எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.31 - சென்னையில் காவல்துறை வாகனத்தை பின்னோக்கி நகர்த்தியதில் பலியானவருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி செய்ய உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:. 25.5.2012 அன்று சென்னை, மெரினா கடற்கரை அருகே உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் துறை வேனை அதன் ஓட்டுநர் பின்னோக்கி நகர்த்தியதில், மரத்தின் கீழ் படுத்துறங்கிய திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் 6-வது தெருவைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் அகால மரணமடைந்த லோகநாதனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இவ்விபத்தில் காலமான லோகநாதன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, கவனக் குறைவாக வாகனத்தை இயக்கி, விபத்து ஏற்படுத்திய, காவல் துறை ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


