எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கிறைஸ்ட்சர்ச் : இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. சரிவில் இருந்து எழுச்சி பெற்று இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டனர்.
முதலாவது டெஸ்டில் இந்தியாவின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இரண்டு இன்னிங்சிலும் இந்தியா 200 ரன்களை கூட (165 மற்றும் 191 ரன்) தொடவில்லை. மயங்க் அகர்வால், துணை கேப்டன் அஜிங்யா ரஹானே ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆடினர். மற்றவர்கள் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மகுடிக்கு மயங்கும் பாம்பு போல் சரணாகதியானார்கள்.இந்த ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது தான். ஏற்கனவே டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி அச்சுறுத்திய நிலையில் ‘ஷாட்பிட்ச்’ மன்னன் நீல் வாக்னெரும் நியூசிலாந்து அணியுடன் இணைந்துள்ளார்.
இவர்களின் புயல்வேக தாக்குதலுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ஈடுகொடுத்து ஆடுவதை பொறுத்தே ஸ்கோரின் போக்கு அமையும். இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவுக்கு இடதுகால் பாதத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்றுமுன்தினம் அவர் பயிற்சிக்கு வரவில்லை. அவருக்கு பதிலாக சுப்மான் கில் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. பேட்டிங்கை வலுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை நீக்கிவிட்டு, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் யோசிக்கிறது. கேப்டன் விராட் கோலி கடைசியாக ஆடிய 20 சர்வதேச இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கோலியின் தடுமாற்றமும் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இந்திய துணை கேப்டன் ரஹானே நிருபர்களிடம் கூறஉகையில்,
நாம் இன்னும் அதிக ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று சொல்ல மாட்டேன். ஆனால் மனஉறுதியும், தெளிவான மனநிலையும் இருந்தால் போதும். அதுவே உதவிகரமாக இருக்கும். வெலிங்டனில் நடந்ததை நாம் மறக்க வேண்டும். முந்தைய டெஸ்டில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு பாடம் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறோம். அந்த கோணத்தில் தான் பயிற்சியிலும் ஈடுபடுகிறோம். ஆடுகள சீதோஷ்ண நிலை குறித்தே தொடர்ந்து சிந்தித்து கொண்டிருக்கக் கூடாது. அவற்றை தாண்டி அத்தகைய சூழலில் ரன் எடுப்பது எப்படி என்பதை பார்க்க வேண்டும்.இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் ஒவ்வொரு டெஸ்டும் முக்கியமானது.
இங்கு ஒரு டெஸ்டில் நாம் வெற்றி பெற்றாலும் 60 புள்ளிகளை பெற்று சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் வெகுதூரம் முன்னேறி விட முடியும். அதனால் தான் முதலாவது டெஸ்ட் தோல்வியை மறந்து விடுங்கள் என்று சொல்கிறேன். இதே மைதானத்தில் இந்திய ‘ஏ’ அணி கடந்த மாதம் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ஆடியது. அதில் விளையாடிய ஹனுமா விஹாரி (அந்த ஆட்டத்தில் 51 மற்றும் 100 ரன்கள் எடுத்தார்) இந்த ஆடுகளம் வெலிங்டனை விட நன்றாக இருக்கும் என்று எங்களிடம் சொல்லி இருக்கிறார். இந்த ஆடுகளத்தில் வேகமும், பவுன்சும் இருக்கும். முதல் நாளிலேயே ஆடுகளத் தன்மையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப விளையாட வேண்டும்.அஸ்வின், ஜடேஜா இருவரில் யார் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார்கள் என்று கேட்கிறீர்கள். அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருவருமே தரமான சுழற்பந்து வீச்சாளர்கள். யாரை நீக்கினாலும் அது கடினமான முடிவாகத் தான் இருக்கும். இவ்வாறு ரஹானே கூறினார்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை உள்ளூரில் தங்களது ஆதிக்கத்தை நீட்டிப்பதில் தீவிர முனைப்பு காட்டுகிறார்கள். இந்த மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 6 டெஸ்டுகளில் நியூசிலாந்து 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது. இந்த மைதானத்தில் விக்கெட் வேட்டையில் டிரென்ட் பவுல்ட் (37 விக்கெட்), டிம் சவுதி (32 விக்கெட்), நீல் வாக்னெர் (23 விக்கெட்) ஆகியோர் உள்ளனர். இவர்களின் ஜாலம் நீடிக்குமா அல்லது இந்திய பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுக்கும் வகையில் ஆடுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: மயங்க் அகர்வால், சுப்மான் கில் அல்லது பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகமது ஷமி.
நியூசிலாந்து: டாம் லாதம், டாம் பிளன்டெல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங், காலின் டி கிரான்ட்ஹோம், நீல் வாக்னெர், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, கைல் ஜாமிசன் அல்லது அஜாஸ் பட்டேல்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இமானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் மணிமண்டபம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
17 Jan 2026பரமக்குடி, பரமக்குடியில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் மணிமண்டபத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
வாழ்க்கையை ஏழைகளுக்கு அர்ப்பணித்தவர்: எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம்
17 Jan 2026புதுடெல்லி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கையும், முழு அரசியல் பயணமும் ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றும் சமூகத்தின் இளைஞர்களும் பெண்களும் அவரை மிகவும் மதித்தனர் என்றும் பிரதம
-
தமிழகத்தில் 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
17 Jan 2026சென்னை, தமிழகத்தில் 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அடுத்த 2 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு
17 Jan 2026சென்னை, அடுத்த இரு நாட்களுக்குள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தைவிட்டு விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் காணும் பொங்கல் விழா கோலாகலம் சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்
17 Jan 2026சென்னை, காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர்.
-
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தால் ஜனவரி மாத பொருட்களை பிப்ரவரி மாதமும் சேர்த்து வழங்க கோரிக்கை
17 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தால் ஜனவரி மாத ரேஷன் பொருட்களை பெறுவதில் ஏற்பட்ட சிக்கலை அடுத்து அந்த பொருட்களை பிப்ரவரி மாதம் சேர்த்து வழங்க பொதுமக்கள் கோரிக்
-
இதுவரை வாங்காதவர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்: அரசு
17 Jan 2026சென்னை, பொங்கல் பரிசுத்தொகுப்பை இதுவரை வாங்காதவர்கள் திங்கட்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆஸி., ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
17 Jan 2026மெல்போர்ன், ஆண்டின் முதல் கிராண்ட் சிலாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று (18-ந்தேதி) தொடங்குகிறது.
-
தமிழ்நாடு முழுவதும் 2.15 கோடி பேருக்கு 6,453.54 கோடி ரூபாய் பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை: அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்
17 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் 2.15 கோடி பேருக்கு ரூ.6,453.54 கோடி பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உள்ளிட்ட அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி
17 Jan 2026சென்னை, மகளிருக்கு மாதம் ரூ. 2,000, ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து உள்ளிட்ட முதற்கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –17-01-2026
17 Jan 2026 -
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றுமா? இந்தூரில் இன்று இறுதிப்போட்டி
17 Jan 2026சென்னை, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் ரசிகர்கள் இடையே எழுந்துள்ள நிலையில் இன்று இந்தூரில் இறுதிப்போட்டி நடக்கிறது.
-
சாமானியர்களுக்கும் அதிகாரமளித்தவர்: எம்.ஜி.ஆருக்கு விஜய் புகழாரம்
17 Jan 2026சென்னை, மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு சாமானியர்களுக்கும் அதிகாரமளித்தவர் என்று த.வெ.க. தலைவர் விஜய் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
-
கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் : அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
17 Jan 2026சென்னை, கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எ
-
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: போட்டியை நேரில் கண்டுகளித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
17 Jan 2026அலங்காநல்லூர், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நேற்று நேரில் கண்டுகளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்
-
சட்டசபை தேர்தல் அறிக்கையாக அ.தி.மு.க. தி.மு.க. அரசின் பழை திட்டங்களை காப்பியடித்து வெளியிட்டுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்
17 Jan 2026சென்னை, தி.மு.க. அரசின் பழை திட்டங்களை காப்பியடித்து சட்டசபை தேர்தல் அறிக்கையாக அ.இ.அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
-
மராட்டியத்தில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி 116 வார்டுகளில் வெற்றி: மும்பையில் ‘தாக்கரே’வின் ஆதிக்கத்தை தகர்த்த பா.ஜ.க.
17 Jan 2026மும்பை, மராட்டியத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் மும்பையில் 25 ஆண்டுகால ‘தாக்கரே’ ஆதிக்கத்தை பா.ஜ.க. தகர்த்துள்ளது. மேலும் அங்கு பா.ஜ.க.
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்தான் வளர்ச்சி: பிரதமர் மோடி
17 Jan 2026கொல்கத்தா, திரிணமூல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, ஆட்சிக்கு பா.ஜ.க. வந்தால்தான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
-
சத்தீஷ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் படுகொலை
17 Jan 2026ராய்ப்பூர், சத்தீஷ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
-
மேற்கு வங்கம் -அசாம் இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
17 Jan 2026கொல்கத்தா, மேற்கு வங்கத்தின் ஹவ்ரா ரயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலத்தின் கவுகாத்தி காமாக்யா ரயில் நிலையம் வரை இயங்கும் நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சே
-
யு.பி.ஐ. மூலம் இ.பி.எப். நிதியில் இருந்து பணம் எடுக்கும் வசதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்
17 Jan 2026சென்னை, யு.பி.ஐ. மூலம் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் வசதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
-
ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 Jan 2026அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடைப் பராமரிப்புத்துறையில் அரசுப் பணி வழங்கப்படும் என முதல்வர் மு.க.
-
யு-19 உலகக் கோப்பையில் கைகுலுக்க மறுத்த இந்தியா, வங்கதேச அணி கேப்டன்கள்
17 Jan 2026புலவாயோ, இந்தியா - வங்கதேசம் இடையேயான மோதல் வலுத்துவரும் நிலையில், யு-19 உலகக் கோப்பைத் தொடரில் கேப்டன்கள் இருவரும் பரஸ்பரம் கைகுலுக்க மறுத்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளத
-
வார ராசிபலன்
17 Jan 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
17 Jan 2026- நெல்லையப்பர் கோவிலில் ரிசப வாகனம், லட்ச தீபம்.
- தென்காசி விசுவநாதர், சங்கரன்கோவில் சங்கர நாராயணன் கோவில்களில் லட்சதீபம்.


