின்ன சேலம் பேரூராட்சியில் பல நவீன அரிசி ஆலைகள் உள்ளன. மேலும், இப்பேரூராட்சிப் பகுதியில்அதிக அளவு நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளதால், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு நெல் அறுவடை இயந்திரங்கள் இப்பகுதியில் இருந்து தான் செல்கின்றன.
புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகராக கள்ளக்குறிச்சி நகராட்சி விளங்கும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மக்கள் தொகை 13,70,281. மாவட்டத்தின் பரப்பளவு 3,520.37 சதுர கிலோ மீட்டர். கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் இயங்கும். மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்ன சேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன் மலை ஆகிய 6 வட்டங்களும், 23 உள் வட்டங்களும், 558 வருவாய் கிராமங்களும் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தில் திருக்கோவிலூர் (பகுதி), கள்ளக்குறிச்சி, சங்கராபுரம்,உளுந்தூர்பேட்டை (பகுதி), ரிஷிவந்தியம் என 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் உட்பட 9 ஊராட்சி ஒன்றியங்களும், சின்ன சேலம்,சங்கராபுரம் உட்பட 7 பேரூராட்சிகளும், 406 கிராம ஊராட்சிகளும் அமைந்துள்ளன.
இம்மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன் மலையானது கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதியாகும். மேலும், பச்சைமலை, ஜவ்வாது மற்றும் சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவேரி ஆற்றுவடி நிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லைகளாக அமைந்துள்ளன. கல்வராயன் மலையின் வட பகுதி சின்ன கல்வராயன் மலை என்றும், தென் பகுதி பெரியகல்வராயன் மலை என்றும் அழைக்கப்படுகிறது. மணியாறு மற்றும் முக்தா ஆறு இணையும் இடத்தில் மணிமுக்தா அணை கட்டப்பட்டுள்ளது. இம்மலையில்தான்கோமுகி நதி உற்பத்தியாகி, அந்நதியின் குறுக்கே கோமுகி அணை கட்டப்பட்டுள்ளது.கோமுகி அணையைச் சுற்றி 15 ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய பூங்காஅமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் நீராட மேகம், பெரியார் மற்றும்புண்ணிம்பாடி போன்ற அருவிகள் உள்ளன. மலையில் உள்ள ஓடையின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கப்பட்டு, படகு குழாம் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்று சுற்றுலாப் பயணிகளை கவரும் பல்வேறு அம்சங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன.இம்மாவட்டத்தில் மணிமுக்தா மற்றும் கோமுகி அணைகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 16,300 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன. இதில் நெல் மற்றும் கரும்பு,கடலை, எள் மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்கள் அதிக அளவில் சாகுபடிசெய்யப்படுகின்றன. இதனால் இம்மாவட்டத்தில் கோமுகி சர்க்கரை ஆலை, மூங்கில் துறைப்பட்டு சர்க்கரை ஆலை, தியாகதுருகம் சர்க்கரை ஆலை என பலசர்க்கரை ஆலைகளும், நவீன அரிசி ஆலைகள் போன்ற பல தொழிற்சாலைகளும் நிறைந்துள்ளன. மேலும், இங்கே அரசின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளிலும், புதியகாடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள மலையோர கிராமங்களிலும் சுவைமிக்க விளாம் பழங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளியூர்களுக்குஅனுப்பப்படுகிறது.
இது போன்ற எண்ணற்ற இயற்கை வளங்களைக் கொண்ட இந்த மலைப் பகுதிகளை, வருங்காலங்களில், தேவைகளுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மலைவாழ் மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். அரசும் மலைவாழ் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து நல்ல பலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வராயன் மலையில் வாழும் பழங்குடியின மக்களுக்கான திட்டங்களை சீரியமுறையில் செயல்படுத்த ஒரு திட்ட அலுவலரும், அலுவலகமும் 2017- முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் மலைவாழ் மக்களுக்கான திட்டங்கள் விரைந்து சென்றடைவது உறுதி செய்யப்பட்டது. பி.எட்., மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த பழங்குடியினஇளைஞர்களைக் கொண்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்ட பழங்குடியின மக்கள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள ஏதுவாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டுத் திறன் மேம்பாட்டுமையம் ஒன்று வெள்ளிமலையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய கள்ளக்குறிச்சி மாவட்டம் தோற்றுவிக்கப்படுவதன் மூலம், மலைவாழ் மக்கள் வாழுகின்ற மலைப் பிரதேசமான கல்வராயன் மலையை உள்ளடக்கிய ஒரு புதிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது இதற்காக கட்டடம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்., சுகாதாரத் துறை மூலமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 3.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விபத்துமற்றும் அவசர கால சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 12.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாய் சேய் நலப் பிரிவு அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை மூலமாக பல்வேறு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டும் பல்வேறு பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவவாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சஞ்சு சாம்சனை வாங்க பேச்சுவார்த்தை
08 Nov 2025ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.
-
தொகுதிவாரியாக நேர்காணல்: கிருஷ்ணகிரி தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
08 Nov 2025கிருஷ்ணகிரி : ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் வெற்றி பெறவில்லையென்றால் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவி பறிபோகும் என கிருஷ்ணகிரி தி.மு.க.
-
59-வது பிறந்தநாள்: சீமானுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
08 Nov 2025சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
தென் ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் காயம்: வரும் 14-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு திரும்புவாரா ரிஷப் பண்ட்?
08 Nov 2025பெங்களூரு : பெங்களூருவில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட் காயமட
-
தருமபுரியில் இன்று பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப்பயண நிறைவு விழா
08 Nov 2025தருமபுரி : தருமபுரியில் பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப் பயண நிறைவு விழா இன்று நடக்கிறது.
-
சாதி, மத மோதலை உருவாக்குகிறது: காங்கிரஸ் மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
08 Nov 2025சசராம் : மக்களிடையே சாதி, மத மோதலை உருவாக்குகிறது என்று காங்கிரஸ் கட்சி மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டியுள்ளார்.
-
ஆந்திரா-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
08 Nov 2025சேலம் : ஆந்திரா - கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-11-2025.
08 Nov 2025 -
பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்ததால் சர்ச்சை
08 Nov 2025பாட்னா : பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டு திருத்த புதிய வசதி
08 Nov 2025டெல்லி : செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டை திருத்த புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.
-
உல்லாசத்திற்கு இடையூறு; கணவரை கொன்ற மனைவி
08 Nov 2025மீரட் : உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனை ஏவி கழுத்தை நெரித்து கொன்ற மனைவியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: சிறுவனின் தாக்குதலில் பெண் உயிரிழப்பு
08 Nov 2025இட்டாநகர் : பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சிறுவனின் கொடூர தாக்குதலில் 40 வயது பெண் உயிரிழந்தார்.
-
சீமானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
08 Nov 2025சென்னை : சீமானின் கொள்கையில் பிடிவாதம் வியத்தலுக்குரியவை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்பு : ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Nov 2025துபாய் : 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்க உள்ளதாக ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
-
6 நாட்கள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
08 Nov 2025டெல்லி : அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா ஜனாதிபதி திரெளபதி முர்மு புறப்பட்டு சென்றார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை
08 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து நேற்று 3-வது நாளாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
கால்மேகி புயலால் கடும் பாதிப்பு: பிலிப்பைன்ஸில் பலி 188 ஆனது
08 Nov 2025மணிலா : பிலிப்பைன்ஸில் கால்மேகி புயல் ஏற்பட்டது இதில் 188 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பாகிஸ்தான் ரகசிய அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது : இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு
08 Nov 2025புதுடெல்லி : பாகிஸ்தானின் ரகசிய அணு ஆயுத நடவடிக்கை குறித்து இந்தியா குற்றச்சாட்டியுள்ளது.
-
உத்தரபிரதேச மாநிலத்தில் விபரீதம்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் திடீர் தற்கொலை
08 Nov 2025லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
கடைசி டி-20 போட்டி மழையால் ரத்து: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா
08 Nov 2025பிரிஸ்பேன் : கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது த.வெ.க.
08 Nov 2025கரூர் : கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ.யிடம் ஆதாரங்களை த.வெ.க. ஒப்படைத்தது.
-
ரஷ்ய எண்ணெய் தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு: ட்ரம்ப் அறிவிப்பு
08 Nov 2025வாஷிங்டன், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து ஹங்கேரிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விலக்கு அளித்துள்ளார்.
-
இதய நோய், புற்றுநோய் இருந்தால் விசா ரத்து - அமெரிக்க அரசு முடிவு
08 Nov 2025வாஷிங்டேன் : இதய நோய், புற்றுநோய் இருந்தால் வெளிநாட்டினருக்கான விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
-
மகளிர் உலக கோப்பை இறுதிப்போட்டி: நேரலையில் 18.5 கோடி பேர் கண்டுகளித்து புதிய சாதனை
08 Nov 2025மும்பை : இந்தியாவில் மகளிர் உலககோப்பை போட்டியில் அதிக அளவிலான பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் மட்டும் 6,453 மெட்ரிக் டன் அளவு கேழ்வரகு கொள்முதல் : அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
08 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் து


