எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : எந்த போட்டியாக இருந்தாலும் ரன் குவிப்பது மட்டுமே என் வேலை, இந்திய அணியில் இடம் பெறுவது தேர்வுக் குழுவினரின் முடிவை பொறுத்தது என்று தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக கடந்த ஓராண்டாக இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், அணியில் ‘உள்ளே வெளியே’வந்து போய்க் கொண்டிருக்கிறார். ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல் இணைந்து கலக்கி வருவதால் ஷிகர் தவானின் இடம் கேள்விக் குறியாகி உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதானுடன் சமூக ஊடகமொன்றில் உரையாடிய ஷிகர் தவான் கூறியதாவது:-
விளையாட்டில் காயம் அடைவது சகஜமானது. எனது கவனமெல்லாம் அதிலிருந்து எப்படி மீள்வது என்பதுதான். நான் மீண்டு வந்திருக்கிறேன். ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பதே எனது இலக்கு. அதற்காக என்னை ஆயத்தமாக்கி கொண்டிருக்கிறேன்.
உடல்தகுதியை மேம்படுத்திக் கொள்ள கடுமையாக உழைக்கிறேன். வாய்ப்பு எப்போது கிடைக்கிறதோ, அப்போது விளையாடத் தயாராக இருக்க வேண்டும். அணிக்காக ரன் குவித்து ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சிறந்த வீரனாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு போட்டியிலும் நல்ல தொடக்கத்தை தர உழைக்கிறேன். அதுதான் எனது அணிக்கு நான் அளிக்கும் பங்களிப்பு. கடைசியாக விளையாடிய போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு அரைசதம் அடித்தேன். அதற்கு முந்தைய போட்டிகளில் 30, 40 என்று ரன்கள் எடுத்திருந்தேன். எனது 100 சதவீத உழைப்பின் மூலம் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் ரன் குவிப்பதே என் வேலை.
அதன் பிறகு என்னை அணியில் சேர்ப்பது என்பது தேர்வுக்குழுவில் உள்ள தேர்வாளர்களின் முடிவு. அணி தேர்வு என்பது என் கைகளில் இல்லை. பல வீரர்கள் சிறப்பாக விளையாடுவது நமது அணிக்கு நல்ல விஷயமாகும். ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார்கள். அவர்களின் ஆட்டத்தை சக வீரனாக மறுமுனையில் இருந்து ரசித்தேன். இவ்வாறு தவான் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


