எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மத்திய அரசின் உட்கட்டமைப்பு பட்டியலில் தமிழ்நாட்டில் 8 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான 179 திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். பட்ஜெட்டில் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2023 தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டத்தை வெளியிட்டிருந்தார். தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023–ல் பட்டியலிடப்பட்ட பல திட்டங்கள், செயலாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே நாம் திட்டப் பட்டியலைத் தயார் செய்து வைத்திருந்ததால், சமீபத்தில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய உட்கட்டமைப்பு பட்டியலில் தமிழகத்திற்கு பயனளிக்கும் பல திட்டங்களை அதில் சேர்ப்பதற்கு உடனடியாக தெரிவிக்க முடிந்தது. அதன்படி, தமிழ்நாட்டின் 8.58 லட்சம் கோடி ரூபாய் மொத்தச் செலவிலான 179 திட்டங்கள் மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய அரசு இத்திட்டங்கள் முழுமை பெறுவதற்கு உதவியளிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம். விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்காக, திட்ட தயாரிப்பு நிதியிலிருந்து இதுவரை 278.11 கோடி ரூபாயை அனுமதித்துள்ளது. இதன் மூலம், வெவ்வேறு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவியை பெறவும், இந்திய அரசிடமிருந்து நிதியுதவியை வாங்குவதற்கு ஏதுவாக நம்மால் உடனடியாக திட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்க முடிகின்றது.
தமிழ்நாடு, பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களை உடனடியாக செயல்படுத்தக்கூடிய திறனையும், ஆயத்த நிலையையும் கொண்டுள்ளதை நிதி நிறுவனங்கள் பாராட்டியுள்ளன. 2020-21 ம் ஆண்டிற்கான வரவு, செலவுத் திட்டத்தின் கீழ், திட்ட தயாரிப்பு நிதிக்கென 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட தனியார் நிதி நிறுவனங்களின் முதலீடுகளையும் நாம் ஈர்க்கும் நிலையில் உள்ளோம். தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம், தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதியம், தமிழ்நாடு உறைவிட நிதியம் - பகுதி-II மற்றும் தமிழ்நாடு உயிரித்தொழில்நுட்ப துணிகர முதலீடு நிதியம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறது.
மத்தியக் கிழக்கு நாடுகள், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருக்கும், ஓய்வூதிய மற்றும் அரசு நிதியங்கள் உள்ளிட்ட, முதலீட்டாளர்களிடமிருந்தும், தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகத்தின் நிதி திரட்டும் முயற்சிகள் பலன் பெறும் நிலையில் உள்ளன. எட்டு பெரிய திட்டங்கள், முதலீட்டுக்கான தயார் நிலையில் உள்ளன. 2020-21 ம் ஆண்டில், தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம், திட்டங்களில் 2,000 கோடி ரூபாயை முதலீடு செய்வதற்குத் தயாராக உள்ளது. இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


