எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் தி.மு.க . எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று மக்கள் விசாரணையில் கூறியது தெரியவந்ததாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று அமைச்சர் காமராஜ் தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது அளித்த செய்தி குறிப்பு வருமாறு:-
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரொக்க உதவித் தொகையாக தலா ரூ. 1000/- வீதம் வழங்க, முதல்வரால் உத்தரவிடப்பட்டு, இதற்காக ரூ. 2014.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 98.85 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ரொக்க உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் முடிய AAY மற்றும் முன்னுரிமை (PHH) அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் விலையில்லாமல் அரிசி வழங்குவதற்கு மத்திய அரசால் ஆணையிடப்பட்டது. எனினும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கூடுதல் அரிசி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னுரிமை அல்லாத (NPHH) குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் முதல் ஜூன் முடிய 3 மாதங்களுக்கு நபர் ஒன்றுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்குவதற்காக முதல்வரால் உத்தரவிடப்பட்டு 438.00 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3 நபர்களுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது அவர்கள் பெற்று வரும் அரிசி இரு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் முடிய அனைத்து 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை 655.63 கோடி ரூபாய் செலவில் வழங்குவதற்கு முதல்வரால் உத்தரவிடப்பட்டு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லாமல் ரேசன் பொருள் வழங்கியது இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான்.
மேற்கண்டவாறு ஏப்ரல் மாதத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவித் தொகையாக ரூ. 1000/- வீதம் வழங்குவதற்கும், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் முடிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கூடுதல் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்குவதற்கும் வழக்கமாக வழங்கப்படும் உணவு மானியத்தைக் காட்டிலும் கூடுதலாக 3,108.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட விலையில்லா பொருட்கள் ஏப்ரல் மாதத்தில் 96.30 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மாதத்தில் நாளது தேதி வரை 90.77 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் வசிக்கும் 845 கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள 2,92,912 குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் நியாய விலைக் கடை பணியாளர்களைக் கொண்டு நேரடியாக சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த அக்டோபர் 2019 முதல் ஏப்ரல் 2020 முடிய உள்ள காலத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்தவர்களில் அங்கீகரிக்கப்பட்டு ஆனால் இதுவரை குடும்ப அட்டை அச்சிட்டு வழங்கப் பெறாமல் உள்ள 71,067 குடும்பங்களுக்கும் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ள ஆணையிட்டுள்ளது. இப்படி நாங்கள் குடும்பம் குடும்பமாக ஏழைகளை தேடி பொருள் வழங்குகிறோம்.
மேலும், கட்டுமான தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த பிற மாநில தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் அமைப்பு சாரா ஆட்டோ தொழிலாளர்கள் என 22,76,936 தொழிலாளர்களுக்கு தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பும் மற்றும் குடும்ப அட்டை இல்லாத 4,022 திருநங்கைகளுக்கு 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பும் வழங்க முதல்வரால் உத்தரவிடப்பட்டு மொத்தம் 144 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டுள்ளது. இப்படி வழங்கிய மாநிலம் இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான்.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தைச் சேர்ந்த 25,98,000 உறுப்பினர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 1,000 ரூபாய் வீதம் 2 மாதங்களுக்கு ரொக்க உதவித் தொகை வழங்க முதல்வரால் உத்தரவிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அம்மா உணவகங்கள் மூலமும், சமுதாய உணவுக் கூடங்கள் மூலமும், ஏழை எளிய மக்களின் பசிப்பிணியை போக்கும் வகையில் உணவு வழங்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் எந்தவொரு நபருக்கும் உணவுப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்நிலையில், கடந்த 13.05.2020 அன்று டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. மக்களவை உறுப்பினர்கள் 4 பேர் தலைமைச் செயலளாரை சந்தித்து, திராவிட முன்னேற்ற கழகத் தலைவரின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின்கீழ் பல லட்சம் மனுக்கள் பெறப்பட்டதாகவும், அதில் 15 லட்சம் பேருக்கு உணவு, உடை உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றி விட்டதாகவும், மீதமுள்ள ஒரு லட்சம் மனுக்களை எங்களால் செய்ய முடியாதவை, அரசு மட்டுமே செய்யக்கூடிய கோரிக்கைகளான சிறு, குறு தொழில் நிறுவனங்களை திறக்க வேண்டும், போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுக்கள் மட்டுமே உள்ளன. இதனை உடனே செய்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். மேற்கண்ட தி.மு.க மக்களவை உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 98,752. மேற்கண்ட மனுக்கள் அனைத்தையும் தலைமைச் செயலாளர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு விசாரணைக்கு அனுப்பி வைத்து விட்டார். மேற்கண்ட மனுக்களை ஆய்வு செய்த போது 98,752 மனுக்களில் ஒரு மனு கூட இவர்கள் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளான, MSME மற்றும் போக்குவரத்து வசதி உள்ளிட்ட ஒரு கோரிக்கை கூட இடம்பெறவில்லை, அனைத்து மனுக்களிலும் Dry Ration என்ற உணவுப் பொருள் சம்மந்தப்பட்டதாக இருந்து உள்ளது. எனவே, அந்த மனுக்களை அனைத்தையும் சம்மந்தப்பட்ட துறையான உணவு மற்றும் கூட்டுறவு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பேரில் மனுவில் குறிப்பிட்ட முகவரியில் வசிப்பவர்களிடம் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் விசாரணை நடத்தியதில், அரசால் வழங்கப்பட்ட ரொக்க உதவித் தொகை, விலையில்லா அரிசி, கூடுதல் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகிய அனைத்தையும் தாங்கள் பெற்றுக் கொண்டு விட்டதாகத்தான் தெரிவித்துள்ளார்கள். மேலும், சிலர் தங்களுக்கு தி.மு.க உதவிகள் செய்து கொடுப்பதாகக் கூறி மனுக்களில் கையொப்பம் பெற்றும், அலைபேசி மூலம் தகவல் பதிவு செய்ய சொல்லி கேட்டுக் கொண்டதால், இதைபோல் நாங்கள் மனுக்கள் அளித்ததாகவும், ஆனால் இதுவரை தி.மு.க ஒன்றிணைவோம் திட்டத்தின்கீழ் எங்களுக்கு எந்த உதவியும் செய்யாமல், எங்களுக்கு உதவி செய்து கொண்டு இருக்கக்கூடிய அரசிடமே மனுக்களை அளித்துள்ளார்கள் என்பதை தெரிவித்துள்ளார்கள்.
மேற்கண்ட வகைகளில் எல்லாம் மக்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த உண்மையை திசை திருப்பும் வகையில் டி.ஆர். பாலு தலைமையிலான எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவினர், மக்களிடம் அம்மாவின் அரசு பெற்றுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடும் தவறான செய்திகளை மக்களிடையே பரப்ப முயற்சிக்கிறார்கள் என்பது ஊர்ஜிதமாகிறது. எனவே, கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின், அம்மாவின் நல்லாசியோடு முதல்வரின் உறுதியான தொடர் நடவடிக்கைகளின் மூலமாக, மக்களுடைய அன்றாட தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க.வின் இதுபோன்ற மலிவான அரசியல் மக்களிடம் எடுபடாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டார் ஐ.சி.சி. நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்
18 Sep 2025அபுதாபி: ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐ.சி.சி.
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
தலைவர்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்: த.வெ.க.வுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
18 Sep 2025சென்னை, த.வெ.க. பரப்புரைக்கு அனுமதி வழங்கக்கோரி வழக்கில் தலைவராக இருப்பவர்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.