எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊரடங்கு கால கட்டத்தில் உணவுப்பொருட்கள் பதுக்கலையும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதையும் தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்தும் வகையில், நமது நாட்டில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 14-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அதை நீட்டிக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசுகள் முறையிட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவால் உணவுப்பொருட்கள், பதுக்கலுக்கும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக கருத்துகள் எழுந்துள்ளன.இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாட்டில் ஊரடங்கு காலகட்டத்தில் வியாபாரிகள் உணவுப் பொருட்களை பதுக்குவதையும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதையும் தடுத்து நிறுத்துங்கள், மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு இதற்கு தேவையான கிரிமினல் நடவடிக்கைகளை எடுங்கள் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி உள்துறை இணைச்செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அத்தியாவசிய பொருட்கள் (உணவு பொருட்கள்) இருப்பு, 21 நாள் ஊரடங்கு அமல் ஆகியவை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஒரு ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்துதான், மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு, உணவுப்பொருட்கள் பதுக்கலையும், அவற்றை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதையும் தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிற உணவுப்பொருட்களுடன் மருந்துப்பொருட்கள் நடமாட்டத்தை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் சேவைகளின் நிலை திருப்திகரமாக உள்ளது. சிவில் விமானப்போக்குவரத்து துறையின் லைப்லைன் உதான் திட்டத்தின்கீழ் செயல்படும் விமானம், 200 டன் சரக்குகளை கொண்டு சென்றுள்ளது. ரெயில்வே 8,897 ரேக்குகளிலும் (கண்டெய்னர்கள்), 4.57 லட்சம் வேகன்களிலும் (பெட்டிகள்) அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் சென்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கின்றன. ஒருபுறம் மக்கள் போக்குவரத்தை நிறுத்தி உள்ளன. இன்னொரு புறம் பரிசோதனை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகின்றன என்று குறிப்பிட்டார். அடுத்த வாரம் தொடர்ச்சியாக பல பண்டிகைகள் வருகிற நிலையில், பண்டிகை காலத்தில் ஊரடங்கை தீவிரமாக கடைப்பிடிக்குமாறு பல்வேறு சமூக தலைவர்கள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ


