எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மெல்போர்ன் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
மகளிர் டி20 உலக கோப்பை ஏ பிரிவில் உள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய லீக் போட்டி நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் களம் கண்ட இந்தியாவின் இளம் வீராங்கனை ஷபாலி வெளுத்துக் கட்டி 36 பந்துகளில் 4பவுண்டரி, 3 சிக்சர் விளாசி 46 ரன்னில் ஆட்டமிழந்தார். காயம் காரணமாக ஓய்வில் இருந்து மீண்டும் விளையாட வந்த ஸ்மிரிதி 11, தானியா பாட்டீயா 23, ஜெமீமா ரோட்ரிக்ஸ் 10 என சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ரன் உயர்ந்தபடிதான் இருந்தது.
ஆனால் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 1, வேதா கிருஷ்ணமூர்த்தி 6, தீப்தி சர்மா 8 என குறைந்த ரன்னில் ஆட்டமிழக்க, இந்தியா தடுமாறியது. அதன்பிறகு வந்த ராதா யாதவ் 14, ஷிகா பாண்டே 10 ரன் எடுக்க இந்தியா 20ஓவர் முடிவில் 8விக்கெட் இழப்புக்கு 133ரன் எடுத்தது. அமெலியா கெர், ரோஸ்மேரி மெயர் ஆகியோர் தலா 2, லீ டகுகூ, ஷோபி டெவின், காஸ்பெரேக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து 134ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து களம் கண்டது. தொடக்க வீரர்கள் ரேச்சல் பிரிஸ்ட் 12, கேப்டன் ஷோபி டெவின் 14, சூசி பேட்ஸ் 6ரன் என அடுத்தது ஆட்டமிழந்து இந்தியாவுக்கு மகிழ்ச்சி அளித்தனர்.
ஆனால் மேடி கிரீன் 24, கேத்தி மார்டின் 25 ரன் என வேகம் காட்டியதால் ஆட்டம் நியூசிலாந்து பக்கம் திரும்பியது. கடைசி 2 ஓவரில் நியூசிலாந்துக்கு 12 பந்துகளில் 34 ரன் தேவைப்பட்டது. பூனம் யாதவ் வீசிய 19வது ஓவரில் அமிலியா 4பவுண்டரிகள் உட்பட 18 ரன் சேர்த்தார். அதனால் கடைசி ஓவரில் அந்த அணிக்கு 16 ரன் தேவை என்ற நிலையில் ஷிகா பண்டே பந்து வீசினார். முதல் பந்தில் ஹெய்லி பவுண்டரி விளாசினார். அடுத்த 3 பந்துகளில் ஒவ்வொன்றாக 3 ரன் கிடைத்தது. கடைசி 2 பந்துகளில் 9 ரன் தேவை என்ற நிலையில், 5வது பந்தில் அமெலியா அட்டகாசமாக பவுண்டரி அடித்தார். அதனால் ஒரு பந்தில் 5 ரன் எடுத்தால் வெற்றி என்றானது. எனவே சிக்சர் அடித்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தை சந்தித்தார் அமெலியா. அவர் அடித்த பந்து தரையை தட்டி ஓட ஷிகா அதை பிடித்து ஹெய்லியை ரன் அவுட் செய்தார்.
அதனால் நியூசிலாந்து 20ஓவரில் 6விக்கெட் இழப்புக்கு 129 ரன் மட்டும் எடுக்க, இந்தியா 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் தீப்தி சர்மா, ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ், ராதா யாதவ் என பந்து வீசிய அனைவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். நியூசிலாந்து தரப்பில் அமிலியா கெர் 34*(19பந்து, 6பவுண்டரி), ஹெய்லி ஜென்சன் 11 ரன் எடுத்தனர். தொடர்ச்சியாக ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியின் மூலம் இந்தியா முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
டான் பிராட்மேன் போல... கில்லுக்கு ரவி சாஸ்திரி புகழாரம்
08 Jul 2025மும்பை : 0-1 என பின் தங்கியிருந்த இந்தியாவை டான் பிராட்மேன் போல விளையாடி சுப்மன் கில் தூக்கி நிறுத்தியதாக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
-
3-வது டெஸ்ட் போட்டி: பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும்: கவாஸ்கர்
08 Jul 2025லண்டன் : 3-வது டெஸ்ட் போட்டியில், பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
-
டெக்சாஸ் வெள்ளத்தில் 81 பேர் பலி
08 Jul 2025வாஷிங்டன் : டெக்சாஸ் ஏற்பட்ட வெள்ளத்தில் 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சி.எஸ்.கே. 3-வது இடத்துக்கு சரிந்தது: ஐ.பி.எல். பிராண்ட் மதிப்பில் ஆர்.சி.பி. அணிக்கு முதலிடம்
08 Jul 2025மும்பை : ஆர்.சி.பி. அணியின் பிராண்ட் மதிப்பு 227 மில்லியனாக இருந்து 269 மில்லியனாக அதிகரித்துள்ளது.
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை இறக்குமதி வரிக்கான கால அவகாசத்தை நீட்டித்த அமெரிக்கா
08 Jul 2025வாஷிங்டன் : இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான இறக்குமதி வரி விதிப்பு அமலாகும் கால அவகாசத்தை அமெரிக்க அரசு ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-07-2025.
09 Jul 2025 -
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவில் உற்சாக வரவேற்பு: மேளம் கொட்டி உற்சாகம்
09 Jul 2025விந்தோக், நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு மேளம் கொட்டி பிரதமர் மோடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.
-
ராஜஸ்தானில் கனமழைக்கு திறப்பதற்கு முன்பே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய சாலை
09 Jul 2025ராஜஸ்தான் : ராஜஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், புதிதாக அமைக்கப்பட்ட சாலை திறப்பதற்கு முன்பே அடித்து செல்லப்பட்டது.
-
கணவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார்: ‛கல்லுக்குள் ஈரம்'' நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
09 Jul 2025சென்னை : கணவர் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரை அடுத்து 1980-களில் பிரபலமாக இருந்த நடிகை அருணாவின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
-
ராஜஸ்தானில் பயங்கரம்: இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து - இருவர் பலி
09 Jul 2025ஜெய்பூர் : ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.