எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அத்திக்கடவு - அவிநாசி நீர்ப்பாசன திட்டத்திற்காக பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார். இதில், நீர்வளத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
பாசன ஏரிகளைப் புனரமைப்பதற்காக 510.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் 1,364 நீர்ப்பாசனப் பணிகள் ரூ.500 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படும். 2020-2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் குடிமராமத்து திட்டத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.5,000 ஊராட்சி ஒன்றியங்களில் பராமரிப்பில் உள்ள சிறிய பாசன ஏரிகள், கிராம ஊராட்சிகளின் பராமரிப்பில் உள்ள 25 ஆயிரம் குளங்கள் மற்றும் ஊரணிகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக, சிறப்பு ஒதுக்கீடாக 500 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியுள்ளதுடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 750 கோடி ரூபாய் நிதியும் இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தம் உள்ள 30 ஆயிரம் பணிகளில் 21 ஆயிரத்து 444 பணிகள் நிறைவடைந்துள்ளன. 2020-2021 ஆம் ஆண்டில் கிராமங்களில் மீதமுள்ள குளங்கள் மற்றும் ஊரணிகள் ஆழப்படுத்துதல், நகர்ப்புறங்களில் உள்ள கோயில் குளங்கள் புனரமைப்பு ஆகிய பல்வேறு திட்டங்களுக்கான நிதியைக் கொண்டு ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும். இவை நிலத்தடி நீர் அமைப்புகளை செறிவூட்டுவதுடன், மிக அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்ட ஒன்றியங்களில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். 2020-2021-ம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் காவிரி வடிநிலப் பகுதியில் உள்ள கால்வாய்களில் 392 தூர்வாரும் பணிகளை அடுத்த பருவமழைக் காலத்திற்கு முன்னதாக, நிறைவு செய்வதற்காக, 67.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காவிரிப் படுகையில் நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளை விரிவாக்கல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லணை கால்வாய் அமைப்பின் பணிகள், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் 2,298 கோடி ரூபாய் மதிப்பீட்டுடன் மேற்கொள்ளப்படும். 2020-2021 பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கென 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 1,560 கோடி ரூபாய் செலவில் பருவகால மாற்ற தழுவல் திட்டத்தைச் செயல்படுத்தும் பணி காவிரி பாசனப் பகுதியில் முழுவீச்சில் முன்னேற்றமடைந்து வருகிறது. இத்திட்டத்திற்காக 2020-2021 பட்ஜெட்டில் 105.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1,995 கோடி ரூபாய் திட்டச் செலவில் என்.ஆர். உப வடிநிலத்தில் ஏனைய பகுதிகளை இத்திட்டத்தில் இரண்டாம் கட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான கோரிக்கைகளையும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வு செய்து வருகிறது.கட்டளை உயர்மட்ட கால்வாய் பணிக்காக 335.50 கோடி ரூபாயும் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நொய்யல் துணைப்படுகை திட்டம், 184 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ராஜகால்வாய் திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வெள்ள உபரிநீரினை மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தின் வறண்ட குளங்களுக்கு திருப்பி விடுவதற்கான சாரபங்கா நீரேற்று பாசனத் திட்டம் 565 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக 2020-2021 பட்ஜெட்டில் 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 493.25 கோடி ரூபாய் செலவில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர் மற்றும் குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே கதவணை மற்றும் 387.60 கோடி செலவில் திருச்சி மாவட்டம் முக்கொம்பில் புதிய கதவணை கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கான 11 ஆயிரத்து 250 கோடி மதிப்பீட்டிலான முதல்நிலை திட்ட அறிக்கை இந்திய அரசின் நீர்வள ஆதார அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திடத்திற்காக 2020-2021 பட்ஜெட்டில் 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாடு திட்டத்தின் முதல்கட்ட திருத்தச் செலவினம் 703.49 கோடி ரூபாயுடன், 89 அணைகளும் 2 பாசனப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணைகளுக்கான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் ஜூன், 2020 வரை நீட்டிக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 610.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 37 அணைகள் சேர்க்கப்பட்டுள்ளது. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் 2 கட்டங்களுக்கும் சேர்த்து 2020-2021 பட்ஜெட்டில் 220.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் 2,962 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது.
18 உப வடிநில பகுதிகளில், 1,325 குளங்கள் மற்றும் 107 அணைக்கட்டுகளை புனரமைத்தல் மற்றும் 45 செயற்கை செறிவூட்டல் கிணறுகளை நிறுவுதல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 குளங்கள் மற்றும் 2 முதன்மை பாசன கால்வாய்களை சீரமைத்தல் ஆகிய பணிகள் முதல்கட்டமாக 787.19 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் ஜூலை 2023-ல் நிறைவடைய உள்ளது. இரண்டாம் கட்டத்தில் 16 உப வடிநில பகுதிகளில் 906 குளங்கள், மற்றும் 183 அணைக்கட்டுகளை புனரமைத்தல் மற்றும் 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் கட்டுமான பணிகள் 649.55 கோடி செலவில் 2020-2021 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். இதற்காக இந்த பட்ஜெட்டில் 583.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அத்திக்கடவு - அவிநாசி நீர்ப்பாசன திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்காக 2020-2021 பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம், 7,267 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டத்தில் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்படுதல் மற்றும் முதல் நிலைப் பணிகளை மேற்கொள்வதற்காக 2020-2021 பட்ஜெட்டில் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.2014-2015 முதல் 2019-2020 ஆம் ஆண்டு வரை 2,241.19 கோடி மதிப்பீட்டிலான நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய குளங்களை உருவாக்குதல் புதிய அணைக்கட்டுகளை கட்டுதல் மற்றும் புதிய பாசன வாய்க்கால்களை அமைப்பதற்கான 307 பணிகளை செயல்படுத்தியதில் 261 பணிகள் நிறைவடைந்து மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. 2020-2021 பட்ஜெட்டில் நபார்டு உதவியுடன் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த 655.38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.2020-2021 பட்ஜெட்டில் நீர்ப்பாசனத்திற்காக ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தி 6,991.89 கோடி ரூபாயாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.
-
பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
09 Jul 2025விண்ட்ஹோக் : நமீபியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா