எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நத்தம்-- தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கரும்பு,மஞ்சள்,பனங்கிழங்கு,வெல்லம், உள்ளிட்ட பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. அதேபோல் பொங்கல் பானைகளும் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கும் சாணார்பட்டி- பாறைப்பட்டி, நத்தம், மீனாட்சிபுரம் போன்ற பகுதிகளில் பொங்கல் பானைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு அளவுகளில் மண் பானைகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இங்கு தயார் செய்யப்படும் பொங்கல் பானைகள்திண்டுக்கல், ஒட்டன்சத்திரம்,வேடசந்தூர், பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட மாவட்ட பகுதிகளுக்கும், கேரளாவிற்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இதில் மொத்தமாக வாங்கி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்த பானை விலை அதன் அளவை பொறுத்து ரூ.75 முதல் ரூ.200வரை விற்பனை செய்யப்படுகிறது.இந்த வருடம் மழை நல்ல முறையில் பெய்து இருப்பதால் மண்பானை வியாபாரம் நன்றாக இருக்கும் என பானை தயாரிப்பாளர்கள் பொங்கலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


