எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அ தி.மு.க. நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க. தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அ தி.மு.க. நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் ‘பாரத் ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 103–வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காலை (17-ம் தேதி), சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அ தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அங்குள்ள ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்தார்கள். அப்போது, இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் திரளாகக் கூடியிருந்த கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார்கள். தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் மலர்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த பகுதி முழுவதும் ஏராளமான அ தி.மு.க. கொடி, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. தொண்டர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அ தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் கே.ஏ. செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.டி. ராஜேந்திர பாலாஜி, பென்ஜமின் உள்ளிட்ட அமைச்சர்கள், தம்பிதுரை, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர். வைத்திலிங்கம் எம்.பி., கே.பி.முனுசாமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, என்.ஆர். சிவபதி, அமைப்பு செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் பி.சத்தியா, விருகை வி.என். ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், டி.ஜி. வெங்கடேஷ் பாபு, வாலாஜாபாத் கணேசன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், விவசாய பிரிவு செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், டாக்டர் ஜெயவர்த்தன், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், ஆதிராஜாராம், மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், மாநில இலக்கிய அணி இணை செயலாளர்கள் நடிகர் ஜெயகோவிந்தன், டி.சிவராஜ், ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.குப்பன், கே.பி.கந்தன், வழக்கறிஞர் ஆர். சதாசிவம், பரிமேலழகர், ஏ.ஏ. அர்ஜூணன், கே.துளசி, மின்சாரம் சத்திய நாராயண மூர்த்தி, தி.நகர் ஆறுமுகம், ஆ.பழனி, டாக்டர் சுனில், மீனவர் அணி செயலாளர் நீலாங்கரை முனுசாமி, செய்தி தொடர்பாளர் கோவை சத்தியன், செம்மலை எம்.எல்.ஏ., லிகாயத் அலிகான், கே.எஸ். அஸ்லாம், முத்துபரணி, பி.சின்னையன், பி.இளையமாறன், இளைஞர் அணி பகுதி செயலாளர் வி.எம்.ஜி. முகுந்தன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் எஸ்.எஸ்.கே. கோபால், ஆயிரம் விளக்கு மனோகர், வடபழனி ராமகிருஷ்ணன், வேல் ஆதித்தன் உட்பட எராளமானபேர் கலந்து கொண்டனர்.
அ தி.மு.க. தலைமை கழகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்ததை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமைக் கழகத்தில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ. தமிழ்மகன் உசேன் ஏற்பாட்டின்பேரில் தொண்டர்களுக்கு சர்க்கரைப் பொங்கலும், அதே போல், தலைமைக் கழகம் அருகே, தென் சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தி.நகர் சத்தியா எம்.எல்.ஏ., ஏற்பாட்டின்பேரில், பெருந்திரளான அளவில் திரண்டிருந்த கழக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் வெஜிடபிள் பிரியாணியும் வழங்கப்பட்டன. தலைமைக் கழகம் முன்பு தலைமைக் கழக பாடகர் ஆர்.கே.குமாரின் இசை நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. கட்சி கொள்கை விளக்க பாடல்கள், எம்.ஜி.ஆர். பட பாடல்களை பாடி உற்சாகமூட்டினர். தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தலைமைக் கழக வளாகம், நுழைவுவாயில், வழிநெடுக ஏராளமான கறுப்பு, வெள்ளை, சிவப்பு பலூன்கள் கட்டப்பட்டு அழகுற காட்சி அளித்தன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு தொண்டர்களும் பொதுமக்களும் ஏராளமான பேர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். சிலை அருகே நின்று ஆர்வத்துடன் அவர்கள் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு த.வெக. தலைவர் விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
21 Sep 2025விருதுநகர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
த.வெ.க.வுக்கு பெருகும் ஆதரவால் பயந்து பொய்யை பரப்புகின்றனர் : விஜய் கடும் விமர்சனம்
21 Sep 2025சென்னை : நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
-
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலை
21 Sep 2025திருவனந்தபுரம் : நவராத்திரி விழாவை முன்னட்டு குமரியில் இருந்து சுவாமி சிலைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
பெண்களை வாதாடி ஜெயிக்க முடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு
21 Sep 2025சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோ
-
இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ள தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள்: அதிபர் ட்ரம்ப்
21 Sep 2025வாஷிங்டன் : வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
21 Sep 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடி
-
அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வு : 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வால் சுமார் 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம்
21 Sep 2025டாக்கா : 4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
விர்ஜீனியா மாகாண வழக்கறிஞராக லிண்ட்சேவை நியமித்தார் அமெரிக்க அதிபர்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு நாட்டு முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
-
தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு: வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மோகன்லால்
21 Sep 2025திருவனந்தபுரம் : தனக்கு தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்த நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நடிகர் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்
-
தாலிபான்கள் பாக்ராம் விமான தள கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் விரைவில் ஒப்படைக்க வேண்டும்: ட்ரம்ப்
21 Sep 2025நியூயார்க் : ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்ததையடுத்து ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர்.
-
எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் : மத்திய அரசு கருத்து
21 Sep 2025புதுடெல்லி : எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.