எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐதராபாத் : தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைதான நால்வரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நேற்று ஐதராபாத் வந்தனர்.
முதலில் அவர்கள், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்ற இடமும், என்கவுன்ட்டரில் நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்ட இடமுமான ஷத்நகரின் சடன்பள்ளி கிராமத்தில் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துகின்றனர். சம்பவ இடத்துக்கு செல்லும் தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள், என்கவுன்ட்டர் எப்படி நடந்தது என்பது பற்றி விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில், என்கவுன்ட்டரில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், நான்கு பேரின் உடல்களும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்து, உடல்களை ஆய்வு செய்யவிருக்கும் அதிகாரிகள், உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினரையும் சந்தித்துப் பேச உள்ளனர். அதோடு, பெண் மருத்துவர் கடத்தப்பட்ட டொண்டுபள்ளி சுங்கச்சாவடிக்கும் நேரில் வந்து அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


