எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அதிகாரத்தை தேர்தல் கமிஷனுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.
வாக்காளர் பட்டியலில் போலியாக பெயர் சேர்த்தல் மற்றும் தேர்தல் நேரத்தில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
கடந்த 2015-ம் ஆண்டில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 32 கோடி ஆதார் எண்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. எனவே அந்த பணி உடனடியாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரத்தை தேர்தல் கமிஷனுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. இது குறித்த கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, சட்டத்துறை செயலாளர் நாராயண் ராஜூ உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெற குறிப்பாணை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் சட்டத்துறை மிக தீவிரமாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


