எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகமதாபாத் : அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா - அமெரிக்கா இடையே இன்று ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தெரிவித்தார்.
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் சென்ற அதிபர் டிரம்பிறகு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் மொதேரா மைதானத்தின் நுழைவு வாயிலில் அதிபர் டிரம்பிற்கு ஒட்டகப் படை வரவேற்பும் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி அரங்க மேடையில் அமெரிக்க அதிபரும் பிரதமர் மோடியும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
நமஸ்தே என்று கூறி தனது உரையை துவக்கிய டிரம்ப் பேசியதாவது, இந்திய மக்களை அமெரிக்கா விரும்புகிறது. இந்திய மக்களை அமெரிக்கா மதிக்கிறது. இந்திய மக்களை காண 8000 கி.மீ. பயணித்து வந்துள்ளோம். அமெரிக்கா எப்போதுமே இந்தியாவின் நம்பகமான கூட்டாளியாக இருக்கும். எங்களை வரவேற்க இந்த மைதானத்தில் 1.25 லட்சம் பேர் கூடியுள்ளனர். இந்தியா எங்களுக்கு வழங்கிய விருந்தோம்பலை எப்போதும் மறக்க முடியாது. அமெரிக்கர்களின் மனதில் இன்று முதல் இந்தியா சிறப்பான இடம் பிடித்து விட்டது. டீ விற்பனையாளராக இருந்து நாட்டின் தலைவராகியுள்ளார் மோடி. மோடியை அனைவரும் விரும்புவார்கள் என்பது எனக்கு தெரியும். மோடியை அவ்வளவு சீக்கிரமாக கணிக்க முடியாது, அவர் கடினமானவர். இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் பிரதமர் மோடி.
விவேகானந்தர் போன்ற ஞானிகள் பல நல்ல தத்துவங்களை வழங்கி சென்றுள்ளனர். இந்தியாவின் சாம்பியன், ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடிக்கு நன்றி. இந்தியாவின் ஜனநாயகம் ஆச்சரியப்பட வைக்கும் வகையை சேர்ந்தது. இந்திய வரலாற்றில் மோடி தலைமையில் அனைத்து கிராமங்களும் மின் வசதியை பெற்றுள்ளது. இந்தியா ஒரு பொருளதார சக்தியாக உலக அரங்கில் உருவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து ஏழ்மை விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரமான ஜனநாயக நாடாக திகழ்ந்து வருகிறது. மோடி தலைமையில் இந்தியா உலக அரங்கில் முன்னணி நாடாகியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகளுக்கு ஒரு உதாரணம். இந்தி சினிமாக்கள் மிகவும் கற்பனைத்தன்மையுடன் எடுக்கப்படுகின்றன. கலாச்சாரம் மற்றும் வர்த்தகத்தில் இந்தியா - அமெரிக்கா தனிச்சிறப்பு நாடுகள். விராட் கோலி உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இந்தி சினிமாத்துறை உலக அரங்கில் செழிப்பான ஒன்றாக உள்ளது. உலகம் முழுவதும் இந்தி சினிமாக்கள் விரும்பி பார்க்கப்படுகின்றன. இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என பல மதத்தினர் ஒற்றுமையாக வசிக்கின்றனர். இந்திய மக்களின் ஒற்றுமை அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க கூடியது. மகாத்மா காந்தி ஆசிரமத்திற்கு சென்று வந்ததை பெருமையாக கருதுகிறோம். அமெரிக்க வளர்சிக்கு பங்களிப்பு அளித்து வரும் இந்திய வம்சாவழியினருக்கு நன்றி. இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து பேச உள்ளேன். இந்திய மக்களுக்காக இரவு - பகலாக மோடி உழைத்து வருகிறார். 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் நாளை(இன்று) கையெழுத்தாகிறது. தனிச்சிறப்பு வாய்ந்த ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திற்கு விற்க உள்ளோம். விண்வெளி திட்டங்களிலும் அமெரிக்கா ஒத்துழைப்புடன் செயல்படும். அமெரிக்காவின் மிக முக்கியமான ராணுவ கூட்டாளியாக இந்தியா இருக்க வேண்டும். இந்தியா - அமெரிக்கா நாடுகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறோம். ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவன் பாக்தாதியை அமெரிக்கா அழித்து விட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே அமெரிக்கா வருவதற்கு கட்டுப்பாடுகள் அதிகம். தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம். தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு இந்தியா நல்ல தலைமையை கொண்டுள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் முனைப்பு காட்டி வருகிறேன். பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
டைகர் டிரயல் என்ற பெயரில், இரு நாடுகளின் ராணுவ கூட்டுப்பயிற்சி நடைபெறும். ஏவுகணைகள், ராக்கெட்டுகள், கப்பல் கட்டுவதில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு தரப்படும். மிகச்சிறப்பான வர்த்தக ஒப்பந்தம் இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தாக உள்ளது. இந்தியா - அமெரிக்காவிற்கு நன்மை தரும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் இருக்கும். இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு மிகச்சிறந்த சந்தையாக இந்தியா உள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டங்கள் மிகச்சிறப்பு வாய்ந்தவை. இந்தியா மிகவும் செழுமையான தேசமாக திகழ்கிறது. ஒளிமயமான எதிர்காலத்திற்கு மக்கள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று கூறி தனது உரையை முடித்தார் டிரம்ப்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
2 நாட்களில் முடிவுக்கு வந்த ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி., கிரிக்கெட் வாரியத்திறகு 60.59 கோடி ரூபாய் நஷ்டம்
28 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவுக்கு வந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.60.59கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது
-
தமிழ்நாடு மீனவர்கள் 61 பேரை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்
28 Dec 2025சென்னை, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 61 பேரை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச
-
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கிறது இஸ்ரோ
28 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
-
பா.ஜ.க.-விடம் உண்மை இல்லை: மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
28 Dec 2025டெல்லி, இன்று, பா.ஜ.க.-விடம் அதிகாரம் இருக்கிறது.
-
தமிழகம் முழுவதும் தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4,42,070 பேர் விண்ணப்பம்..!
28 Dec 2025சென்னை, தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4,42,070 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர்.
-
அரசியலில் துணிவோடு செயல்பட்டவர்: விஜயகாந்திற்கு கனிமொழி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, அரசியலில் துணிவோடு செயல்பட்டவர் என்று விஜயகாந்திற்கு கனிமொழி எம்.பி. புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
கவுதம் காம்பீரை நீக்கிவிட்டு இந்திய டெஸ்ட் அணிக்கு மட்டும் புதிய பயிற்சியாளரை நியமிக்கிறது பி.சி.சி.ஐ.?
28 Dec 2025மும்பை, இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு வி.வி.எஸ். லக்ஷ்மணை கொண்டு வர பி.சி.சி.ஐ. ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-12-2025.
29 Dec 2025 -
வெல்லும் தமிழ் பெண்கள் கூடும் மேற்கு மண்டல மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
29 Dec 2025திருப்பூர், வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் தி.மு.க. மகளிர் அணி மேற்கு மண்டல மாநாடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
அன்புமணி புதிய கட்சி தொடங்கட்டும்: பா.ம.க.வின் செயல் தலைவர் பேச்சு
29 Dec 2025சேலம், அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் புதிய கட்சி தொடங்கட்டும் என்று ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தெரிவித்தார்.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜர்
29 Dec 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ . அலுவலகத்தில் த.வெ.க. துணை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூ ஆஜராகினர்.
-
வரும் ஜனவரியில் கேரளா வருகிறார் பிரதமர் மோடி: பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கிறார்
29 Dec 2025திருவனந்தபுரம், வரும் ஜனவரி மாதம் கேரளா வருகை தரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
4-வது நாளாக தொடர்ந்த போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் கைது
29 Dec 2025சென்னை, சென்னையில் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடை நிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
-
பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று பொருளாதார நிபுணர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
29 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
-
பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்..!
29 Dec 2025சேலம், சேலத்தில் நேற்று நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பற்றி பேசியபோது ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
வார தொடக்கத்தில் தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
29 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
3 மீனவர்கள் கைது எதிரொலி: மண்டபத்தில் மீனவர்கள் திடீர் போராட்டம்
29 Dec 2025ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகிறார்: 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
29 Dec 2025ராமேசுவரம், துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகையை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்: உடனே கட்டுக்குள் கொண்டு வர அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
29 Dec 2025சென்னை, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
த.வெ.க. தலைவர் விஜய்யை முதல்வராக ஏற்று கொள்பவர்களுடன்தான் கூட்டணி : செங்கோட்டையன் திட்டவட்டம்
29 Dec 2025கோவை, த.வெ.க தலைவரை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள த.வெ.க.
-
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு
29 Dec 2025சபரிமலை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சமரிமலையில் இன்று முதல் நடை திறக்கப்படுகிறது.
-
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரளாக உற்சாக வரவேற்பு
29 Dec 2025கோவை, தி.மு.க. மகளிர் மாநாட்டுக்காக நேற்று கோவை வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
ரஷ்யாவுடனான போரை நிறுத்துவது தொடா்பான 20 அம்ச ஒப்பந்தத்தில் 90 சதவீதம் உடன்பாடு: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
29 Dec 2025நியூயார்க், அமெரிக்கா வெளியிட்டுள்ள 20 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 90 சதவீதம் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப்புடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு உக்ரைன்
-
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
29 Dec 2025திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
-
கடும் பனிமூட்டம் எதிரொலி: டெல்லியில் 128 விமானங்கள் ரத்து
29 Dec 2025டெல்லி, டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.



